Wednesday, December 29, 2010

கையாலாகாத கடவுள்கள்


கான்பூர், ஜன. 11- உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பழைமையான கோயிலில் இருந்து 8 சாமி சிலைகள் கொள்ளை யடிக்கப்பட்டன.

உ.பி. மாநிலம் கான்பூரில் உள்ள பித்தூர் பகுதியில் பழைமை வாய்ந்த ராம் ஜானகி கோயில் உள்ளது. இந்த கோயிலின் தலைமை பூசாரி விஷ்ணு பிரசாத் சம்பவத்தன்று கோயிலின் கதவைத் திறந்தபோது, கோயி லில் இருந்த 8 சிலைகள் காணா மல் போயிருப்பது கண்டு திடுக்கிட்டார்.

உடனடியாக, கோயில் நிருவாகிகளுக்கும் காவல்துறையினருக்கு பூசாரி தகவல் கொடுத்தார். காவல் துறையினர் கோயிலுக்கு வந்து மோப்ப நாய்களின் உதவியு டன் ஆய்வு மேற்கொண் டனர்.

கொள்ளையடிக்கப்பட்ட 8 சிலைகளில் ராமர், சீதை, லட்சுமணர் ஆகிய சிலைகள் அஷ்டதாது எனப்படும் 8 வித உலோகங்களால் செய்யப் பட்டவை. சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் விரை வில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்றும் கான்பூர் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் லால் பகதூர் தெரிவித்தார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...