Monday, December 28, 2009

ஒற்றுமை முழக்கம்


ஒற்றுமை முழக்கம்

   கவிஞர் கலி. பூங்குன்றன் 
பொதுச் செயலளார், 
திராவிடர் கழகம்


திராவிடர் கழகத்திற்கு பகுத்தறிவுக் கொள்-கைகள் உண்டு; பார்ப்பன ஆதிக்கப் பண்-பாட்டுப் படையெடுப்பை முற்றிலும் எதிர்க்கும் நேர் கொண்ட பார்வையுண்டு.

பெண்ணுரிமை என்பது ஆண்களுக்கு நிகராக அனைத்துத் தடங்களிலும் தேவை என்பதில் சமரசத்துக்கு இங்கு இடம் இல்லை.

சமதர்மம், சமத்துவம், இழைந்தோடும் வருண, வருக்கப் பேதமற்ற ஒப்புரவு சமூகப் படைப்பு என்பது இதன் இலட்சியம்.

அரசியலில் இன்னார் இனியார் என்ற பேதமின்றி, தமிழர் நலன் என்ற எடை தட்டு-தான் அதை நிர்ணயிக்கும்.

தமிழர்களின் ஒற்றுமையைக் கட்டுவதில் கழகத்திற்கு எப்பொழுதுமே முதல் இடம் உண்டு.

தி.மு.க. பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் தனிக் கழகம் காண முயன்றபோது தந்தை பெரியார் தடுத்தாட் கொண்டார்; எம்.ஜி.ஆர். அவர்களை அழைத்தும் பேசினார். தலைக்கு மேல் போயிற்று, தந்தை பெரியார் என் செய்ய!
கலைஞர் அவர்களுக்கும், டாக்டர் நாவலர் அவர்களுக்கும் கருத்துராய்வு ஏற்பட்ட நேரத்தில் அன்னை மணியம்மையார் அவர்கள் இரு-வரையும் அழைத்துப் பேசிய சந்தர்ப்பமும் உண்டு.

தி.மு.க. அ.தி.மு.க. இணைப்புக்கு உரத்த முறையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் முயற்சித்த-துண்டு, எம்.ஜி.ஆர். அவர்களின் தோட்டத்-திற்கே சென்று கலந்துறவாடினார்.

1) கழகத்தின் பெயர் தி.மு.க.வாகவே இருக்க வேண்டும்.

2) கொடியில் அண்ணா படம் இருப்பதை ஏற்றுக் கொள்ளலாம்.

3) எம்.ஜி.ஆர். அவர்களே முதல் அமைச்சராகத் தொடரட்டும்; கலைஞர் கட்சியின் தலைவராகட்டும் என்கிற அளவுக்கு இணைந்து வந்தபோது, வெண்ணெய்த் திரண்டு வந்த நேரத்தில் தாழியை உடைத்த தம்பிரான்கள் உண்டு.

இணையதான் வேண்டாம்; காங்கிரசுடன் கூட்டுச் சேர்வதைவிட - _ கலாச்சாரக் கொள்கை _ தமிழர் இனவுணர்வு என்னும் தடத்தில் இரு கட்சிகளும் கூட்டு சேர்ந்தால் என்ன என்ற ஒரு சிந்தனையைத் தூவியவர் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.

1980 பிப்ரவரியில் அப்படியொரு, சிந்தனை-யோட்டம்! தேவி இதழுக்கு வெளிப்படையாகப் பேட்டியே கொடுத்தார்.

கேள்வி: தி.மு.க. அ.தி.மு.க.வை ஒன்று சேர்க்க தமிழினப்பற்று கொண்ட தாங்களும், கி.ஆ.பெ. போன்ற பெரியவர்களும் முயற்சி செய்வீர்களா?

வீரமணி பதில்: எனக்கு அந்தத் தகுதி இருக்கிறதோ இல்லையோ. ஆசையிருக்கிறது _ பெரும்பான்மையான தமிழர்களைப் போலவே! எட்டு ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக இருந்த குடும்பம்தானே அது என்று தன் உள்ளக்கிடக்-கையை வெளிப்படுத்தினார், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1984 இல் மீண்டும் இதேபோல ஒரு சிந்-தனை திராவிடர் கழகப் பொதுச் செயலாளரிடம்.

11.11.1984 _ நாள் ஏடுகளில் ஒரு செய்தி வெளிவந்தது. அ.தி.மு.க. _ காங்கிரஸ் கூட்டு உறுதியென்றும், மக்களவைத் தேர்தலில் 40 இடங்களில் (புதுவையயும் சேர்த்து) மூன்றில் இரு பங்கு இடங்கள் காங்கிரசுக்கென்றும் - தகவல்கள் கசிந்தன.

நாவலர் இரா. நெடுஞ்செழியன் டெல்லி சென்றார் பிரதமர் இந்திரா காந்தியை இரு முறை சந்தித்தார்.

அந்த நேரத்தில் திராவிடர் கழகம் எடுத்த நிலை என்ன?

நாடாளுமன்றத் தேர்தலில் இ. காங்கிரசுக்கு மூன்றில் இரண்டு பங்கினைத் தாரை வார்த்து அரிசியும், உமியும் கலந்து ஊதி ஊதித் தின்னும் கேலிக் கூத்தான முயற்சிக்குப் பதில் அ.தி.மு.க.-வின் அமைச்சர்களும், தோழர்களும், பொறுப்-பாளர்களும் துணிந்து முடிவுக்கு வந்து திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஒரு தொகுதி உடன்-பாடு செய்து கொண்டு, தமிழ்நாட்டின் பிரதிநிதி-களாக பெரும்பாலும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய-வர்களே வரக்கூடிய நல்வாய்ப்பினை உருவாக்-கினால், அது எதிர்காலத்தில் இரண்டு கழகங்-களுக்குமே சிறப்பானதாகவும், தமிழ்நாட்டின் நலனைக் காப்பாற்றுவதாகவும் ஆகும்.

கொள்கை உடன்பாடு இல்லாத காங்கிர-சோடு கூட்டு சேரத் தயாராக இருக்கும்போது, ஒரே கொள்கை, ஒரே பாரம்பரியம் உள்ள இயக்கத்தின் இரு வேறு கூறுகளில் உள்ளவர்கள் ஒன்றாக இணைய முன் வராவிட்டாலும்கூட இந்தத் தொகுதி உடன்பாடு போன்ற குறைந்த-பட்ச பணியையாவது செய்ய முன் வரக்-கூடாதா?...

இப்போது திராவிட இயக்கங்களுக்கு ஏற்-பட்டுள்ள சோதனைகளை வெல்ல வேண்டு-மானால், ஊடுருவல்களைத் தடுக்க வேண்டு-மானால், பிரித்தாளும் பகைவர்களுக்குப் பலி-யாகாமல் புதிய திடமான முடிவை எடுக்க வேண்டும்.......

அரசியலுக்கு அப்பாற்பட்ட பல பெரியவர்-கள்- _ விவரம் தெரிந்தவர்கள் ஆசை இதுதான்! அறிவுரையும் எல்லோருக்கும் இதுதான்! எனவே அடுத்த தேர்தல் பற்றி மட்டும் சிந்திக்கின்ற அரசியல் கட்சிகளாக இல்லாமல், அடுத்த தலைமுறை பற்றி மட்டும் சிந்திக்கின்ற பொது நலவாதிகளாக இரண்டு அணி சகோதரர்களும் இருக்க முன்வர வேண்டும் என்று தாய்க் கழகத்தின் பாசத்-தோடு, பரிவோடு, கவலையோடு இதை ஒரு பிரார்த்-தனை வேண்டுகோளாக முன் வைக்கிறோம், துணிச்சலுடன் எதிர்காலம் கருதி நல்லமுடிவு எடுங்கள்
தமிழின மக்கள் பேராதரவு என்ற குடை உங்களுக்குத்தானே வந்து நிற்கும் என்று இன்றைக்கு கால் நூற்றாண்டுகளுக்குமுன் தனது 54 ஆம் அகவையிலே எடுத்து வைத்த இனமானச் சிந்தனைத் தலைவராக விளங்-கியவர்-தான்- _ இன்றைய தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள். அந்தச் சிந்தனை அவரை விட்டு அகன்றதில்லை திராவிட பார்முலா என்ற ஒன்றைக்கூட அறிமுகப்படுத்-தினார்.

1993 அக்டோபரில் தி.மு.க.வில் மற்றொரு பிளவு வை. கோபால்சாமி அவர்களை மய்யப்படுத்திய பிளவு; அது.

உடல் நலம் நலிவுற்றிருந்த நிலையிலும் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் ஓடோடிச் சென்று வைகோவைச் சந்தித்து சமரசம் செய்கிறார். திமுக தலைவர் கலைஞர்அவர்களிடம் வேண்டுகோள்களை முன் வைத்தார். எல்லோரையும்விட இயக்கம் முக்கியம்; இயக்கத்தைவிட (மக்கள்) இனம் முக்கியம். எத்தரப்பிலும் ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாசிகள்பற்றி மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று பதறப் பதற வேண்டுகோள் விடுத்தார். (விடுதலை 9.10.1993)

பரஸ்பர குற்றச்சாற்றுகள் மற்றும் பதில்கள் இவைகளுக்கு இதுவா நேரம்? திராவிடர் கழகம் தி.மு.க.வின் தாய்க் கழகம் என்ற பாசத்துடன் எப்போதும் பிரச்சினையை அணுகும் உரிமை நமக்கு உண்டு என்பதாலும், மற்றவரைவிட லட்சியத்தில் மிகவும் அருகில் உள்ள தமிழ் இனவுணர்வு பாசறை அது என்பதாலும் அதற்கு ஏற்படும் சங்கடமும் நமக்கு ஏற்படும் சங்கடம் என்று தாய்க் கழகத்தின் தசை ஆடியதை, குருதிக் கொத்தளித்ததை இந்த எழுத்துகள் மூலம் வெளிப்படுத்தினார்; தமிழர் தலைவர் என்பதற்கு பொருத்தமான நம் தலைவர் கண்ணியக் குறைவாகப் பேசுவது, கொடும்பாவிகளைக் கொளுத்துவது - _ இவற்றைக் கைவிடுங்கள், கை-விடுங்கள் என்று கண்ணீர் மல்க அறிக்-கைவிட்டார்.

தந்தை பெரியார் அவர்கள் சிந்தனை ஊற்றில் பூத்த மலர் அல்லவா - _ அதனால் தான் அந்தப் பதைபதைப்பும் இனமானத் துடிதுடிப்பும்!

உறவுள்ள ஒர் இயக்கம் உரிமையோடு கேட்கிறது என்ற நிலையை முக்கியமான இடங்-களில் எல்லாம் எடுத்தவர் இவர்.

1997 ஜூலை தென் மாவட்டங்களில் முக்குலத்தோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் ஜாதிக் கலவரம் கொலைகள், தீயிடல்கள், சூறை-யாடல்கள் என்று மனிதத் தன்மைக்கு எதிரான கோரத்தாண்டவங்கள்.
அந்தக் கால கட்டத்திலும் கம்பீரமாகக் குரல் கொடுத்தவர் ஆசிரியர்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர்கள் ஆனாலும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தவர்கள் ஆனாலும் நாம் அனைவரும் ஒரு மண்ணின் மைந்தர்கள் என்ற உணர்வினை ஊட்டியாக வேண்டும். கிராமங்களில் தோற்றுவிக்கப்பட்ட பகை உணர்ச்சிப் பேயை விரட்டியாக வேண்டும் (விடுதலை 20.7.1997) என்று அறிக்கை வெளியிட்டார்.
அத்துடன் நிற்கவில்லை அதனோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கவும் இல்லை.

நமது இயக்கம் _ திராவிடர் கழகம்கூட இந்த இரு சாராரின் பிரச்சினைகளையும், பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து, தக்க சமரசம் கண்டு, அனைத்து மக்களையும் காப்பாற்ற என்றென்றும் சித்தமாக உள்ளது. எங்களுக்கு ஓட்டு அரசியல், பதவி அரசியல் கண்ணோட்டம் இல்லை. எனவே எந்த சந்தேகப் பார்வையும் இன்றி இரு சகோதரர்களும் ஒப்புக் கொண்டால், நாங்கள் என்றென்றும் அதற்குத் தயாராக உள்ளோம்.

எங்களின் உள்ளத்தில் வடியும் இரத்தக் கண்ணீரை அதன் மூலம் துடைத்துக் கொண்ட ஆறுதல் எங்களுக்குக் கிடைக்கும் என்பதைத் தவிர எங்களுக்கு இதனால் வேறு சுயநலம் லாபம் இல்லை! சகோதரர்களே, தாராள மனதுடன் முன் வாருங்கள் என்று இருகரம் நீட்டினாரே!

முசுலிம்லீக் அமைப்பில் நாவலர் அப்துல் சமது அவர்களுக்கும், பன்மொழி புலவர் அப்துல் லத்திப் அவர்களுக்குப் பிளவு ஏற்பட்ட அமைப்பும் இரண்டாகச் சிதறிய தருணத்தில் தொடக்க முதல் அதனை இணைத்து வைக்க இன்முகம் காட்டியவரும் மானமிகு வீரமணி அவர்களே!

இணைப்பு ஏற்பட்ட நிலையில், அப்துல் சமது அவர்கள் முதலில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்ததும் தமிழர் தலைவர் அவர்களிடத்தில்தான்.

அரசியலைத் தூக்கி எறிந்து தமிழர் ஒற்றுமை என்னும் பதாகையைத் தூக்கிப் பிடித்து தமிழா இனவுணர்வு கொள்! தமிழா தமிழனாக இரு! என்ற முழக்கங்களை மூச்சு உள்ளவரை முழங்கும் ஒரே தலைவர் _ தந்தை பெரியார் வழி வந்த தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களே!

பகுத்தறிவுப் பாதையில் திராவிடர் கழகத்தின் இன்னொரு பக்கம் பயணம் செயல் பணி என்பதும் இதுவே ! அதனை தந்தை பெரியார் வழியில் தமிழர் தலைவர் வீரமணி மிகச் சரியாகவே செய்துவருகிறார்.                             

பத்திரிகைகளின் பார்வையில் நம் ஆசிரியர்





கல்கியின் கருத்து

கழகப் பொதுச் செயலாளர் அவர்களைப் பற்றி கல்கி ஏடு (24.6.1979) குளோஸ் அப் என்ற பகுதியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறது.

திரு. கி. வீரமணியிடம் சிகரெட் உட்பட எந்த வேண்டாத பழக்கமும் கிடையாது. எப்போதாவது பார்க்கும் ஆங்கில அறிவியல் படங்களைத் தவிர, சினிமா பார்ப்பதும் கிடையாது. ஈ.வெ.ரா. பெரியாரின் சுயமரியாதைப் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டு அதிகாரப் பூர்வமாய்ச் சேலம் மாவட்டத்தில் 1944இல் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது திரு. வீரமணி பத்து வயதுச் சிறுவன்.


இப்போது திராவிடர் கழகப் பொதுச் செயலாளர். மாணவப் பருவத்தில் எந்த வகுப்பிலும் முதல் அல்லது இரண்டாவது நிலையிலேயே இருப்பாராம். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ., ஆனர்ஸ் படிப்பில் சேருவதற்கு, முதல் பருவக் கட்டணம் கட்டப் பொருளாதார வசதி இல்லை. 

மிகவும் தயக்கத்துடன் பெரியாருக்கு உதவி கேட்டுக் கடிதம் எழுதினார். எங்கோ சுற்றுப் பயணத்திலிருந்த பெரியார் குறிப்பிட்ட நாளில் பணம் கிடைப்பதற்காகத் தந்தி மணியார்டரில் ரூ. 95 அனுப்பினார். பின்னர், தேர்வில் முதலாவதாய்த் தேறித் தங்கப் பதக்கத்துடன் அய்யாவிடம் சென்று, நன்றி சொல்லப் போனபோது பெரியார் கூறியது; அப்படியா? நான் பணம் அனுப்பிச்சேனா? இருக்கலாம். மறந்து போச்சு.

இவ்வாறு கல்கி ஏடு எழுதியிருக்கிறது.


- விடுதலை, 24.6.1979

கீதையின் மறுபக்கம் நூல் பற்றி தினமனி

கி.வீரமணி எழுதிய இந்நூல் இருபது அத்தியாயங்களையும், ஏழு பின்னிணைப்பு-களையும் கொண்டுள்ளது. பாரதம் நடந்த கதையா? கீதை ஒரு கொலை நூல்தான். கிருஷ்ணன் ஒரு கபட வேடதாரி, கீதையின் முரண்பாடுகள், விநோதக் கருத்துகள் முதலிய தலைப்புகளையும் உள்ளடக்கியது.

இராமாயணம் என்ற காப்பியம் மகா-பாரதத்திற்குப் பின் வந்தது (பாகம் 17) என்றும், ஒரே மூலமான கீதையிலிருந்து பலர், பலவகையான போதனைகளைப் பெற்றதன் காரணம் அதிலுள்ள கருத்துகள் நம்ப-முடியாத அளவிற்கு முரண்பட்டவை என்பது-தான் (பக்.40) என்றும், பக்தி நெறியை இந்து மதம் பவுத்தத்திலிருந்து எடுத்துக்-கொண்டது (பக்.57) என்றும், ஆத்மா என்-றொன்று இல்லை (பக்கங்கள் 116.131) என்றும். ஒரு புதிய புராணத்தை இயற்றுகிற யாரும் வியாசர் என்ற பெயரால் அழைக்கப்படு-வ-துண்டு (பக்.226) என்றும் பல கருத்துகள் இந்-நூலில் இடம் பெறுகின்றன.

ஆன்மீகக் கருத்துகளை ஒட்டி, தொன்று-தொட்டு இருதரப்பு வாதங்களும் இருந்து-கொண்டே வந்திருக்கின்றன. இவை மேலும் தொடர்ந்து கொண்டு தானிருக்கும். சில சமயம் ஒரே கட்சியைச் சார்ந்தவர்களுக்-குள்-ளும் கூட சில விஷயங்களில் கருத்து வேறு-பாடுகள் எழுவதைப் பார்க்கலாம். இவர்-களுக்குப் பின் வருபவர்கள் இந்தக் கருத்-துகளை விரிவாக வாதம் செய்து. அவரவர்-கள் கருத்துகளையும் தருவார்கள். இந்த முறை-யில் தான் அறிவு வளர்ச்சி பெறுகிறது.

இந்த ஆய்வு நூலின் ஆசிரியர் பல மேற்-கோள்களையும், ஆராய்ச்சியாளர்கள் கூற்று-களையும், அறிஞர் பெருமக்களின் கருத்து-களையும் ஆதாரமாகக் காட்டி. சிந்தனைக்-குரிய பல கேள்விகளையும் கருத்துகளையும் மக்கள் முன் வைத்துள்ளார். அவரது முயற்சி பாராட்டத்தக்கது.

சி. இராமகிருஷ்ணன்
தினமணி விமர்சனம். 
8.10.1998


சாவியின் பார்வையில்

கருப்புச் சட்டை அணிந்து கொண்டு இவர் நாத்திகவாதம் பேசுவதைக் கேட்டால், பலர் காதை மூடிக் கொள்வார்கள். இன்னும் பலர் துடிப்பார்கள். நாராயணா இதை எல்லாம் கேட்டுக் கொண்டு உயிரோடு இருக்க வேண்டுமா? என்றும் சிலர் வருத்தப்படுவார்கள்.

ஆனால், அதே வீரமணியைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பழகினால் _ தர்ம சாஸ்திரங்கள் ஒரு நல்லவனைப் பற்றி எப்படி எல்லாம் சித்திரிக்குமோ, அப்படிக் காட்சி தருவார்.

பண்புப் பழமாய்க் கனிந்திருக்கும்! பேச்சு நெய்யாய் உருகி நிற்கும்! நாகரிகம் இதம் பதமாய் இருக்கும்!

சின்னஞ்சிறு வயதில் மேடையில் ஸ்டூல் போட்டு ஏறி நின்று பேசிப் பழகினார். இப்போது எந்த மேடையிலும் இவர் பேச்சின் உயரத்துக்கு யாரும் வர முடிவதில்லை.

கொள்கையில் சிங்கம்; குணத்தில் தங்கம்.

(சாவி, 31.3.1985 இதழ்)

THE HINDU

தமிழர் தலைவர் பற்றி இந்து ஏட்டின் கனிப்பு


There is Justifiable euphoria in the AIADMK the Tamil Nadu Reservation Bill, which will now become an Act, but keen observers feel that the ordeals for the AIADMK Government are not yet over, in securing the interests of the backward classes on a firm basis.

The General Secretary of the Dravidar Kazhagam, Mr.K. Veeramani alone, these observers say, seems to have sensed the imminent dangers which has made him stress the need to remain wary about the next moves of the anti-reservationists while all other parties had generally welcomed the Presidential assent, and urged for a consitutional amendment to get a permanent protection.

தமிழ்நாடு இடஒதுக்கீடு மசோதா-வுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தது பற்றி அ.இ.அ.தி.மு.க.வில் நியாயமான மனநிறைவோடு கூடிய மகிழ்ச்சி நிலவுகிறது. இப்பொழுது அது சட்டமாகிறது. ஆனால், பிற்படுத்-தப்-பட்ட வகுப்-பாரின் நலன்களைப் பெறுவதில், அ.இ.அ.தி.மு.க.-அரசின் இடர்-நிறைந்த முயற்சிகள் முடிந்துவிட-வில்லை எனக் கூர்மையான நோக்கர்கள் கருது-கிறார்கள்.

மற்ற கட்சிகள் எல்லாம் பொதுவாகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை வர-வேற்றுள்ள நிலையில், திராவிடர் கழகப் பொதுச் செய-லாளர் திரு கி.வீரமணி மட்டும் வரக்கூடிய ஆபத்தை உணாந் துள்ளார் என்றும், அதன் காரணமாக இடஒதுக்-கீட்டிற்கு எதிரானவர்களின் அடுத்த நட--வடிக்கை குறித்து எச்சரிக்-கையாக இருக்க-வேண்டும் என்றும், அதை முறியடித்து நிலை-யான பாதுகாப்புப் பெறுவதற்கு அரசமைப்புச் சட்டத் திருத்தம் ஒன்று கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் இந்த நோக்கர்கள் கூறுகிறார்கள்.

நன்றி: தி இந்து, 23 ஜூலை 1994

Thursday, December 24, 2009

பார்ப்பன வீடுகளில் பெண்கள் பெரியார் படத்தை வைக்கவேண்டும்!


பார்ப்பன வீடுகளில் பெண்கள் பெரியார் படத்தை வைக்கவேண்டும்! பெரியார், அண்ணா ஜெயலலிதாவுக்கு அரசியல் வியாபார லேபிள்
ஆசிரியருக்கும், கலைஞருக்கும் - பெரியார் அண்ணா குருதி ஓட்டத்தில் கலந்தது!

சென்னை, செப். 24_ பார்ப்பனப் பெண்கள் தங்கள் வீடுகளில் பெரியார் படத்தை மாட்டி வைக்க வேண்டு-மென்று பேராசிரியர் சுப.வீர-பாண்-டியன் பேசினார். ஜெயலலிதாவுக்கு அரசியல் வியாபாரம் நடத்தி அண்ணா, பெரியார் பெயரை லேபிளாகப் பயன்படுத்துகிறார். ஆசிரியர் அவர்களுக்கும், கலைஞர் அவர்களுக்கும் பெரியார், அண்ணா என்பது அவர்-களுடைய குருதி ஓட்டத்தில் கலந்த ஒன்று என்று உயர்கல்வித் துறை அமைச்-சர் க.பொன்முடி கூறினார்.
தென்சென்னை மாவட்ட தி.க. சார்பில் திருவல்லிக்கேணியில் 18.9.2009 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சுப.வீரபாண்டியன்
இந்நிகழ்ச்சியில் திராவிட இயக்கத் தமிழர்-பேரவை பொதுச் செய-லாளர் சுப.வீரபாண்டி-யன் ஆற்றிய உரை வருமாறு:
இங்கே நமது திராவிடர் கழக பொதுச் செய-லாளர் கவிஞர் கலி.-பூங்குன்றன் அவர்கள் பேசும்பொழுது இந்த திருவல்லிக்கேணி பகுதி திராவிட இயக்க முதல்-விதை விதைத்த மண் என்று குறிப்பிட்டுச் சொன்னார்கள். செப்டம்-பர் மாதம் என்று சொன்-னால் அது தந்தை பெரி-யார் பிறந்த நாளான செப். 17ஆம் தேதியும், செப். 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் என்பதுதான். நமக்கு ஞாபகம் வரும்.
செப்டம்பர் 5ஆம் தேதி
செப்டம்பர் 5ஆம் தேதி என்றால் அது டாக்டர் ராதாகிருஷ்-ணன் பிறந்த நாள். அது ஒரு முக்கிய நாள் என்று அதைத்தான் சொல்வார்-கள். தெரிந்தே நான் இதை விட்டுவிட்டேன். அதற்குக் காரணம் உண்டு. செப்டம்பர் 5ஆம் தேதி என்பது செக்கிழுத்த செம்மல் தியாகி வ.உ.சி. பிறந்தநாள் என்பதை மறைத்துவிடுகிறார்கள், அவர்கள் _ பார்ப்பனர்-கள் என்பதை நாம் அறியாதவர்கள் அல்லர். திருத்தணியில் பார்ப்பன குலத்தில் பிறந்தவர் டாக்-டர் ராதாகிருஷ்-ணன். தூத்துக்குடியில் சூத்திர-னாகப் பிறந்தவர் வ.உ.-சிதம்பரனார் என்பது-தான் அதற்குக் காரணம்.
பார்ப்பனர் வீட்டில் பெரியார் படம்
நம் இனத்திற்காகவும், தமிழினத்திற்காகவும், உலக மனிதநேயத்-திற்-காகவும் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்கள் எடுத்-துவைத்த அத்துணை கருத்துகளையும் இன்-றைக்கு உலகத்தில் உள்-ளோர் உணரத் தொடங்-கி-யிருக்கிறார்கள்.
தந்தை பெரியார் உலகில் உள்ள மக்கள் சமத்துவத்துடன் வாழ-வேண்டும் என்பதற்காக பாடுபட்டார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்-திற்காகப் பாடுபட்டவர்.
பார்ப்பன பெண்கள் மொட்டை அடித்து மூலையில் உட்கார வைக்-கப்பட்ட நிலைகளை எல்-லாம் அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அந்தப் பார்ப்பன பெண்-களுக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார். எனவே, ஒவ்-வொரு பார்ப்பன பெண்-களும் அவரவர்களுடைய வீட்டில் தந்தை பெரியார் அவர்களுடைய படத்தை மாட்டி வைக்க வேண்டும்.
நவீன இந்துத்துவா
டபுள்யு.ஏ.வில்கின்சன் என்பவர் நவீன இந்துத்-துவா என்ற ஒரு நூலை எழுதியிருக்கின்றார். அந்த நூலை நான் தற்-பொழுது படித்துக்-கொண்டி-ருந்தேன். பல அதிர்ச்சியான தகவல்கள் அந்த நூலில் இருந்ததை என்னால் உணர முடிந்தது-
சதி என்கிற பெய-ராலே பெண்களை நெருப்-பிலே போட்டுக் கொன்-றார்கள். இது நெருப்-பிலே பெண்களுக்கு நடந்த கொடுமை.
அதேபோல நெருப்-பில் மட்டுமல்ல; நீரினா-லும் பெண்களுக்கு பெரிய கொடுமைகள் இழைக்கப்-பட்டி-ருக்கிறது என்பதை விளக்கியிருக்கின்றார். கங்கைக் கரையில் மிகவும் குளிர்ந்த நீர் ஓடிக்கொண்-டிருக்கும் இடத்தில் ஈமச்சடங்குகள் நடப்பது வழக்கம்.
ஒரு குடும்பத்தில் சிறந்த ஒருவருக்கு ஈமச்சடங்கு நடத்த ஆரம்பிக்கின்-றார்கள். அப்பொழுது மிகவும் குளிர்ந்த நீரில் அந்த குடும்பத்தைச் சார்ந்த பெண்ணை கழுத்-துவரை உள்ள தண்ணீ-ரில் வலுக்கட்டாயமாக நிற்க வைக்கிறார்கள். 6 மணிநேரம் ஈமச்சடங்-குகள் நடைபெறுகிறது. அதுவரை அந்த பார்ப்-பனப் பெண் குளிர் நீரில் நடுங்கி விறைத்துப் போகிறார். பிறகு தண்-ணீரில் இருந்து மேலே வருகின்ற அந்தப் பெண்ணை ஈமச்சடங்கு நடத்துவோர் அழைத்து வருகின்றனர்_பார்ப்பனப் பெண்ணைத் தொடக்-கூடாது. ஒரு கயிற்றால் கட்டி இழுத்து வருகிறார்கள்.
நூலாசிரியர் வில்கின்-சன் கங்கைக் கரையில் நேரில் கண்ட சம்ப-வத்தை அப்படியே இந்த நூலில் பதிவு செய்தி-ருக்கிறார்.
அப்படி இழுத்து வரப்பட்ட பெண் நடக்க முடியாமல் தண்ணீர் தண்ணீர் என்று கேட்டு கதறுகிறார். எந்தப் பார்ப்பனப் பெண்ணும், வயது முதிர்ந்த பார்ப்பன பெண்கள்கூட இரக்கப்-பட்டு அந்தப் பெண்ணுக்-குத் தண்ணீர் கொடுக்க முன்வரவில்லை. கார-ணம், அதுதான் அவர்-களுடைய கலாச்சாரம்.
ஓர் இளம்பெண் மட்டும் யாருக்கும் தெரி-யாமல் அந்தப் பெண்-ணுக்கு குடிக்க ஒரு மடக்கு தண்ணீர் கொடுக்-கிறார். போய்க்கொண்-டிருக்கிற உயிர் திரும்பி வந்ததைப்போல தண்ணீரைக் குடித்த அந்தப் பார்ப்பனப் பெண் தனக்குத் தண்-ணீர் கொடுத்த இளம்-பெண் காலிலே விழுந்து வணங்கி கதறுகிறார். நீதான் எனக்கு தெய்வம் என்ற குமுறி அழுகிறார். இது எப்படிப்பட்ட கொடுமை என்பதை பார்ப்பனப் பெண்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அதனால்-தான் ஒவ்வொரு பார்ப்-பனப் பெண்கள் வீட்டி-லும் தந்தை பெரியாரு-டைய படத்தை மாட்-டவேண்டும் என்று சொல்லுகின்றேன்.
இன்றைக்கு தந்தை பெரியார் அவர்-களு-டைய கொள்கை வழியில், அண்ணா அவர்-களு-டைய கொள்கை வழியில் நின்று நமது முதலமைச்-சர் கலைஞர் அவர்கள் சிறப்பாக ஆட்சியை நடத்திக் கொண்டு வரு-கின்றார். அவரு-டைய ஆட்சிக்கு நாம் எல்-லாரும் துணை-நின்று ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு பேசினார் சுப.வீரபாண்-டியன்.
உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அடுத்து தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள் ஆற்றிய உரை-யில் குறிப்பிட்ட முக்கிய செய்தி வருமாறு:
தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த-நாள், பேரறிஞர் அண்-ணா அவர்களுடைய பிறந்த நாள் திமுக பிறந்த நாள் என்று இன்றைக்கு நாடெல்லாம்_ மூலை-முடுக்குகளில் எல்லாம் முப்பெரும் விழா உற்சாக-மாகக் கொண்டா-டப்பட்டு வருகின்றது.
திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இன உணர்-வோடு கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.
தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் ஏதோ ஒரு சடங்கிற்காக, சம்பிரதாயத்திற்காகக் கொண்டாடப்படுகின்ற விழாக்கள் அல்ல இவை.
சில பேரை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அவர்கள் கொண்டாடு-கின்ற விழா எப்படி-யிருக்கின்றது தெரியுமா? ஒரு முன்னாள் பெண் அமைச்சர் கோவிலில் வேப்பிலை ஆடை அணிந்-துகொண்டு ஆடி-யிருக்-கிறார். ஏனென்-றால், உலகத்திலேயே பெரிய இலை வேப்-பிலை பாருங்-கள். அந்த வேப்-பிலை-யைச் சுற்றிக்-கொண்டு கோயிலைச் சுற்றி ஆடிக்-கொண்டு வருகின்றார். அந்தக் காட்சியைப் பார்க்க ஒரு கூட்டம் அங்கேயும் இருந்தது. (சிரிக்க-_கை-தட்டல்)
நீங்களே புரிந்து-கொள்வீர்கள். அதே-போல அந்த அம்மா-வுக்குப் பிறந்தநாள் என்ற பெயராலே _ பிரார்த்-தனை என்ற பெயராலே மண்சோறு சாப்பிட்டவர்-களும் அவர்கள்தான்.
அண்ணா பெயரை கட்சியில் வைத்துக்கொண்டு
இப்படிப்பட்ட ஒரு கட்சியினர்தான் அண்ணா பெயரை தன் கட்சியிலும், கொடியிலும் வைத்துக்-கொண்டு அண்ணா-வையும், தந்தை பெரியா-ரையும், திராவிட என்ற பெயரையும், ஒரு லேபி-ளாகப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் வியா-பாரம் நடத்திக் கொண்-டி-ருக்கின்றார்கள் அந்தப் பக்த சிரோன்மணிகள். பெரியார் அண்ணா பெயரை விளம்பரத்திற்-காகப் பயன்படுத்திக்-கொண்டு வருகின்றார்கள்.
இன்றைக்குக் கலை-ஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களு-டைய கொள்-கைகளை ஆட்சியின் சட்டங்க-ளாக ஆக்கி அவருக்குப் பெருமை சேர்த்துக்-கொண்டு வருகின்றார். அதேபோல அண்ணா அவர்களது வழியில் நின்று ஆட்சியை நடத்-திக்கொண்டு வருகின்றார்.
தந்தை பெரியார் ஒரு பெரிய கூட்டத்தை சேர்த்துக் கொண்டு இயக்கத்தைத் தொடங்க-வில்லை. பிரெஞ்சுப் புரட்சியே ஒரு மாநாடு போட்டு ஆரம்பிக்க-வில்லை. ஒரு டென்னிஸ் கோர்ட்-டில்தான் தொடங்கியது.
2000ஆம் ஆண்டு-கால சமூகக் கொடு-மைகளை, அநீதிகளை அழித்து மக்களிடத்தில் ஒரு மாறுதலை ஏற்-படுத்திய-வர் தந்தை பெரியார்.
நம்முடைய முதல-மைச்--சர் கலைஞர் அவர்-கள் ஈரோட்டுக் குரு-குலத்திலே பயின்ற காரணத்தால்-தான். பாராட்டிப் போற்றி-வந்த பழைமைலோகம்
ஈரோட்டுப் பூகம்பத்-தால் இடியுதுபார்!
என்று எழுதினார்.
சமூகப் புரட்சியை ஏற்படுத்தியவர் பெரியார்.
தந்தை பெரியார்-அவர்கள் தனது மேடைப் பேச்சுகளால் ஒரு சமூகப் புரட்சியை, சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தி-யவர் என்பதை எதிரி-களால்கூட மறுக்க முடியாது.
தந்தை பெரியார் அவர்-கள் ஒரிஜினல் திங்க்கர் நமது ஆசிரியர் அவர்களைப்-போல _ எங்-களைப்போல _ சபாபதி மோகன் அவர்-களைப்-போல பட்டம் படித்த-வர் இல்லை. தந்தை பெரியார். சுயமாகச் சிந்தித்தார்.
மனிதனை நினைத்தார் - பெரியார்
இந்த நாட்டிலே ஏன் உயர்ந்த ஜாதிக்காரன் ஆதிக்கம் செலுத்த வேண்-டும்? தாழ்ந்த ஜாதிக்கா-ரன் ஏன் அடிமையாக இருக்க வேண்டும்? அதற்கு அடிப்-படை மூலகாரணம் என்ன என்று சிந்தித்தார். கடவு-ளின் பெயரால், மதத்தின் பெயரால் இந்த நாட்டு மக்கள் அடிமைப் படுத்-தப்பட்-டிருக்கின்-றார்கள் என்-பதைக் கண்-டறிந்-தார். எனவேதான் கடவு-ளை மற! என்று சொன்ன தந்தை பெரியார் மனித-னை நினை! என்று சொன்னார்.
முதலமைச்சர் கலை-ஞர் அவர்கள் மனிதனை நினைத்த காரணத்தால்-தான் தந்தை பெரியார் அவர்களின் எண்ணத்தை ஈடேற்றுகின்ற வகையிலே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு--வந்தார்.
பார்த்தசாரதி கோயிலில் நம்மவர்
இங்கே அருகேயிருக்-கின்ற பார்த்தசாரதி கோயிலில் நாளைக்கு கோயில் கர்ப்பக் கிரகத்-திற்குள் சென்று மணிய-டிக்கப் போகிறார். அப்-பொழுது கோயிலுக்கு வருகின்ற பார்ப்பனர்கள் அவர்களே சொல்லிவிடு-வார்கள். கோயிலுக்குள் கடவுள் இல்லை! கடவுள் இல்லை! போகாதீர்கள் என்று பார்ப்பனர்களே சொல்லிவிடுவார்கள் என்று தந்தை பெரியார் அவர்கள்தான் இதை விளக்கிச் சொன்னார். அந்த சமூக மாறுதல் கலைஞர் ஆட்சியில் வரப்போவதை நாம் காணத்தான் போகின்றோம்.
பெரியாரின் கனவுகள் நனவாகின்றன
தந்தை பெரியார் அவர்களுடைய கனவு-கள் எல்லாம் இன்-றைக்குக் கலைஞர் ஆட்சி-யில் நனவாகிக் கொண்-டி-ருக்கின்றன.
மத்திய அரசு நிகழ்ச்-சியிலே சரஸ்வதி வந்தனா என்ற பாடல் பாடியதற்-காக மத்திய அரசு நிகழ்ச்சியையே புறக்-கணித்து-விட்டு வெளியே வந்தவர்தான் நம்முடைய பேராசிரியர் அவர்கள்.
ஆனால், சென்ற அதிமுக ஆட்சி மதச்-சார்பற்ற ஆட்சியாக நடைபெற்-றதா? ஒரு அரசாங்கம் என்றால் மதச்சார்பற்ற அரசாக நடைபெற வேண்டும். மக்களை சமத்-துவமாக, சகோதரத்துவ-மாக நடத்த வேண்டும்.
அந்த அம்மையாரின் எண்ணம்
வெர்ஜின் என்றால் என்ன பொருள் என்-றால் ஆண்களோடு எந்த தொடர்பும் இல்-லாவ-ருக்குப் பெயர்தான் கன்னி என்று சொல்-லுவார்கள்.
ஆனால் அதை-விட்டு விட்டு எல்லா ஆண்-களையும் நான் சமமாகத்-தான் பாவிப்-பேன் என்று சென்ற ஆட்சியில் ஆண்டு--கொண்டிருந்த அந்த அம்மையார் சொன்-னால் அது அவருடைய சாமர்த்-தியம். (சிரிப்பு) அந்த அம்மாவுக்கு அண்ணா-வையும் தெரி-யாது, பெரி-யாரையும் தெரியாது. மதச்சார்பற்ற தன்மையும் தெரியாது. எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள் என்று சொன்னவர் தந்தை பெரியார்.
சிணீமீ வேறு; சிறீணீ வேறு. ஜாதி என்பது மிகப்பெரிய போராட்-டம் கொண்-டது. மிகக்-கொடி-யது என்று ஏசியன் டிரா-மாவில் எழுதிய நோபல் பரிசு பெற்ற குன்னர்-மிர்தால் விளக்கம் சொன்-னார்.
அரசியல் வியாபா-ரம் இன்றைக்கு அதிமுக என்ற ஒரு கட்சி அண்ணா பெயரை சொல்லிக்-கொண்டு _ தந்தை பெரி-யாரை லேபிளாக வைத்துக் கொண்டு _ அதைப் பட-மாக கொண்டு அரசியல் வியாபாரம் செய்து-கொண்டி-ருக்கிறார்கள்.
தந்தை பெரியார்-_அண்ணா கொள்கை-களை இளைய தலைமுறை-யினருக்குப் போதிக்க வேண்டும் என்பது ஆசிரி-யர் அவர்களுக்கும், கலைஞர் அவர்களுக்கும் குருதி ஓட்டத்திலே கலந்து ஒன்று.
அதனால்தான் வரும் 26ஆம் தேதி நமது ஆசிரி-யர் அவர்களுக்குத் தந்தை பெரியார் விருதும், முதல-மைச்சர் கலைஞர் அவர்-களுக்கு அண்ணா விருதும் காஞ்சிபுரத்தில் நடை-பெற-விருக்கின்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா--வில் வழங்கப்பட-விருக்-கின்றன. இவ்வாறு உரை-யாற்றி-னார் அமைச்சர் க.பொன்-முடி அவர்கள்.

Monday, November 30, 2009

நாத்திகர் ஆனாரா தாக்கரே?


நாத்திகர் ஆனாரா தாக்கரே?

மும்பை சிவசேனா வீரர் பால்தாக்கரே நாத்திகர் ஆகிவிட்டாராம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
தம் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான “சமானா" வில் எழுத்து வடிவத்தில் இதனைத் தெரிவித்துள்ளார் என்பதால் இதனை அலட்சியப்படுத்தவும் முடியாது.

பொதுவாக சங்பரிவார்க் கூட்டம் ஒன்றை முதலில் சொல்லும்; அது குறித்து பிரச்சினை வெடித்தால் “அய்யய்யோ நான் அப்படி சொல்லவேயில்லையே!” என்று சத்தியம் செய்யும்.

ஆனால் பால்தாக்கரே இப்பொழுது தன் கட்சியின் ஏட்டிலேயே வெளிப்படையாக எழுதி விட்டாரே!

பகுத்தறிவுச் சிந்தனையின் அடிப்படையிலா? பொருள் முதல்வாதம், எண்ண முதல்வாதம் என்ற அடிப்படையில் ஆழச் சிந்தித்து ஆத்திகத்தை ஆயிரம் அடியின் கீழ் புதைந்து விட்டு, நாத்திகராகக் கம்பீரமாக வெளிவந்துள்ளாரா என்ற கேள்விக்கு விடை கூறுதல் கடினம்தான்.

நடைபெற்ற மராட்டிய மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் மண் கவ்வியதால் ஏற்பட்ட தோல்வியின் சம்மட்டி அடியால் துவண்டு போன மனிதன், தோல்வி ஜன்னியில் இப்படி உளறுகிறாரா என்ற கேள்வியிலும் அர்த்தம் உண்டு.

“மராட்டியர்கள்தான் என் முதுகில் குத்தி விட்டனர். வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. ஒரு தீய சக்தியானது மராத்தி மக்களிடம் இருந்து என்னைப் பிரித்து விட்டது. எனக்கு மராட்டியர்கள் மீதும், கடவுள் மீதும், ஏன் எல்லா வற்றிலுமே நம்பிக்கை போய்விட்டது. இதைச் சொல்வதற்காக மிகுந்த வேதனைப்படுகிறேன். அதே சமயம் உண்மையை மறைக்கவோ, அல்லது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதையோ நான் விரும்பவில்லை’’ என்று மாரடித்து ஒப்பாரி வைத்துள்ளார்.

அடேயப்பா! எவ்வளவு பெரிய “வீராதி வீரர்” “சூராதி சூரர்!’’ அவர் வாய் திறந்தால் மராட்டிய மண்டலமே ஒடுங்கி நடுங்குமே வெளி மாநிலத்தவர்கள் வெலவெலத்துப் போய் விடுவார்களே, தமிழர்களை என்ன பாடுபடுத்தினார்?

அந்த சூரர்தான் இப்பொழுது சுருங்கிப் போய் சோணகிரியாகி விட்டார். உருட்டல், மிரட்டலால் ஓங்கி வளர்ந்து பெரிய மனுஷனாகப் பவனி வந்தவர் படுக்கையில் வீழ்ந்த நோயாளியாகி விட்டாரே!

மும்பை தொலைப்பேசி முகவரி புத்தகத்தில் உள்ள வெளி மாநிலத்தவர்களைக் கணக்கெடுத்தார். இனி மும்பைக்கு வர வேண்டுமானால் “விசா” வாங்கிக் கொண்டுதான் வர வேண்டும் என்று வீராவேசம் பேசிய “வேங்கைப்புலி” இப்பொழுது விலா ஒடிந்து போன பூனையாக “மியாவ் மியாவ்” என்று ஈனக் குரலில் கத்துகிறதே! இப்பொழுது மட்டுமல்ல; 1995 இல் அவரின் மனைவி மரணம் அடைந்தபோதுகூட மனுஷன் மாரடித்துப் புலம்பியவர் தான்.
1993 செப்டம்பர் 6 அந்த நாளை தாக்கரேயால் மறக்கவே முடியாது. அந்த நிலைப்பற்றி ‘வீக்’ (The Week November 19-1995) இதழ் வெளிப்படுத்துகிறது.

I don’t know if death had arranged the trap, “Says thackeray. ‘That night the lights went out, the hotline was gone, the telephone was dead and the medicine could not be found. she was breathing with great difficulty and I watched helplessly as she died gasping. I lost her on Ganesh Chaturthi. And she had been so religious and had done puja for your siddhi vinayaka.’’
Your Siddhi Vinayaka! These words of the champion of Hindutva are soaked in bitterness and tears, tears that he tries to hide behind his new dark glasses, a bitterness that has turned him into a blasphemer. Thackeray, 68, is like a rebelious boy who has lost his favourite little treasure. “I don’t believe in God any longer,” he says in deliance.

அந்த இரவில் மின்சாரம் இல்லை, விளக்குகள் இல்லை; தொலைப்பேசி வேலை செய்யவில்லை; என் மனைவி மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவள் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது ஏதும் செய்ய முடியாதவனாக நான் பார்த்துக் கொண்டிருந்தேன். இவ்வளவுக்கும் அன்று விநாயகர் சதுர்த்தி. அவள் மத ஆச்சாரங்களில், ஆன்மிகத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவள். சித்தி வினாயகனை அவள் தொழுது கொண்டிருந்தார். ஆனாலும் அவளை எந்தக் கடவுளும் காப்பாற்றவில்லை.

கடவுள்மீது இனி நம்பிக்கை வைக்க மாட்டேன் ஒரு போதும் இனியில்லை’’ - என்று அன்றும்கூட இப்படித்தான் எகிறிக் குதித்தார்.

மாதுங்காவில் அவர் பங்களாவில் இருந்த கடவுள் படங்கள் எல்லாம் தூக்கி எறியப்பட்டன. கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த உத்திராட்ச மாலைகளை எல்லாம் உருவி எறிந்தார். கையில் எப்பொழுதும் இருக்கும் ஜெபமாலைக்குக் கல்தா கொடுக்கப்பட்டது. இப்பொழுது 14 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே மனநிலையில் மனிதன் சித்தப்பிரமை பிடித்து செதிர் காயாக உடைந்து கிடக்கிறார்.

கடவுள் நம்பிக்கை போய் விட்டது என்று தாக்கரே கூறியுள்ளாரே - சங்பரிவார் வட்டாரம் மூச்சு விடவில்லையே - ஏன் முணுமுணுப்பைக்கூட வெளிப்படுத்தவில்லையே! இந்தச் செய்தி வெளியில் பரவிவிடக் கூடாது என்பதில் தான் அவர்கள் அக்கறை செதுத்துபவர்கள் என்பது நமக்குத் தெரியும்.

பால்தாக்கரேயே பாதை மாறி விட்டாரா? - ‘பகவான் மீது அவர் வைத்திருந்த அபார நம்பிக்கை நாசமாயிற்றா?’ என்று பாமர மக்களும் பேச ஆரம்பித்து விடுவார்களேவிளைவு என்ன? சாதாரணமாக மிக பக்திக்கு ஹானி விளைந்தால் பார்ப்பனியத்தின் பல் பிடுங்கப்பட்டு விடுமே, ஆரியத்தின் அஸ்திவாரம் நொறுங்கிப் போய் விடுமே. அதன்பின் பிழைப்பு என்னாவது, ஆதிக்கம்தான் என்னாவது என்ற பயத்தில் தாக்கரே விஷயத்தை மூடி மறைத்து விட்டார்கள்.
ஒன்று மட்டும் உண்மை. ஏதோ ஒரு பிரச்சனையில் தோல்வி ஏற்பட்டு விட்டதாலோ, இழப்பு ஏற்பட்டு விட்டதாலோ அந்த நேரத்தில் ஏற்பட்டுள்ள உணர்ச்சிக் கொந்தளிப்பில் “கடவுள் நம்பிக்கை எனக்கு போய் விட்டது’ என்று கூறுவதையெல்லாம் பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது.

பகுத்தறிவுவாதியாக நாத்திகராக மலர்வதற்கு ஆழ்ந்த சிந்தனையும், துணிவும் தேவைப்படும்.
தன் மனைவி இறந்த போது (1995இல்) தனக்குக் கடவுள் நம்பிக்கை போய்விட்டது என்று சொன்னது உண்மையாக இருந்திருக்குமேயானால், 2009இல் ஒரு தேர்தல் முடிவை முன் வைத்து இப்படி ஒரு கருத்தைச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காதே!
ஒரு கருத்தை வேண்டுமானால் முன் வைக்கலாம் - கடவுள் நம்பிக்கை என்பது ஒரு சந்தர்ப்பவாதம் என்பதுதான் அது!

--மின்சாரம் 

Tuesday, November 17, 2009

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

பொது அறிவு எனும் பட்டறிவு-மரணக் குறிப்பு (Obituary)

படிப்பறிவு வேறு; பகுத்தறிவு வேறு, பட்டறிவு (Comman sense) வேறு. இம்மூன்றும் வெவ்-வேறானவை! ஆனால் ஒன்றுக்கொன்று நெருங்கிய உறவுள்ளவை!

மனிதகுலம் தழைத்தோங்க, இவை ஆற்றிய, ஆற்றி வரும் தொண்டு வார்த்தைகளால் வருணிக்க முடியாத மலையளவு ஆகும்!


இங்கிலாந்தின் ‘லண்டன் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான ஒரு சிறந்த சிந்தனைச் சிதறல்தான் மேலே காட்டியுள்ள தலைப்புடன் வெளிவந்துள்ள இந்தக் குறிப்புரையாகும்!

ஆங்கிலத்தில் உள்ள அதன் சுவையோடு அப்படியே என்னால் தரமுடியாது என்றாலும் கூடுமான வரை முயன்று வெற்றி பெற்றிருப்பதாகவே கருதுகிறேன்; எனவேதான் நமது வாசக நேயர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்று நமது மிகப் பெரும், பழம்-பெரும் நண்பரான பட்டறிவு (Comman sense) மறைவுற்றமைக்காக இரங்கல் தெரிவிக்க அனைவருமே கூடியுள்ளோம்!

அவர் எவ்வளவு நீண்ட காலமாக நம்முடைய நண்பராக இருந்து வழிகாட்டினார் என்பதை சரியாக நினைவு கூர முடியவில்லை. காரணம் நீண்ட காலத்திற்கு முன்பே இந்த அதிகாரிகள் வர்க்கத்தின் சிகப்பு நாடாவால் காணாமற் போகும்படி செய்யப்பட்டு விட்டார்! எனவே சரியான வயது கூட ஆதாரங்களுடன் நாம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பில்லை.

ஆனால் அவரை நாம் எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கும் வண்ணம் நமக்கு மிக அருமையான பல பாடங்களை அவர் கற்றுக் கொடுத்துள்ளார். அவற்றின் மதிப்பினை நாம் இப்போதும், எப்போதும் உணர்ந்து கொண்டே இருப்போம் என்பது உறுதி.

மழையிலிருந்து எப்படி தப்பித்து வரமுடிகிறது; வாழ்க்கை என்பது எப்போதுமே ஒரு நியாயமாக நடப்பது அல்ல; அது போல சில நேரங்களில் நாம் நம்மை நொந்து கொள்ளும் நிலையில் அது என் தவறாகக் கூட இருக்கலாம் என்பது போன்ற பட்டறிவுச் சிந்தனைகளையொட்டிய பழக்க வழக்கங்களை நாம் பெற்றுள்ளோம்!

பொருளாதாரத்தில் சம்பாதிப்பதற்கு உட்பட்டு செலவழித்தல், நம்பக் கூடிய காரண காரியங்கள் அவர்கள் குழந்தைகள் அல்லர், வயது வந்தவர்கள் என்று உணர்ந்து அதற்கேற்ப நமது அணுகுமுறைகள் என்ற நடைமுறை வாழ்க்கைமூலம் பட்டறிவின் வாழ்வு நீண்டு வளர்ந்து வந்தது.

ஆனால் அவரது உடல் நலம் திடீரென்று கெட ஆரம்பித்தது எப்போது என்றால், திட்டமிட்டே, நல்ல எண்ணத்தோடு அவை இருந்த போதிலும் கூட சமூகம் சுமக்கமுடியாத கட்டுப்பாடுகளை அவரது இடத்தில் அமர்த்தி வைத்தபோதுதான்! 6 வயது பெண்ணின் கன்னத்தில் பாலுணர்வு உந்துதலால் முத்தம் கொடுத்த குற்றத்தை ஒரு சிறுவன் இழைத்தான் என்றும், மதிய உணவுக்குப் பின் வளர் இளம் பிராயத்தினர் (Teen agers) வாய் கொப்பளிக்க மவுத் வாஷ் திரவத்தைப் பயன்படுத்தினர் என்றும், வகுப்பில் அடங்காப் பிடாரியாக நடந்த ஒரு மாணவனைப் பள்ளியை விட்டு வெளியே அனுப்பினர் என்பது போன்ற (பட்டறிவுக்கு முரணான கொள்கைகளால்) (அவரது) பட்டறிவின் உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமாகியது!

அவரது வாழ்வு மிகவும் பிடிமானமற்றதாக ஆனது எப்போது தெரியுமா?

வீட்டில் ஒழுங்காக வளர்க்கத் தவறிய பெற்றோர்களின் குழந்தைகளை ஆசிரியர்கள் தங்களது வகுப்பறைகளில் ஒழுங்கீனத்தைக் கண்டித்து தண்டித்து முறைப்படுத்திய ஒரே காரணத்திற்காக, பெற்றோர்களால் ஆசிரியர்கள் தாக்கப்பட்டபோது!

அதன் உடல் நிலை மேலும் மோசமானதாக ஆனதற்கு முக்கிய காரணம், மாணவர்கள் வெப்பத்தினால் தாக்கப்பட்டு (தோல் வியாதி வராமல் தடுக்க)விடக்கூடாது என்பதால் சூரிய ஒளி படும்படி மாணவர்களின் உடலில் மருந்து திரவம் தடவவும், ஆஸ்பிரின் (Aspirin) மாத்திரையை (இது இதய நோய் தடுப்பு - இதய ரத்தக்குழாய்கள் அடைபடாமல் தடுக்க அவசர சிகிச்சைக்கான அவசர முதல் உதவி) ஆசிரியர்கள் தாங்களே செய்யாமல், பெற்றோர்கள் அனுமதி பெற்ற பிறகே செய்ய வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டபோதும், ஒரு மாணவி, கருத் தரித்துள்ள செய்தியையோ, அல்லது அவளுக்கு நடந்த கருச்சிதைவு (Abortion) பற்றியோ ஆசிரியர்கள் உடனே பெற்றோர்களுக்குத் தகவல் அறிவிக்க முடியாமல் இருந்தபோதும்தான். (இவை இங்கிலாந்தில் சர்வ-சாதாரணமான நிகழ்வுகளாகிவிட்டன.)

பட்டறிவு என்ற மனிதருக்கு இனியும் நாம் வாழ வேண்டுவது அவசியம்தான் என்ற மன உறுதி பறந்தோடி விட்டது எப்போது தெரியுமா?

மத அமைப்புகள் வெறும் பொருள் சம்பாதிக்கும் வணிக மய்யங்களாகி வருவதாலும், குற்றம் புரிந்த கிரிமினல்கள் அவர்களால் பாதிக்கப் பட்டவர்களை விட நல்ல முறையில் நடத்தப்பட்ட போதும்!

பட்டறிவுக்கு சரியான அடி, உதை, குத்து கிடைத்தது_ ஏனெனில் கொள்ளைக்காரர்களிடம் இருந்து அவர் (பட்டறிவு) தன்னைப் பாதுகாத்துக் கொள்ளமுடியவில்லை_ அதுவும் சொந்த வீட்டிலேயே.

அதோடு மட்டுமா? அந்தக் கொள்ளைக்காரன் அடி வாங்கிய இவர் மீதே தன்னைத் தாக்கி காயப் படுத்திவிட்டான் என்று (பொய்) வழக்கைப் போட்ட போது, பட்டறிவு தன்னம்பிக்கையை அடியோடு இழந்துவிட்டது!

அதை விடக் கொடுமை, பட்டறிவு இறுதி வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து இனி நாம் வாழ்வது அர்த்தமற்றது என்ற எண்ணத்தைத் தனக்குள்ளே ஏற்படுத்திக் கொண்டது எப்போது தெரியுமா?

கொதிக்கும் காபி ஒரு கப் வாங்கி (அவரது கவனக் குறைவால்) தனது தொடை மீதுள்ள துணியின் மேல் ஊற்றி தொடையில் காயமேற்படுத்திக் கொண்டமைக்காக, ஆடை மீது வழக்குப் போட்டு பெரும் நஷ்ட ஈட்டுத் தொகை பெற்ற (நியாயமற்ற) போக்கினைக் கண்டபோது! பட்டறிவு என்னும் இவரது தாய்தந்தையர் இவருக்கு முன்பே மரணமடைந்துவிட்டனர். அவர்களின் பெயர் உண்மை மற்றும் நம்பிக்கை என்பவை ஆகும். இவருக்கு தனது துணைவியார் (Discretion) யுக்தானுச்சாரம் நிலைமைக்கேற்ப நடக்கும் தன்மையர் என்பவர் மூலம் பொறுப்பு (Responsibility) என்ற ஒரு மகளும், பகுத்தறிவு (Reason) என்ற ஒரு மகனும் உண்டு.

பட்டறிவின் மற்றொரு துணைவியார் நான்கு பிள்ளைகளைப் பெற்றதால்_ மேற்கூறிய ‘பொறுப்பு’ என்ற மகளுக்கும் ‘பகுத்தறிவு’ என்ற மகனுக்கும் நான்கு (வேறுதாய் வயிற்று) (Step Brothers) சகோதரர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் பட்டியல் இதோ.

1. “எனது உரிமைகள் எனக்குத் தெரியும்’’ என்று கூறுவோர்.

2. “இப்போதே அது எனக்கு வேண்டும்’’ என்று (அடம் பிடிக்கும்) கூறும் நிலையோர்.

3. “என்னைக் குற்றம் சொல்லாதீர்; வேறு சிலரைத்தான் நீங்கள் குறை கூறவேண்டும்’’ (கடமை தவறியதைச் சுட்டிக் காட்டும்போது) என்று கூறுவோர்.

4. “என்ன செய்வது? நான்தான் பாதிக்கப்பட்டவன்’’ என்று (குற்றம் சாற்றப்படும்போது) கூறுபவர்.

பட்டறிவின் இறுதி ஊர்வலத்தின் போது அதிகமானோர் கலந்து கொள்ளவில்லை. ஏனெனில் அவர் மரணம் அடைந்து-விட்டார் என்பதே பலருக்குத் தெரியாது!

நீங்கள் அவரை இன்னமும் நினைத் திருக்கிறீர்கள் என்றால் அருள் கூர்ந்து இதை மற்றவர்களுக்குக் கூறுங்கள்.

இல்லையெனில் அவர் இறந்து-விட்டதை அறியாத பெரும்பான்மையில் நீங்களும் ஒருவராகி விட்டு, ஒன்றும் செய்யாமல் கைகட்டி வாய் பொத்தி வாழும் வாழ்க்கை வாழுங்கள்!

சிங்கப்பூர் பெரியார் சேவை மன்றத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரும், சிறந்த பகுத்தறிவுப் பேராசிரியருமான டாக்டர் ரத்தினகுமார் அவர்கள், நேற்று அவருக்கொரு நண்பர் லண்டனிலிருந்து அனுப்பினார் என்று கூறி இந்த அற்புத சிந்தனை ஓவியக்கட்டுரையை (ஆங்கில நகலை) தந்ததைப் படித்தேன்; சுவைத்தேன். அத்தேனை நீங்களும் பருகிப் பயன்பட தந்துள்ளேன். படித்துப் பயனடையுங்கள்!

Friday, November 13, 2009

"நடந்த கதை’ திரையிடல் -இன்று


பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை
இரண்டாம் ஆண்டு தொடக்க விழா

நாள்: 13.11.2009 வெள்ளி மாலை 6.30 மணி
அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், சென்னை-7;

தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை: வீ.குமரேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

வாழ்த்துரை: ப. திருநாவுக்கரசு (ஆசிரியர், ‘நிழல்’) அஜயன் பாலா (எழுத்தாளர்) மீரா.கதிரவன் (திரைப்பட இயக்குநர் - 'அவள் பெயர் தமிழரசி')

திரையிடல்: 'நடந்த கதை’

இயக்கம் : பொன்.சுதா (குறும்படம் -21 நிமிடங்கள்)
கதை : அழகிய பெரியவன்
ஒளிப்பதிவு: இராசாமதி

அனைவரும் வாரீர்!




Monday, October 26, 2009

விசித்திர மூடத்தனம் இன்றும் தேவையா?-கி.வீரமணி

நோபல் பரிசு போல, நம் நாட்டில் சிறந்த ஒரு ஏற்பாடு செய்யவேண்டுமானால், தலைசிறந்த மூட நம்பிக்கையாளர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குத் தனிப் பரிசளிக்கலாம்!

நேரிடையாக அவர்களுக்கு அழைப்புக் கொடுத்து நடத்துவதற்குப் பதிலாக, ரொம்ப விசித்திரமான மூட நம்பிக்கையாளர்பற்றி ஏடுகளில் குறைந்தபட்சம் விடுதலை போன்ற பகுத்தறிவு நாளேடுகளிலாவது அதுபற்றி முழுத்தகவல்களைத் தந்து, பகுத்தறிவை வளர்க்கும் நூல்களைப் பரிசாக அளிக்கலாம்; இல்லையேல் இருட்டில் இருக்கும் இவர்களை வெளிச்சத்திற்கு வர அடையாளச் சின்னமாய் டார்ச்லைட்டினையோ, மற்ற சில வெளிச்சம் தரும் பொருள்களையோ பரிசளிக்கலாம்.

இதோ இன்று ஆங்கில நாளேடு ஒன்றில் வெளியான சுவையான மூட நம்பிக்கையின் உச்சமான செய்தி:

பாட்டியாலாவில் (பஞ்சாப்) உள்ள கான்பூரில் ஒரு கோயில் இருக்கிறது. அதில் விசித்திரமான வகையில் வழிபாடு நடக்கிறது, நாய்களுக்கு.

சீ நாயே! என்று யாரும் அங்கே திட்ட முடியாது; பயபக்தியுடன் கும்பிட்டு வழிபடல் வேண்டும். அந்நாய்கள் உண்ட பிறகே அங்கே உள்ள கிராமப்புற மக்களுக்கு ஊரில் சாப்பிட உரிமையாம். உணவு பொது சமையல் கூடத்திலிருந்து பரிமாறப்பட்டு, சாப்பிட அனுமதியாம்!

அதுவும் எப்படி தெரியுமா?

நீண்டகால பாரம்பரிய பழக்கவழக்கத்தையொட்டி கோயில், நாய்களுக்கு மூன்று வேளை உணவு! முக்கால பூஜை நடத்திய பிறகே _ அதாவது பைரவமூர்த்தி (நாய்)க்கு உணவு படைத்துச் சாப்பிட வைத்த பின்பே ஊர் மக்களுக்குச் சாப்பிடும் உரிமையும், அனுமதியும் உண்டாம்!

ஆனந்தகிரி என்ற தலைமை அர்ச்சகர் மூன்று காலமும் கோயிலுக்குள் வருவார்; நுழைந்தவுடன் நாய்போல் குரைப்பாராம்! உடனே குரல் கேட்டு, நாய் பகவான்கள் மூவர் வந்தவுடன் மிகுந்த மரியாதை, பயபக்தியுடன் அவர்களுக்கு உணவு பரிமாறப்படுமாம்.

அதுவும்கூட சமைத்துள்ளவைகளில் எவை மிகச் சிறந்தவையோ அவைகளை அவர்களுக்கு அமுது படைக்கப்படுமாம்! ஊர்க்காரர்கள், மக்கள் அதன் பிறகே சாப்பிடவேண்டுமாம்! இது அரச கட்டளை!

இந்த நாய்க் கடவுள்கள் பூஜை எப்படி வந்தது என்பதும் மிகுந்த சுவையான கதையாகவல்லவா இருக்கிறது!

அக்கால மாதம் மும்மாரி பொழிகிறதா? என்று கேட்கும் நமது தெருக்கூத்து ராஜாவைவிட, மிகவும் கேவலமாக இருக்கிறது!

முன்பொரு காலத்தில் பாட்டியாலாவின் மகாராஜா அப்போது அரச குடும்பத்தைச் சேர்ந்த_ கேப்டன் அமீரீண்ட சிங் அவர்களின் முன்னோர்களில் ஒருவரான ஆலா (கிறீணீணீ) சிங் என்ற ராஜா, தாசிகளிடையே ஒரு வகையான விசித்திரமான போட்டியை தர்பாரில் நடத்தினாராம்!

ஒரு விலைமாது அப்போட்டியில் 50 கிலோ கஞ்சாவை உட்கொண்ட பின்பும் ஸ்டெடி(ஷிமீணீபீஹ்)யாக ஆடாமல், அசையாமல் அப்படியே சிலை போல் நின்றாராம்; இதனைப் பார்த்த ராஜா, வியந்து பரிசு அளித்தாராம்!

1695_1765 என்ற காலகட்டத்தில் வாழ்ந்த அந்த மகாராஜா இந்த விலைமகளான பெண்ணுக்கு 150 ஏக்கர் பிகா எஸ்டேட்டினை பரிசாக வழங்கினாராம்.

இந்த விசித்திர குணாதிசயம், ரசனைமிக்க அந்த ராஜா, மற்றொரு அரசு ஆணையையும் போராட்டாராம்!

நாய்கள் சக்தி வாய்ந்த கடவுள்கள் ஆகும். எனவே, கான்பூர் கோயிலில் உள்ள சாமிக்கு பூஜை செய்து முதல் கவளம் உணவை இந்த இரண்டு, மூன்று நாய்களுக்குப் படைக்கவேண்டும் அந்தக் கோயில் அர்ச்சகர்.

அதற்குமுன் காலையிலும், மாலையிலும் அமுது படைக்கும் முன்பு கோயில் அர்ச்சகர் நாய் மாதிரி குரைப்பாராம்! சத்தமாக குரைத்தவுடன், நாய்கள் ஓடோடி வந்து, உடனே அந்த கவள உணவையும், மற்றதையும் சேர்த்து சாப்பிடுமாம்!

அதன் பின்னரே, அந்தக் கோயில் மணி ஓசை வந்த பிறகே, ஊர்ப் பொதுமக்கள் உணவு உண்பார்களாம். இன்றுவரை இந்த மூடப்பழக்கம் (பஞ்சாப்) பாட்டியாலாவில் நீடிக்கிறதாம்! அர்ச்சகர் குரைக்க, நாய்கள் ஓடோடி வந்து உணவு உண்ட பின்பு, ஊர் மக்கள் சாப்பிட வேண்டும் என்கிற வழக்கம் தொடருகிறதாம், இன்றைக்கும்!

வயதான முதியவர்களிடம் இதுபற்றி எந்த எதிர்ப்பும் இல்லையாம்! ஆனால், படித்த இளவட்டங்கள் இதனைப் பரிகசித்து எதிர்க்குரல் கொடுத்து கலகம் செய்யத் தொடங்கிவிட்டனராம்!

ஆனந்தகிரி என்ற அர்ச்சகர் அய்யர் குரைத்து, நாய்களை அழைப்பது 16 ஆம் நூற்றாண்டிலிருந்து 21 ஆம் நூற்றாண்டுவரை நீடிக்கிறதாம்!

என்னே மடமை!

பக்தி வந்தால் புத்தி போகும் என்று எவ்வளவு அழகாகச் சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்!

பரவாயில்லை, நம் நாட்டில், எச்சில் இலையில் உள்ள மிச்ச உணவுக்கு நாய்களுடன் போட்டியிட்டு மனிதன் சாப்பிடும் கொடுமையான காட்சி அங்கில்லை என்றுகூட புது வியாக்கியானம் கூறி புகழும் மனிதர்களும் இருப்பார்கள்!

மேலை நாடுகளின் அமெரிக்கா, இங்கிலாந்தில் நாயாகப் பிறப்பது _ மனிதனைவிட _ அரிய வாய்ப்பு ஆகும்; காரணம் அவ்வளவு கவனிப்பு பாசப் பொழிவு எல்லாம் நாய்களுக்குக் கிடைக்கும்.

தாய், தந்தையை விட்டுவிட்டு வாழும் அவர்கள் நாய்களையே மிகவும் விரும்பி நேசிக்கிறார்கள்; அங்கே ஒரு நாயைத் திட்டினாலும் அதன் எஜமானர் நீதிமன்றம், வழக்கு என்றுகூடப் போய்விடுகிறார்கள்! அவர்களை வைதால்கூட மறந்து மன்னித்து விடுவார்கள்!

நாய்க்கு உயில் எழுதி வைப்பவர்கள் பலர் அங்கே உண்டு!

நன்றிக்கு நாயைச் சொன்னாலும் இப்படியா? கொடுமை! கொடுமை!! காரணம் நாய் பைரவர்; கடவுளின் வாகனம் என்று குத்தப்பட்ட மூட நம்பிக்கையே!

பக்தி முற்றிய பலர், அதிக அடக்கத்துடன் நாயடியேன் என்று தங்களை அழைத்துக் கொண்டது இம்மாதிரி அந்தஸ்து அடுத்த உலகிலாவது கிடைக்கும் என்பதாலா?

மூட நம்பிக்கையின் தொட்டில் இல்லையா, இது?

Saturday, October 10, 2009

இந்தித் திணிப்பை எதிர்த்து ராஜ்யசபையில் அறிஞர் அண்ணா முழக்கம்


பிற இதழ்களிலிருந்து
ஒற்றுமையாக இருக்கவேண்டுமா? ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமா? இந்தித் திணிப்பை எதிர்த்து ராஜ்யசபையில் அறிஞர் அண்ணா முழக்கம்
(இந்தி மொழி மட்டுமே இந்தியாவின் ஒரே ஆட்சி மொழியாக இருக்கும் என்ற அரசமைப்புச் சட்டப் பிரிவினை எதிர்த்து தமிழகத்தில் 1965 இல் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தி மொழி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை, ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடரும் என்று பிரதமர் நேரு அவர்கள் அளித்த வாக்குறுதி இப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்தது. இவ்வாறு ஓய்ந்து போயிருக்கும் ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினையை மறுபடியும் மத்திய மனித வள-மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் எழுப்பத் துணிந்திருக்கிறார். நாடு மு

ழுவதிலும் ஒரே மாதிரியான பாடத்-திட்டம் வேண்டும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேவையில்லை என்பது போன்ற அரைவேக்காட்டுத்தனமாக கருத்துகளை அள்ளித் தெளித்த அவர் இப்போது மொழிப் பிரச்சினையைத் தேவையற்ற நிலையில் எழுப்புகிறார். மத்திய அரசின் ஆட்சி பொறுப்பில் தலைமை ஏற்றிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் தி.மு.க.வுக்கும் இடையே சுமுகமான நல்லுறவும், ஒத்துழைப்பும் நிலவி வரும் இன்றைய சூழ்நிலையில் அதனைக் குலைக்கும் வகையில் பேசி வரும் கபில் சிபலை காங்கிரஸ் தலைமை கட்டுப்படுத்தும் என்று நம்புகிறோம்.


இந்த சூழ்நிலையில் அன்று மாநிலங்களவையில் அறிஞர் அண்ணா இப் பிரச்சினை பற்றி பேசியதை இங்கு வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறோம்.)
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 343 ஆவது பிரிவின்படி 1965 ஜனவரி 26 முதல் இந்திய நாட்டின் ஆட்சிமொழியாக இந்தி ஆகவேண்டும்.

இந்தித் திணிப்பிற்கு எதிரான தங்களுடைய பலத்த எதிர்ப்பைத் தெரிவிக்க 1965 ஜனவரி 26 அன்று ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்த தமிழ்நாட்டு மக்கள் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தனர். இப்போராட்டத்தின் விளைவாக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகும் என்று அப்போதைய சென்னை மாநில முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம் கருதினார். 1965 ஜனவரி 25 அன்று இரவு அண்ணாவும் அவரது கட்சியைச் சேர்ந்த 3000 தொண்டர்களும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 1965 பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்றுதான் விடுதலை செய்யப்-பட்டனர். இந்த இடைப்பட்ட ஒரு வார காலத்தில் பொதுமக்கள் கடுங்-கோபத்தில் வெகுண்டெழுந்தபோது, மாநிலத்தின் பல பகுதிகளில் மாநில வரலாற்றில் இதுவரை காணாத அளவில் வன்முறை வெடித்தது. திரு சி.சுப்பிரமணியம் மற்றும் திரு ஓ.வி.-அழகேசன் என்ற இரு காங்கிரஸ்-காரர்கள், மொழிப் பிரச்சினை காரண-மாக தங்களின் மத்திய அமைச்சர் பதவியைத் துறந்தார்கள். அண்ணாவும் தி.மு.கழகத்தின் இதர தலைவர்களும் கைது செய்யப்பட்ட பிறகு, இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தலைமையை மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

சிறையில் இருந்து விடுதலை பெற்ற பின், அண்ணா அவர்கள் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்-கும் தீர்மானம் மீது மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களுக்கு தங்களின் தி.மு.-கழகத்திற்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்று ஆணித்தரமாக வலியுறுத்து-வதற்கு அந்த வாய்ப்பை அண்ணா பயன்படுத்திக் கொண்டார்.
இந்தி எப்போதுமே ஆட்சி மொழி-யாக வரக் கூடாது என்று பிடிவாதமாக அண்ணா கூறவில்லை. நம்மிடையே குறிப்பிட்ட அளவுக்கு உணர்ச்சிப் பெருக்கு நிலவுவதால், இப்பிரச்-சினைக்குத் தீர்வு காண்பதற்கு, சரியான ஆட்கள் நாம் இல்லை என்று ஒரு பெரிய பொறுப்புமிக்க அரசியல் தலைவர் நிலையில் அண்ணா பேசினார்.
1965 ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமும், மாநிலங்களவையில் அண்ணா பேசியது போன்று அரசியல் தலைவர்கள் விடுத்த நம்பிக்கை மிகுந்த வேண்டுகோள்களும் இணைந்து, நாட்டில் இந்தியைத் திணிக்கவேண்டும் என்ற வேகம் குறைந்தது.

டிடிடி அண்ணா அவர்களின் பேச்சு
நான் கூற விரும்புவது இதுதான். காலப் போக்கில் இந்தி மொழியை நாட்டின் சட்டப்படியான இணைப்பு மொழியாக ஆக்குவதைப் பற்றி நீங்கள் சிந்திக்கும் முன், உண்மையிலான இணைப்பு மொழியாக இந்தியை ஆக்கும் வழியில் நீங்கள் செயல்-படவேண்டும். எனதருமை நண்பர் வாஜ்பேயி தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு அதில் இருக்கும் தமிழ் இலக்கியத் தேனை ஆழ்ந்து பருகினா-ரானால், நிச்சயம் அவர் தமிழ் மொழி-யைத்தான் இந்தியாவின் இணைப்பு மொழியாகத் தேர்ந்தெடுப்பார் என்று கூறிக்கொள்கிறேன்.


அனைத்து தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாக ஆகவேண்டும்
அதனால், நமது பதினான்கு தேசிய மொழிகளும் ஆட்சி மொழியாக ஆக இயன்ற நேரம் வரும் வரை, இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும் தற்போதைய நிலையே தொடருவதற்கு நாம் எந்த விதத்திலும் குந்தகம் விளைவித்து விடக்கூடாது. இந்தியாவை ஒற்றுமையாக ஒரே நாடாக வைத்திருப்பதற்காக பலமொழி என்ற விலையை நாம் கொடுத்துத்தான் ஆகவேண்டும். இந்தி மொழியைத் திணிப்பதன் மூலம் உங்களால் இந்தியாவைப் பிளவு படச் செய்துவிட முடியும். நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் மனநிறைவுடன் வாழும் ஒரு இந்தியாவை நீங்கள் காண விரும்-பினால், நாட்டின் ஒரு பகுதி மற்றொரு பகுதி மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்று மக்கள் கருதாத ஒரு இந்தி-யாவை நீங்கள் காண விரும்பினால், கோடிக் கணக்கான மக்களின் மனதில் நியாயமான அச்சங்கள் தோன்றக் கூடாது என்று நீங்கள் விரும்பினால், நாம் ஒவ்வொருவரும் பெருமைப்-பட்டுக் கொள்ள இயன்ற இந்தியாவைக் காண நீங்கள் விரும்பினால், அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்கும் பிரச்சினையை நீங்கள் கட்டாயமாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். சுவிட்சர்லாந்து 4 மொழிகளை ஆட்சி மொழிகளாகக் கொண்டிருக்கும்போது நம்மால் ஏன் 14 மொழிகளை வைத்துக் கொள்ள முடியாது?

இதை நான் கூறும்போது, இது நடைமுறை சாத்தியமற்றது என்று எனது நண்பர் திரு. அக்பர் அலி கான் கூறினார். அது சிக்கலானதுதான்; எளி-தானது அல்ல என்பது உண்மைதான். ஆனால் அதில் உள்ள இடையூறுகள் கடக்க இயலாதவை அல்ல. நான்கு மொழிகளை ஆட்சி மொழியாக சுவிட்சர்லாந்து நாட்டினால் வைத்துக் கொள்ள முடியுமானால், நம்மாலும் பதினான்கு மொழிகளை ஆட்சி மொழி-களாக வைத்துக் கொள்ள முடியும். இந்த விஷயத்தில் எதிர்கொண்ட இடையூறுகளை சுவிட்சர்லாந்து கடந்து இருக்கிறது. அத்தகைய வழி முறை-களைக் கண்டு பின்பற்ற இயலாத அளவுக்கு அறிவுப் பஞ்சம் கொண்ட-வர்களா நாம்? எந்த இடையூறையும், சிக்கலையும் வென்று கடந்து செல்ல இயன்ற ஆற்றல் மிகு மக்களை நான் இங்கு காண்கிறேன். அந்த இடையூறுகளைக் கடக்க எங்கள் கட்சியின் உதவி தேவை எனில், அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் உதவி உங்களுக்குத் தேவைப்-படாது என்று கருதுகிறேன். ஆனால், தேவை என்று நீங்கள் பாவனை காட்டினாலும் போதும், உதவ நாங்கள் தயார். பன்மொழிக் கருத்து என்பது வெறும் மயக்க உணர்வு அல்ல; தி.மு.க. நிறைவேற்றியுள்ள தீர்மானம் அது. அதைப் பற்றி நான் அஞ்சவில்லை. வெறுக்கத்தக்கதுஅது என்று கருதாதீர்கள். முன்னர் சென்னையின் ஆளுநராக இருந்த சிறீ பிரகாசா அவர்கள் கடந்த வாரம் பன்மொழிக் கருத்துக்கு ஆதரவாகப் பேசியதுடன் பொருத்தமான ஒரு வாதத்தையும் முன்வைத்தார். மொழிவாரியான மாநிலங்-களை உருவாக்குவது என்ற முடிவுக்கு வந்த பிறகு, அதன் விளைவாக ஏற்படும் பல ஆட்சி மொழி எனும் கருத்தை ஏற்பதில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள முடியாது என்று அவர் கூறினார். நாங்கள் ஆங்கில மொழி மோகம் கொண்டிருக்கவில்லை


அனைத்து மொழிகளும் அந்த நிலைக்கு உயரும் வரை நாம் பலமொழிகளை ஆட்சி மொழிகளாகக் கொண்டிருப்போம். தமிழ் மொழி ஏற்கெ-னவே அந்த நிலையை எட்டிவிட்டது என்று நான் இங்கு அறிவிக்கிறேன். வங்காள மொழியும் அந்த நிலைக்கு வளர்ந்து விட்டது என்று எனது நண்பர் பூபேஷ் குப்தா கூறக்கூடும். நமது தேசிய மொழிகள் அனைத்-தும் அந்த நிலையை எப்போது எட்டுகின்-றனவோ, அது 1970 ஆக இருக்கட்டும் அல்லது 1980 ஆக இருக்-கட்டும், அப்-போது நாம் ஆங்கிலத்தைக் கைவிடு-வோம். அதனால், ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும் என்று தி.மு.க. வாதிடுவது , ஆங்கில மொழி மீது நாங்கள் கொண்டிருக்கும் மோகத்-தின் காரணமாக அல்ல. எங்கள் மொழி-யைப் பொறுத்தவரை நாங்கள் கர்வம் மிகுந்த மக்களாவோம். தமிழ் மொழிக்கு இணையாக எந்த மொழி-யா-லும் நிற்கமுடியாது என்று நினைப்ப-வர்கள் நாங்கள். அப்போது மேற்கு வங்க உறுப்பினர் டி.எல். சென் குறுக் கிட்டு, வங்காள மொழி தவிர என்று கூறினார்.


(தொடரும்)
(திரு. எஸ். ராமச்சந்திரன் அவர்கள் தொகுத்த அண்ணாவின் ராஜ்யசபை பேச்சுகள் என்ற ஆங்கில நூலிலிருந்து தமிழில்: த.க.பாலகிருட்டிணன். )

Monday, September 14, 2009

வடசென்னை- புதுவண்ணை ஜாதி ஒழிப்பு மாநாடு

வடசென்னை- புதுவண்ணை ஜாதி ஒழிப்பு மாநாடு
ஜாதி ஒழிய பாடுபடும் தி..விற்கு துணை நிற்போம் மத்திய அமைச்சர் . இராசா

தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்ற இடத்தில் ஜாதி ஒழிக்கப்பட்டது என்று மாற்றுக! அரசியல் சட்டத்தை திருத்த தமிழர் தலைவர் முக்கிய வேண்டுகோள்

சென்னை, செப். 14_ வடசென்னை மாவட்டம் புதுவண்ணையில் வரலாற்றில் நிலைபெறக் கூடிய அளவுக்கு ஜாதி ஒழிப்பு மாநாட்டை மாவட்ட திராவிடர் மாணவர் கழகத் தோழர்-கள் ஏற்பாடு செய்திருந்-தனர். இம்மாநாட்டில் எதிர்கால வரலாற்றில் முக்கியத்துவம் பெறத்தக்க தீர்மானம் நிறைவேற்றப்-பட்டது.

மத்திய அமைச்சர் . இராசா, திராவிடர் கழகம் நடத்தும் ஜாதி ஒழிப்புப் பணிக்குத் துணை நிற்போம் என்-றார். அரசியல் சட்டத்-தில் தீண்டாமை ஒழிக்-கப்பட்டது என்ற இடத்-தில் ஜாதி ஒழிக்கப்பட்-டது என்று இருக்கவேண்-டும் அரசியல் சட்டத்தை திருத்த வேண்டுகோள் விடுத்தார் தமிழர் தலை-வர் கி.வீரமணி அவர்கள்.
http://www.viduthalai.com/

Monday, August 31, 2009

அத்வானி முகமூடி கிழிந்தது- அரசியல் வாழ்வும் முடிகிறது



- சிறப்புப் பார்வை

ஒரு தலைவருக்கு இருக்க வேண்-டிய முக்கியப் பண்பு, தான் எடுத்த முடிவின் காரணமாக ஏற்படும் விளை-வுகளுக்கு துணிந்து பொறுப்பேற்பதே என்று கூறுவார்கள். அந்த நேர்மையும், துணிவும் நம் நாட்டின் விடுதலைக்குப் பின்னான அரசியலில் நமது தலைவர்கள் பெரும்பான்மையினரிடம் காண முடியாத ஒன்றாகிவிட்டது.

வெள்ளைய காலனி ஆட்சியை எதிர்த்து சற்றேறக்குறைய ஒரு நூற்றாண்டுக் காலம் நடந்த இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கிடையிலான கொள்கை மாறுபாடுகள் எத்தகையதாயினும் அவர்கள் அனைவரிடமும் நேர்மை இருந்தது. அவர்களின் முடிவுகளும் பார்வைகளும் அவர்கள் வாழ்ந்த காலத்திலும், மறைந்துவிட்ட பின்னரும் விமர்சனத்திற்கும், விவாதத்திற்கும் உட்பட்டதாகவே இருந்தது_ இருக்கிறது. ஆனால் அவர்களின் கொள்கையிலும் பார்வையிலும், போராட்டத்திலும் இல்லாதது சுய நலமும், அயோக்கியத்-தனமும்தான். இந்த குண வலிமை இந்தியா விடுதலை பெற்றதற்குப் பிறகு அதன் தலைவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கி, சில பத்தாண்டுகளில் தலைமையின் தனித்-தன்மையே சுய நலமும், தன்னைத் தாண்டி மற்ற அனைவரையும் ஏமாற்றும் அயோக்கியத்தனமுமே என்றாகிவிட்டது. அதன் வெளிப்-பாடுகளே எமர்ஜென்சியில் இருந்து பாபர் மசூதி இடிப்பு, காந்தஹாருக்கு விமானக் கடத்தல், இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், தமிழருக்கு எதிராக இலங்கை அரசிற்கு உதவுதல் என்று தொடர்ந்து கொண்டு-தானிருக்கிறது.

இந்திய அரசியலை கவ்வியுள்ள அந்த குறைப்பாட்டிற்கு அப்பாற்பட்ட-தல்ல பாரதிய ஜனதா கட்சி. அதுவே இன்றைக்கு அந்தக் கட்சிக்குள் ஏற்-பட்டுள்ள உள் யுத்தத்திற்குக் காரண-மாகவுள்ளது. பாரதிய ஜனதாக் கட்சித் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் பதவிக்கான தங்களின் வேட்பாளர் இவரே என்று அறிவிக்கப்பட்ட லால் கிஷன் அத்வானி, அக்கட்சித் தலைமையிலான கூட்டணி தேர்தலில் தோல்வி கண்ட 3 மாதத்திலேயே அரசியல் வாழ்வின் அஸ்தமன காலத்திற்கு தள்ளப்பட்-டுள்ளது சற்றும் எதிர்பாராததுதான்.

புதுடில்லியில் முகாமிட்டுள்ள ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கின் தலை-வர் மோகன் பகவத், பாரதிய ஜனதாக் கட்சிக்குள் உருவான அத்வானி எதிர்ப்பு எனும் புயலை அடக்க ஒரு சமரசத் திட்டத்தை வகுத்துவிட்டார் என்றும், அதன்படி அத்வானி வகித்துவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி சுஷ்மா சுவராஜிடம் அளிக்கப்படவுள்ளது என்றும் வரும் செய்திகள், 60 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட அத்வானியின் அரசியல் வாழ்-வின் முடிவையே பறைசாற்று-கின்றன.

அத்வானியின் அரசியல் வாழ்வின் இந்த திடீர் முடிவை நிர்ணயித்தது, தன்னை காப்பாற்றிக் கொள்ள ஒரு உண்மையை அவர் மறைத்தது மட்டு-மின்றி, அதன் விளைவில் பங்கேற்கும் துணிவின்றி, தனது சகா ஒருவர் மீது அதனை சுமத்தியதால் வந்த வினை என்பது செய்திகளை தொடர்ந்து படித்துவருபவர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும்.

1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி நேபாளத் தலைநகர் காட்மாண்டுவிலுள்ள திரிபுவன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு டெல்லி நோக்கிப் பறந்துகொண்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் அய்.சி.814 விமானத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் கடத்தினர். 176 பயணிகளுடன் டெல்லியில் தரையிறங்க வேண்டிய விமானத்தை பாகிஸ்தானிற்கு கடத்துமாறு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருந்த தீவிரவாதிகள் கட்டளையிட்டனர், பாகிஸ்தான் அந்த விமானத்தை லாகூர் விமான நிலை-யத்தில் தரையிறங்க அனுமதிக்காததால், அது பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது, அங்கு விமானத்தை முடக்கி நிறுத்திவிட மேற்கொள்ளப்பட்ட முயற்சியை அறிந்த கடத்தல்காரர்கள் விமானத்தை உடனே கிளப்புமாறு உத்தரவிட, அந்த விமானி படாத பாடு-பட்டு லாகூரில் விமானத்தை இறக்கினார். அங்கு எரிவாயு நிரப்பிக் கொண்டு அது துபாய்க்கு பறந்து, அங்கு 27 பயணிகளை மட்டும் இறக்கிவிட்டுவிட்டு, ஆஃப்கானிஸ்-தானின் காந்தஹாருக்கு கடத்தப்பட்டது. கடத்தப்பட்ட அந்த விமானத்தில் இருந்த 149 பயணிகளையும், விமானி-கள், விமான பணியாளர்களை மீட்க-வும் கடத்தல்காரர்களுடன் இந்தியாவின் ஆஃப்கானிஸ்தான் தூதரக அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார். பயணி-களையும், விமான ஊழியர்களையும் விடுவிக்க வேண்டுமெனில் தங்களுக்கு 200 மில்லியன் டாலர் பணம் கொடுக்க வேண்டும் என்றும், இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 35 இஸ்லாமிய தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் கடத்தல்காரர்கள் நிபந்தனை விதித்தனர்.

அத்வானி பொய்யர்

ஒரு வார காலம் பேரம் நடந்தது. இறுதியில் மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க இந்தியா ஒப்புக் கொண்டது. அவர்கள்: 1. மௌலானா மசூத் அசார் (பின்னாளில் ஜெய்ஸ் இ மொஹம்மது இயக்கத்தை தோற்றுவித்தவர், இந்த இயக்கம் இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலில் தொடர்பு-டையது), 2. அஹம்மது உமர் சயீது சேக் (பின்னாளில் அமெரிக்க பத்திரி-கையாளர் டானியல் பியர்லை கடத்தி படுகொலை செய்த பயங்கரவாதி), 3. முஸ்டாக் அஹம்மது ஜர்கார் (பாகிஸ்-தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்-மீரில் இன்றுவரை தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வருவதாகக் கூறப்-படுபவர்). இவர்களுடன் காந்தஹார் புறப்பட்டுச் சென்ற அன்றைய அய-லுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங், தீவிரவாதிகளை ஒப்படைத்துவிட்டு, விமானத்துடன் பயணிகளையும் மீட்டுத் திரும்பினார். கடத்தல்காரர்களுக்கும், அவர்களுக்கு ஒத்துழைத்த தலிபான்-களுக்கும் தனியாக பணம் கொடுத்த-தாகவும் கூறப்பட்டது. ஆனால் உறுதி-படுத்தப்படவில்லை.

இப்படி தீவிரவாதிகளை விடுவித்து, கடத்தல்காரர்களிடமிருந்து பயணிகள் மீட்கப்பட்ட விவகாரம் தனக்குத் தெரியாது என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது அத்வானி பேசினார். அப்போது உள்துறை அமைச்சராகவும், பிரதமர் வாஜ்பேயிக்கு அடுத்த நிலையில் இருந்த மூத்த அமைச்சர் என்ற வகையிலும் அத்வானிக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க முடியாது என்பதால், அவர் பொய்யுரைக்கிறார் என்று குற்றம் சாற்றப்பட்டது.

தீவிரவாதிகளை விடுவித்துதான் பயணிகள் மீட்கப்பட்டனர் என்பது அத்வானிக்குத் தெரியும் என்று ஜஸ்வந்த் சிங் கூறினார். இது தேர்தல் நேரத்தில் பாரதிய ஜனதா கட்சிக்-குள்ளேயே சர்ச்சையானது. இன்று மொஹம்மது அலி ஜின்னா - இந்தியா, பிரிவினை, விடுதலை என்ற தலைப்பில் ஜஸ்வந்த் சிங் எழுதி வெளியிட்ட புத்தகம், தங்கள் கட்சியின் கொள்கைக்கு எதிரானது என்று கூறி, விளக்கம் கோராமலேயே ஜஸ்வந்த் சிங் வெளி-யேற்றப்பட்டதும், காந்தஹார் கடத்தல் மீண்டும் வெடித்தது. தனக்குத் தெரியாது என்று அத்வானி கூறியது அப்பட்ட-மான பொய் என்றும், தீவிரவாதிகளை விடுவித்து பயணிகளை மீட்பது என்று வாஜ்பாய் தலைமையில் நடந்த அமைச்-சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்-பட்டபோது அதில் அத்வானியும் கலந்து கொண்டார் என்றும் குட்டை உடைத்த ஜஸ்வந்த் சிங், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே அத்வானி பொய்யுரைக்-கிறார் என்று பகிரங்க-மாகவே குற்றம் சாற்றினார்.

அதுமட்டுமின்றி, கடத்தப்பட்ட விமானம், லாகூருக்குக் கடத்தப்படுவ-தற்கு முன்னர் அரை மணி நேரம் இந்திய மண்ணில் இருந்தபோது உள்துறை அமைச்சரான அத்வானி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது-தானே என்றும் ஜஸ்வந்த் சிங் கேள்வி எழுப்பினார். இதற்கெல்லாம் அத்வானியால் பதில் சொல்ல முடியாத நிலையில், அவரது அரசியலால் பாதிக்கப்பட்ட மற்ற தலைவர்களும் அவருக்கு எதிராக திரும்பினர். யஷ்-வந்த் சின்ஹா, முன்னாள் பிரதமர் வாஜ்பேயியின் ஆலோசகராக இருந்த பிரிஜேஷ் மிஸ்ரா, முன்னாள் அமைச்-சர் அருண் ஷோரி ஆகியோரும் ஊடகங்களில் பேட்டியளித்து பிரச்-சனையை தீவிரப்படுத்தினர்.

பிரதமர் ஆசையால் அத்வானி செய்த தவறுகள்

தனது அரசியல் வாழ்விற்கு முடிவு கட்டும் அளவிற்கு கட்சியில் இருந்து நீக்கம் செய்த அத்வானி மீது ஜஸ்வந்த் சிங் வைத்த மிகப் பெரிய குற்றச்சாற்று: பிரதமராக வேண்டும் என்ற ஆசை-யால் பீடிக்கப்பட்ட இந்த மனிதர் பல தவறுகளைச் செய்தார். வாக்கிற்காக பணம் கொடுக்கப்பட்டது என்று கூறி நாடாளுமன்றத்தில் பணம் கொட்டப்-பட்ட நாடகத்தின் மய்யம் அத்வானி-தான் என்று ஜஸ்வந்த் சிங் வீசிய குற்றச்-சாற்றுக்கு இதுவரை அத்வானி பதிலளிக்கவில்லை!

இந்த உண்மையை இன்றைக்கு நாட்டுக்குத் தெரிவிக்கும் ஜஸ்வந்த் சிங் இதுநாள்வரை அதனை அதே பதவி பெறுவதற்குத்தானே (கட்சி நலனைக் காக்க என்று கூறுகிறார்) நாட்டு மக்க-ளிடம் கூறாமல் மறைத்தார்? இப்படி உண்மையை மறைத்து வேறொன்றைச் செய்வது பாரதிய ஜனதா கட்சிக்குப் புதியதல்லவே! மண்டலை எதிர்த்து கமண்டல யாத்திரை! இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்-சிக்கு நிகராக வளர்ந்துள்ளது என்றால் அதற்குக் காரணமும் அத்வானிதான் என்பதை ஜஸ்வந்த் சிங் உட்பட அவர் மீது இன்று குற்றம் சாற்றும் தலைவர்-கள் ஒருவரும் மறுக்க முடியாது.

நமது நாட்டிலுள்ள இதர பிற்படுத்-தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் உத்தரவை 1990ஆம் ஆண்டு பிரதமராக இருந்த வி.பி.சிங் பிறப்பித்தபோது - அவரை தலைவராகக் கொண்ட ஜனதா தளத்-தின் உதவியுடன் 88 தொகுதிகளைக் கைப்பற்றி குறிப்பிடத்தக்க பலத்துடன் இருந்த பாரதிய ஜனதா கட்சி - மண்டல் அறிக்கையை திரும்பப் பெற வேண்டும், இல்லையெனில் ஆட்சிக்கு அளித்து-வரும் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று அறிவித்தது.

இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் இட ஓதுக்கீடு அளிப்பதை சாதி ரீதியாக இந்திய சமூகத்தை பிளக்கிறார் வி.பி.சிங் என்று குற்றம் சாற்றியதோடு நிற்காமல், அயோத்தியில் இராமர் கோயிலை கட்டு-வோம் என்று கூறி, மதப் பிரச்சனையை திடீரென கையிலெடுத்தவர் அத்வானி.
நாட்டை கலவர பூமியாக்கினார்

அயோத்தியில் இராமருக்கு கோயில் கட்ட இரத யாத்திரை என்று தொடங்கி நாட்டை கலவர பூமியாக்கினார். ஆட்சியைப் பிடிக்கும் அரசியலுக்குப் பயன்படுத்தி, அதன் மூலம் மத ரீதியாக இந்திய சமூகத்தில் பிளவை உண்டாக்கிவிட்டவர் அத்வானிதான். மண்டல் அறிக்கைக்கு எதிராக கமண்ட-லம் ஏந்திய அத்வானி, வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது அயோத்தியில் கோயில் கட்டும் முழக்கத்தை - ஆட்-சிக்கு ஆதரவு தரும் கட்சிகளின் நிபந்தனைக்கு உட்பட்டு -தள்ளிவைக்க ஒப்புக்கொண்டார்! ஆக, அத்வானி மட்டுமல்ல, அன்றைக்கு சமூக நீதியை அழிக்க மதவாதத்தை கையிலெடுத்து-தான் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து உ.பி.யிலும், பிறகு மத்தியிலும் ஆட்சியைப் பிடித்தது.

எனவே, அத்வானியை மட்டும் பதவிக்காக எதையும் செய்பவர் என்று பாரதிய ஜனதா கட்சியில் எவரும் குறை சொல்லத் தகுதியற்றவர்களே. அக்கட்சியின் நோக்கும், அதனை இன்றுவரை பின்னிருந்து இயக்கும் ராஷ்ட்ரிய சுயம் சேவக், கட்சிக்கும் பதவியும், அதிகாரமும் கட்டாயத் தேவையாகும். இல்லையென்றால் அப்போது ஜனசங்கமும் இப்போது பாரதிய ஜனதா கட்சியும் இருக்குமா?

இவர்களின் நேர்மையற்ற அரசியல் நடவடிக்கைகளால் இந்த நாட்டின் சமூக ஒற்றுமை பாழ்பட்டுப் போனது. மத நல்லிணக்கம் சீர்குலைந்தது. விடுதலைப் போராட்டத்தினால் வலிமையடைந்த இந்திய நாட்டின் ஒருமைப்பாடு கேள்விக்குறியானது. இந்திய மக்கள் மத்தியிலும், நாடாளுமன்ற அவைகளிலும் இவர்கள் பேசிய எந்தப் பேச்சிலும் நேர்மை-யில்லை. டெல்லியில் ஒருநிகழ்ச்சி-யில் பேசிய அத்வானி இலங்கையில் போரை நிறுத்துமாறு மிகவும் வலியுறுத்திப் பேசினார்.

போர் நிற்கவில்லை. அதன்பிறகு அப்பிரச்சனை தொடர்பாக தனது கட்சியின் தமிழகத் தலைவர்களையும் கூட அழைத்து ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வந்தன. ஆனால் மத்திய அரசை நிர்ப்பந்திக்கும் எந்த அறிக்கையும் வரவில்லை.

பாதுகாப்பு வலயப் பகுதியில் தஞ்சமடையந்த அப்பாவி மக்கள் அனைவரையும் கொல்லத் திட்டம் தீட்டி தாக்குதல் நடத்தப்படுகிறது என்பது அத்வானிக்குத் தெரிவிக்கப்-பட்டது. அதனைத் தடுத்து நிறுத்த காட்டமான அறிக்கை வெளியிடுவார் என்று கூறப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் அல்லவா, தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அறிக்கை வெளிவரவில்லை.

இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கே படுகொலை செய்யப்பட்ட பின்னர், அங்கு எதுவுமே நடக்காதது-போல் அத்வானியும் அமைதி காத்தார். இவர்களைப் பொறுத்தவரை எல்லாமே வாக்கிற்காகவும் பதவிக்காகவும்தான். எதுவும் மக்களுக்காக அல்ல. அதனால்-தான் மசூதியை இடித்து இரத்த ஆற்றை ஏற்படுத்துகின்றனர். கலவரத்தை உருவாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட வழிவகுக்கின்றனர். இப்-படிப்பட்ட அரசியல் வழிகொண்ட ஒரு தலைவரின் அரசியல் வாழ்வு முடிவிற்கு வருகிறதென்றால் அதற்காக இந்திய மக்கள் கவலைப்பட ஏதுமில்லை. இன்-றைக்கு ஆட்சியிலும் வெளியிலும் உள்ள மற்றத் தலைவர்கள் இவரினும் வேறுபட்டவர்களா என்று மக்கள் சிந்தித்து சீர்தூக்கிப் பார்ப்பது நாட்டை பாதுகாத்துக் கொள்ள நிச்சயம் உதவும்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...