Monday, December 28, 2009

பத்திரிகைகளின் பார்வையில் நம் ஆசிரியர்





கல்கியின் கருத்து

கழகப் பொதுச் செயலாளர் அவர்களைப் பற்றி கல்கி ஏடு (24.6.1979) குளோஸ் அப் என்ற பகுதியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறது.

திரு. கி. வீரமணியிடம் சிகரெட் உட்பட எந்த வேண்டாத பழக்கமும் கிடையாது. எப்போதாவது பார்க்கும் ஆங்கில அறிவியல் படங்களைத் தவிர, சினிமா பார்ப்பதும் கிடையாது. ஈ.வெ.ரா. பெரியாரின் சுயமரியாதைப் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டு அதிகாரப் பூர்வமாய்ச் சேலம் மாவட்டத்தில் 1944இல் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது திரு. வீரமணி பத்து வயதுச் சிறுவன்.


இப்போது திராவிடர் கழகப் பொதுச் செயலாளர். மாணவப் பருவத்தில் எந்த வகுப்பிலும் முதல் அல்லது இரண்டாவது நிலையிலேயே இருப்பாராம். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ., ஆனர்ஸ் படிப்பில் சேருவதற்கு, முதல் பருவக் கட்டணம் கட்டப் பொருளாதார வசதி இல்லை. 

மிகவும் தயக்கத்துடன் பெரியாருக்கு உதவி கேட்டுக் கடிதம் எழுதினார். எங்கோ சுற்றுப் பயணத்திலிருந்த பெரியார் குறிப்பிட்ட நாளில் பணம் கிடைப்பதற்காகத் தந்தி மணியார்டரில் ரூ. 95 அனுப்பினார். பின்னர், தேர்வில் முதலாவதாய்த் தேறித் தங்கப் பதக்கத்துடன் அய்யாவிடம் சென்று, நன்றி சொல்லப் போனபோது பெரியார் கூறியது; அப்படியா? நான் பணம் அனுப்பிச்சேனா? இருக்கலாம். மறந்து போச்சு.

இவ்வாறு கல்கி ஏடு எழுதியிருக்கிறது.


- விடுதலை, 24.6.1979

கீதையின் மறுபக்கம் நூல் பற்றி தினமனி

கி.வீரமணி எழுதிய இந்நூல் இருபது அத்தியாயங்களையும், ஏழு பின்னிணைப்பு-களையும் கொண்டுள்ளது. பாரதம் நடந்த கதையா? கீதை ஒரு கொலை நூல்தான். கிருஷ்ணன் ஒரு கபட வேடதாரி, கீதையின் முரண்பாடுகள், விநோதக் கருத்துகள் முதலிய தலைப்புகளையும் உள்ளடக்கியது.

இராமாயணம் என்ற காப்பியம் மகா-பாரதத்திற்குப் பின் வந்தது (பாகம் 17) என்றும், ஒரே மூலமான கீதையிலிருந்து பலர், பலவகையான போதனைகளைப் பெற்றதன் காரணம் அதிலுள்ள கருத்துகள் நம்ப-முடியாத அளவிற்கு முரண்பட்டவை என்பது-தான் (பக்.40) என்றும், பக்தி நெறியை இந்து மதம் பவுத்தத்திலிருந்து எடுத்துக்-கொண்டது (பக்.57) என்றும், ஆத்மா என்-றொன்று இல்லை (பக்கங்கள் 116.131) என்றும். ஒரு புதிய புராணத்தை இயற்றுகிற யாரும் வியாசர் என்ற பெயரால் அழைக்கப்படு-வ-துண்டு (பக்.226) என்றும் பல கருத்துகள் இந்-நூலில் இடம் பெறுகின்றன.

ஆன்மீகக் கருத்துகளை ஒட்டி, தொன்று-தொட்டு இருதரப்பு வாதங்களும் இருந்து-கொண்டே வந்திருக்கின்றன. இவை மேலும் தொடர்ந்து கொண்டு தானிருக்கும். சில சமயம் ஒரே கட்சியைச் சார்ந்தவர்களுக்-குள்-ளும் கூட சில விஷயங்களில் கருத்து வேறு-பாடுகள் எழுவதைப் பார்க்கலாம். இவர்-களுக்குப் பின் வருபவர்கள் இந்தக் கருத்-துகளை விரிவாக வாதம் செய்து. அவரவர்-கள் கருத்துகளையும் தருவார்கள். இந்த முறை-யில் தான் அறிவு வளர்ச்சி பெறுகிறது.

இந்த ஆய்வு நூலின் ஆசிரியர் பல மேற்-கோள்களையும், ஆராய்ச்சியாளர்கள் கூற்று-களையும், அறிஞர் பெருமக்களின் கருத்து-களையும் ஆதாரமாகக் காட்டி. சிந்தனைக்-குரிய பல கேள்விகளையும் கருத்துகளையும் மக்கள் முன் வைத்துள்ளார். அவரது முயற்சி பாராட்டத்தக்கது.

சி. இராமகிருஷ்ணன்
தினமணி விமர்சனம். 
8.10.1998


சாவியின் பார்வையில்

கருப்புச் சட்டை அணிந்து கொண்டு இவர் நாத்திகவாதம் பேசுவதைக் கேட்டால், பலர் காதை மூடிக் கொள்வார்கள். இன்னும் பலர் துடிப்பார்கள். நாராயணா இதை எல்லாம் கேட்டுக் கொண்டு உயிரோடு இருக்க வேண்டுமா? என்றும் சிலர் வருத்தப்படுவார்கள்.

ஆனால், அதே வீரமணியைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பழகினால் _ தர்ம சாஸ்திரங்கள் ஒரு நல்லவனைப் பற்றி எப்படி எல்லாம் சித்திரிக்குமோ, அப்படிக் காட்சி தருவார்.

பண்புப் பழமாய்க் கனிந்திருக்கும்! பேச்சு நெய்யாய் உருகி நிற்கும்! நாகரிகம் இதம் பதமாய் இருக்கும்!

சின்னஞ்சிறு வயதில் மேடையில் ஸ்டூல் போட்டு ஏறி நின்று பேசிப் பழகினார். இப்போது எந்த மேடையிலும் இவர் பேச்சின் உயரத்துக்கு யாரும் வர முடிவதில்லை.

கொள்கையில் சிங்கம்; குணத்தில் தங்கம்.

(சாவி, 31.3.1985 இதழ்)

THE HINDU

தமிழர் தலைவர் பற்றி இந்து ஏட்டின் கனிப்பு


There is Justifiable euphoria in the AIADMK the Tamil Nadu Reservation Bill, which will now become an Act, but keen observers feel that the ordeals for the AIADMK Government are not yet over, in securing the interests of the backward classes on a firm basis.

The General Secretary of the Dravidar Kazhagam, Mr.K. Veeramani alone, these observers say, seems to have sensed the imminent dangers which has made him stress the need to remain wary about the next moves of the anti-reservationists while all other parties had generally welcomed the Presidential assent, and urged for a consitutional amendment to get a permanent protection.

தமிழ்நாடு இடஒதுக்கீடு மசோதா-வுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தது பற்றி அ.இ.அ.தி.மு.க.வில் நியாயமான மனநிறைவோடு கூடிய மகிழ்ச்சி நிலவுகிறது. இப்பொழுது அது சட்டமாகிறது. ஆனால், பிற்படுத்-தப்-பட்ட வகுப்-பாரின் நலன்களைப் பெறுவதில், அ.இ.அ.தி.மு.க.-அரசின் இடர்-நிறைந்த முயற்சிகள் முடிந்துவிட-வில்லை எனக் கூர்மையான நோக்கர்கள் கருது-கிறார்கள்.

மற்ற கட்சிகள் எல்லாம் பொதுவாகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை வர-வேற்றுள்ள நிலையில், திராவிடர் கழகப் பொதுச் செய-லாளர் திரு கி.வீரமணி மட்டும் வரக்கூடிய ஆபத்தை உணாந் துள்ளார் என்றும், அதன் காரணமாக இடஒதுக்-கீட்டிற்கு எதிரானவர்களின் அடுத்த நட--வடிக்கை குறித்து எச்சரிக்-கையாக இருக்க-வேண்டும் என்றும், அதை முறியடித்து நிலை-யான பாதுகாப்புப் பெறுவதற்கு அரசமைப்புச் சட்டத் திருத்தம் ஒன்று கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் இந்த நோக்கர்கள் கூறுகிறார்கள்.

நன்றி: தி இந்து, 23 ஜூலை 1994

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...