Thursday, December 24, 2009

பார்ப்பன வீடுகளில் பெண்கள் பெரியார் படத்தை வைக்கவேண்டும்!


பார்ப்பன வீடுகளில் பெண்கள் பெரியார் படத்தை வைக்கவேண்டும்! பெரியார், அண்ணா ஜெயலலிதாவுக்கு அரசியல் வியாபார லேபிள்
ஆசிரியருக்கும், கலைஞருக்கும் - பெரியார் அண்ணா குருதி ஓட்டத்தில் கலந்தது!

சென்னை, செப். 24_ பார்ப்பனப் பெண்கள் தங்கள் வீடுகளில் பெரியார் படத்தை மாட்டி வைக்க வேண்டு-மென்று பேராசிரியர் சுப.வீர-பாண்-டியன் பேசினார். ஜெயலலிதாவுக்கு அரசியல் வியாபாரம் நடத்தி அண்ணா, பெரியார் பெயரை லேபிளாகப் பயன்படுத்துகிறார். ஆசிரியர் அவர்களுக்கும், கலைஞர் அவர்களுக்கும் பெரியார், அண்ணா என்பது அவர்-களுடைய குருதி ஓட்டத்தில் கலந்த ஒன்று என்று உயர்கல்வித் துறை அமைச்-சர் க.பொன்முடி கூறினார்.
தென்சென்னை மாவட்ட தி.க. சார்பில் திருவல்லிக்கேணியில் 18.9.2009 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சுப.வீரபாண்டியன்
இந்நிகழ்ச்சியில் திராவிட இயக்கத் தமிழர்-பேரவை பொதுச் செய-லாளர் சுப.வீரபாண்டி-யன் ஆற்றிய உரை வருமாறு:
இங்கே நமது திராவிடர் கழக பொதுச் செய-லாளர் கவிஞர் கலி.-பூங்குன்றன் அவர்கள் பேசும்பொழுது இந்த திருவல்லிக்கேணி பகுதி திராவிட இயக்க முதல்-விதை விதைத்த மண் என்று குறிப்பிட்டுச் சொன்னார்கள். செப்டம்-பர் மாதம் என்று சொன்-னால் அது தந்தை பெரி-யார் பிறந்த நாளான செப். 17ஆம் தேதியும், செப். 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் என்பதுதான். நமக்கு ஞாபகம் வரும்.
செப்டம்பர் 5ஆம் தேதி
செப்டம்பர் 5ஆம் தேதி என்றால் அது டாக்டர் ராதாகிருஷ்-ணன் பிறந்த நாள். அது ஒரு முக்கிய நாள் என்று அதைத்தான் சொல்வார்-கள். தெரிந்தே நான் இதை விட்டுவிட்டேன். அதற்குக் காரணம் உண்டு. செப்டம்பர் 5ஆம் தேதி என்பது செக்கிழுத்த செம்மல் தியாகி வ.உ.சி. பிறந்தநாள் என்பதை மறைத்துவிடுகிறார்கள், அவர்கள் _ பார்ப்பனர்-கள் என்பதை நாம் அறியாதவர்கள் அல்லர். திருத்தணியில் பார்ப்பன குலத்தில் பிறந்தவர் டாக்-டர் ராதாகிருஷ்-ணன். தூத்துக்குடியில் சூத்திர-னாகப் பிறந்தவர் வ.உ.-சிதம்பரனார் என்பது-தான் அதற்குக் காரணம்.
பார்ப்பனர் வீட்டில் பெரியார் படம்
நம் இனத்திற்காகவும், தமிழினத்திற்காகவும், உலக மனிதநேயத்-திற்-காகவும் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்கள் எடுத்-துவைத்த அத்துணை கருத்துகளையும் இன்-றைக்கு உலகத்தில் உள்-ளோர் உணரத் தொடங்-கி-யிருக்கிறார்கள்.
தந்தை பெரியார் உலகில் உள்ள மக்கள் சமத்துவத்துடன் வாழ-வேண்டும் என்பதற்காக பாடுபட்டார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்-திற்காகப் பாடுபட்டவர்.
பார்ப்பன பெண்கள் மொட்டை அடித்து மூலையில் உட்கார வைக்-கப்பட்ட நிலைகளை எல்-லாம் அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அந்தப் பார்ப்பன பெண்-களுக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார். எனவே, ஒவ்-வொரு பார்ப்பன பெண்-களும் அவரவர்களுடைய வீட்டில் தந்தை பெரியார் அவர்களுடைய படத்தை மாட்டி வைக்க வேண்டும்.
நவீன இந்துத்துவா
டபுள்யு.ஏ.வில்கின்சன் என்பவர் நவீன இந்துத்-துவா என்ற ஒரு நூலை எழுதியிருக்கின்றார். அந்த நூலை நான் தற்-பொழுது படித்துக்-கொண்டி-ருந்தேன். பல அதிர்ச்சியான தகவல்கள் அந்த நூலில் இருந்ததை என்னால் உணர முடிந்தது-
சதி என்கிற பெய-ராலே பெண்களை நெருப்-பிலே போட்டுக் கொன்-றார்கள். இது நெருப்-பிலே பெண்களுக்கு நடந்த கொடுமை.
அதேபோல நெருப்-பில் மட்டுமல்ல; நீரினா-லும் பெண்களுக்கு பெரிய கொடுமைகள் இழைக்கப்-பட்டி-ருக்கிறது என்பதை விளக்கியிருக்கின்றார். கங்கைக் கரையில் மிகவும் குளிர்ந்த நீர் ஓடிக்கொண்-டிருக்கும் இடத்தில் ஈமச்சடங்குகள் நடப்பது வழக்கம்.
ஒரு குடும்பத்தில் சிறந்த ஒருவருக்கு ஈமச்சடங்கு நடத்த ஆரம்பிக்கின்-றார்கள். அப்பொழுது மிகவும் குளிர்ந்த நீரில் அந்த குடும்பத்தைச் சார்ந்த பெண்ணை கழுத்-துவரை உள்ள தண்ணீ-ரில் வலுக்கட்டாயமாக நிற்க வைக்கிறார்கள். 6 மணிநேரம் ஈமச்சடங்-குகள் நடைபெறுகிறது. அதுவரை அந்த பார்ப்-பனப் பெண் குளிர் நீரில் நடுங்கி விறைத்துப் போகிறார். பிறகு தண்-ணீரில் இருந்து மேலே வருகின்ற அந்தப் பெண்ணை ஈமச்சடங்கு நடத்துவோர் அழைத்து வருகின்றனர்_பார்ப்பனப் பெண்ணைத் தொடக்-கூடாது. ஒரு கயிற்றால் கட்டி இழுத்து வருகிறார்கள்.
நூலாசிரியர் வில்கின்-சன் கங்கைக் கரையில் நேரில் கண்ட சம்ப-வத்தை அப்படியே இந்த நூலில் பதிவு செய்தி-ருக்கிறார்.
அப்படி இழுத்து வரப்பட்ட பெண் நடக்க முடியாமல் தண்ணீர் தண்ணீர் என்று கேட்டு கதறுகிறார். எந்தப் பார்ப்பனப் பெண்ணும், வயது முதிர்ந்த பார்ப்பன பெண்கள்கூட இரக்கப்-பட்டு அந்தப் பெண்ணுக்-குத் தண்ணீர் கொடுக்க முன்வரவில்லை. கார-ணம், அதுதான் அவர்-களுடைய கலாச்சாரம்.
ஓர் இளம்பெண் மட்டும் யாருக்கும் தெரி-யாமல் அந்தப் பெண்-ணுக்கு குடிக்க ஒரு மடக்கு தண்ணீர் கொடுக்-கிறார். போய்க்கொண்-டிருக்கிற உயிர் திரும்பி வந்ததைப்போல தண்ணீரைக் குடித்த அந்தப் பார்ப்பனப் பெண் தனக்குத் தண்-ணீர் கொடுத்த இளம்-பெண் காலிலே விழுந்து வணங்கி கதறுகிறார். நீதான் எனக்கு தெய்வம் என்ற குமுறி அழுகிறார். இது எப்படிப்பட்ட கொடுமை என்பதை பார்ப்பனப் பெண்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அதனால்-தான் ஒவ்வொரு பார்ப்-பனப் பெண்கள் வீட்டி-லும் தந்தை பெரியாரு-டைய படத்தை மாட்-டவேண்டும் என்று சொல்லுகின்றேன்.
இன்றைக்கு தந்தை பெரியார் அவர்-களு-டைய கொள்கை வழியில், அண்ணா அவர்-களு-டைய கொள்கை வழியில் நின்று நமது முதலமைச்-சர் கலைஞர் அவர்கள் சிறப்பாக ஆட்சியை நடத்திக் கொண்டு வரு-கின்றார். அவரு-டைய ஆட்சிக்கு நாம் எல்-லாரும் துணை-நின்று ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு பேசினார் சுப.வீரபாண்-டியன்.
உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அடுத்து தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள் ஆற்றிய உரை-யில் குறிப்பிட்ட முக்கிய செய்தி வருமாறு:
தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த-நாள், பேரறிஞர் அண்-ணா அவர்களுடைய பிறந்த நாள் திமுக பிறந்த நாள் என்று இன்றைக்கு நாடெல்லாம்_ மூலை-முடுக்குகளில் எல்லாம் முப்பெரும் விழா உற்சாக-மாகக் கொண்டா-டப்பட்டு வருகின்றது.
திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இன உணர்-வோடு கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.
தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் ஏதோ ஒரு சடங்கிற்காக, சம்பிரதாயத்திற்காகக் கொண்டாடப்படுகின்ற விழாக்கள் அல்ல இவை.
சில பேரை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அவர்கள் கொண்டாடு-கின்ற விழா எப்படி-யிருக்கின்றது தெரியுமா? ஒரு முன்னாள் பெண் அமைச்சர் கோவிலில் வேப்பிலை ஆடை அணிந்-துகொண்டு ஆடி-யிருக்-கிறார். ஏனென்-றால், உலகத்திலேயே பெரிய இலை வேப்-பிலை பாருங்-கள். அந்த வேப்-பிலை-யைச் சுற்றிக்-கொண்டு கோயிலைச் சுற்றி ஆடிக்-கொண்டு வருகின்றார். அந்தக் காட்சியைப் பார்க்க ஒரு கூட்டம் அங்கேயும் இருந்தது. (சிரிக்க-_கை-தட்டல்)
நீங்களே புரிந்து-கொள்வீர்கள். அதே-போல அந்த அம்மா-வுக்குப் பிறந்தநாள் என்ற பெயராலே _ பிரார்த்-தனை என்ற பெயராலே மண்சோறு சாப்பிட்டவர்-களும் அவர்கள்தான்.
அண்ணா பெயரை கட்சியில் வைத்துக்கொண்டு
இப்படிப்பட்ட ஒரு கட்சியினர்தான் அண்ணா பெயரை தன் கட்சியிலும், கொடியிலும் வைத்துக்-கொண்டு அண்ணா-வையும், தந்தை பெரியா-ரையும், திராவிட என்ற பெயரையும், ஒரு லேபி-ளாகப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் வியா-பாரம் நடத்திக் கொண்-டி-ருக்கின்றார்கள் அந்தப் பக்த சிரோன்மணிகள். பெரியார் அண்ணா பெயரை விளம்பரத்திற்-காகப் பயன்படுத்திக்-கொண்டு வருகின்றார்கள்.
இன்றைக்குக் கலை-ஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களு-டைய கொள்-கைகளை ஆட்சியின் சட்டங்க-ளாக ஆக்கி அவருக்குப் பெருமை சேர்த்துக்-கொண்டு வருகின்றார். அதேபோல அண்ணா அவர்களது வழியில் நின்று ஆட்சியை நடத்-திக்கொண்டு வருகின்றார்.
தந்தை பெரியார் ஒரு பெரிய கூட்டத்தை சேர்த்துக் கொண்டு இயக்கத்தைத் தொடங்க-வில்லை. பிரெஞ்சுப் புரட்சியே ஒரு மாநாடு போட்டு ஆரம்பிக்க-வில்லை. ஒரு டென்னிஸ் கோர்ட்-டில்தான் தொடங்கியது.
2000ஆம் ஆண்டு-கால சமூகக் கொடு-மைகளை, அநீதிகளை அழித்து மக்களிடத்தில் ஒரு மாறுதலை ஏற்-படுத்திய-வர் தந்தை பெரியார்.
நம்முடைய முதல-மைச்--சர் கலைஞர் அவர்-கள் ஈரோட்டுக் குரு-குலத்திலே பயின்ற காரணத்தால்-தான். பாராட்டிப் போற்றி-வந்த பழைமைலோகம்
ஈரோட்டுப் பூகம்பத்-தால் இடியுதுபார்!
என்று எழுதினார்.
சமூகப் புரட்சியை ஏற்படுத்தியவர் பெரியார்.
தந்தை பெரியார்-அவர்கள் தனது மேடைப் பேச்சுகளால் ஒரு சமூகப் புரட்சியை, சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தி-யவர் என்பதை எதிரி-களால்கூட மறுக்க முடியாது.
தந்தை பெரியார் அவர்-கள் ஒரிஜினல் திங்க்கர் நமது ஆசிரியர் அவர்களைப்-போல _ எங்-களைப்போல _ சபாபதி மோகன் அவர்-களைப்-போல பட்டம் படித்த-வர் இல்லை. தந்தை பெரியார். சுயமாகச் சிந்தித்தார்.
மனிதனை நினைத்தார் - பெரியார்
இந்த நாட்டிலே ஏன் உயர்ந்த ஜாதிக்காரன் ஆதிக்கம் செலுத்த வேண்-டும்? தாழ்ந்த ஜாதிக்கா-ரன் ஏன் அடிமையாக இருக்க வேண்டும்? அதற்கு அடிப்-படை மூலகாரணம் என்ன என்று சிந்தித்தார். கடவு-ளின் பெயரால், மதத்தின் பெயரால் இந்த நாட்டு மக்கள் அடிமைப் படுத்-தப்பட்-டிருக்கின்-றார்கள் என்-பதைக் கண்-டறிந்-தார். எனவேதான் கடவு-ளை மற! என்று சொன்ன தந்தை பெரியார் மனித-னை நினை! என்று சொன்னார்.
முதலமைச்சர் கலை-ஞர் அவர்கள் மனிதனை நினைத்த காரணத்தால்-தான் தந்தை பெரியார் அவர்களின் எண்ணத்தை ஈடேற்றுகின்ற வகையிலே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு--வந்தார்.
பார்த்தசாரதி கோயிலில் நம்மவர்
இங்கே அருகேயிருக்-கின்ற பார்த்தசாரதி கோயிலில் நாளைக்கு கோயில் கர்ப்பக் கிரகத்-திற்குள் சென்று மணிய-டிக்கப் போகிறார். அப்-பொழுது கோயிலுக்கு வருகின்ற பார்ப்பனர்கள் அவர்களே சொல்லிவிடு-வார்கள். கோயிலுக்குள் கடவுள் இல்லை! கடவுள் இல்லை! போகாதீர்கள் என்று பார்ப்பனர்களே சொல்லிவிடுவார்கள் என்று தந்தை பெரியார் அவர்கள்தான் இதை விளக்கிச் சொன்னார். அந்த சமூக மாறுதல் கலைஞர் ஆட்சியில் வரப்போவதை நாம் காணத்தான் போகின்றோம்.
பெரியாரின் கனவுகள் நனவாகின்றன
தந்தை பெரியார் அவர்களுடைய கனவு-கள் எல்லாம் இன்-றைக்குக் கலைஞர் ஆட்சி-யில் நனவாகிக் கொண்-டி-ருக்கின்றன.
மத்திய அரசு நிகழ்ச்-சியிலே சரஸ்வதி வந்தனா என்ற பாடல் பாடியதற்-காக மத்திய அரசு நிகழ்ச்சியையே புறக்-கணித்து-விட்டு வெளியே வந்தவர்தான் நம்முடைய பேராசிரியர் அவர்கள்.
ஆனால், சென்ற அதிமுக ஆட்சி மதச்-சார்பற்ற ஆட்சியாக நடைபெற்-றதா? ஒரு அரசாங்கம் என்றால் மதச்சார்பற்ற அரசாக நடைபெற வேண்டும். மக்களை சமத்-துவமாக, சகோதரத்துவ-மாக நடத்த வேண்டும்.
அந்த அம்மையாரின் எண்ணம்
வெர்ஜின் என்றால் என்ன பொருள் என்-றால் ஆண்களோடு எந்த தொடர்பும் இல்-லாவ-ருக்குப் பெயர்தான் கன்னி என்று சொல்-லுவார்கள்.
ஆனால் அதை-விட்டு விட்டு எல்லா ஆண்-களையும் நான் சமமாகத்-தான் பாவிப்-பேன் என்று சென்ற ஆட்சியில் ஆண்டு--கொண்டிருந்த அந்த அம்மையார் சொன்-னால் அது அவருடைய சாமர்த்-தியம். (சிரிப்பு) அந்த அம்மாவுக்கு அண்ணா-வையும் தெரி-யாது, பெரி-யாரையும் தெரியாது. மதச்சார்பற்ற தன்மையும் தெரியாது. எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள் என்று சொன்னவர் தந்தை பெரியார்.
சிணீமீ வேறு; சிறீணீ வேறு. ஜாதி என்பது மிகப்பெரிய போராட்-டம் கொண்-டது. மிகக்-கொடி-யது என்று ஏசியன் டிரா-மாவில் எழுதிய நோபல் பரிசு பெற்ற குன்னர்-மிர்தால் விளக்கம் சொன்-னார்.
அரசியல் வியாபா-ரம் இன்றைக்கு அதிமுக என்ற ஒரு கட்சி அண்ணா பெயரை சொல்லிக்-கொண்டு _ தந்தை பெரி-யாரை லேபிளாக வைத்துக் கொண்டு _ அதைப் பட-மாக கொண்டு அரசியல் வியாபாரம் செய்து-கொண்டி-ருக்கிறார்கள்.
தந்தை பெரியார்-_அண்ணா கொள்கை-களை இளைய தலைமுறை-யினருக்குப் போதிக்க வேண்டும் என்பது ஆசிரி-யர் அவர்களுக்கும், கலைஞர் அவர்களுக்கும் குருதி ஓட்டத்திலே கலந்து ஒன்று.
அதனால்தான் வரும் 26ஆம் தேதி நமது ஆசிரி-யர் அவர்களுக்குத் தந்தை பெரியார் விருதும், முதல-மைச்சர் கலைஞர் அவர்-களுக்கு அண்ணா விருதும் காஞ்சிபுரத்தில் நடை-பெற-விருக்கின்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா--வில் வழங்கப்பட-விருக்-கின்றன. இவ்வாறு உரை-யாற்றி-னார் அமைச்சர் க.பொன்-முடி அவர்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...