Monday, August 20, 2007

2007-லும் கோயில் நுழைவுக்காகப் போராடும் நிலையா?

தமிழ்நாட்டில் இன்னும் சில ஊர்களில் குறிப்பாக, கிராமக் கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக் கூடாது என்கிற கொடுமை உண்மையிலேயே வெட்கப் படத்தக்கதாகும்.70, 80 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய போராட் டங்களில் சுயமரியாதை இயக்கம் ஈடுபட்டு, அதன்பின் சட்ட ரீதியாகவே தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவு என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்கிற தந்தை பெரியார் அவர்களின் அறிவிப்பு -வெற்றி பெற்றுள்ள தறுவாயில், கோயில் கருவறைக்குள்ளேயே தாழ்த்தப்பட்ட தோழர்கள் அதிகாரப்பூர்வமாக அர்ச்சக ராகலாம் என்கிற அளவுக்கு மனித உரிமை வளர்ச்சி பெற்றுள்ள இந்தக் காலகட்டத்தில் கோயிலுக்குள்ளேயே தாழ்த்தப்பட்டவர்கள் இன்னும் சில இடங்களில் நுழைய அனுமதியில்லை என்பது எந்த வகையிலும் அனுமதிக் கப்பட முடியாத ஒன்றாகும்.சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் உள்ள திரவுபதை யம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக் கப்படவில்லை என்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் கோயில் நுழைவுப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு, பிரச்சினைக்குத் தீர்வு காணும்வரை கோயிலை இழுத்து மூடிவிடுவது என்று முடிவு செய்து, அதன்படி கோயிலும் இழுத்து மூடப்பட்டுள்ளது.இந்து அறநிலையத்துறை இதில் தலையிட்டு, தமிழ்நாடு முழுவதும் இந்துக் கோயில்களில் எங்கெங்கு தாழ்த்தப் பட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லையோ, அந்தக் கோயில் களில் எல்லாம் அவர்களை அனுமதிக்க சட்ட ரீதியான முயற்சியினை மேற்கொள்ளவேண்டியது சட்டப்படியான கடமையாகும்.பிரச்சினை வரும் சூழல் இருந்தால் சுமுகமாகப் பேசிப் பார்ப்பதில் ஒன்றும் தவறு கிடையாது - நியாயத்துக்குக் கட்டுப்பட மேல்ஜாதி(?) மக்கள் மறுப்பார்களேயானால், அவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கவும் தயங்கக்கூடாது.21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோமா அல்லது கற்காலத்தை நோக்கிப் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோமா?பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக் கச்சியேந்தல் போன்ற தாழ்த்தப்பட்டோருக்கென்று ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் 10 ஆண்டுகாலமாக தேர் தலையே நடத்த முடியாது என்றிருந்த நிலையையே மாற்றி, அங்கெல்லாம் தேர்தலையும் நடத்தி, இந்த அரசு பெரியார் அரசு என்று நிரூபித்த மானமிகு மாண்புமிகு கலைஞர் ஆட்சி, இந்தப் பிரச்சினையிலும் தலையிட்டு, ஒரு சுமுகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.இந்துக்களே ஒன்றுபடுவீர் என்று குரல் கொடுக்கும் சங் பரிவார்க் கும்பல் எங்கே போய் இப்பொழுது ஒளிந்து கொண்டுள்ளனர் என்று தெரியவில்லை.பேச்சுவார்த்தைக்குக் கட்டுப்பட்டு, தீர்வு காணும்வரை போராட்டத்தை ஒத்தி வைப்போம் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு அறிவித்திருப்பது அவர்களின் பொறுப்புணர்ச்சியைக் காட்டக்கூடிய ஒன்றாகும்; இதனைப் பலவீனமாக யாரும் கருதக் கூடாது.சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமு தாயத்தைச் சேர்ந்த தலைவர்களும், அரசியல் கட்சியி னரும், சமூக அமைப்பினரும் ஓரிடத்தில் அமர்ந்து பேச வேண்டும்.தாழ்த்தப்பட்டோர் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று சொல்லுகிற தமிழகக் கட்சி ஏதும் கிடையாதே. அப்படியிருக்கும்பொழுது இதில் சுமுகத் தீர்வு காண்பதில் என்ன இடர்ப்பாடு இருக்க முடியும்? அப்படியே முட்டுக் கட்டை போட யாரேனும் முன்வந்தால் அவர்களை எளிதில் அடையாளம் காணமுடியுமே!இது ஒரு கட்சிப் பிரச்சினையாக யாரும் கருதத் தேவை யில்லை. ஒட்டுமொத்தமான மனித உரிமைப் பிரச்சினை யாகும். இதில் திராவிடர் கழகம் தன் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் அளிக்க எப்பொழுதும் தயாராகவே உள்ளது என்பதையும் அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விடுதலை தலையங்கம்(17.08.207)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...