Saturday, March 14, 2020

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்குப் பதில் - மதவெறியைத் தூண்டும் திட்டங்களைத் தீட்டும் இந்திய பிரதமர்: ஜப்பான் பத்திரிகை சாடல்


பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் வெற்றி பெற்றிருக் கலாம்; ஆனால் அவரது கொள்கை களால் இந்தியாவின் பொருளா தாரம் முடங்கியுள்ளது என்று ஜப் பான் நாட்டைச் சேர்ந்த ‘நிக்கி ஆசியன் ரிவியூ’ ஏடு,விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக மார்ச் 11 அன்று முகப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த ஏடு மேலும் குறிப் பிட்டிருப்பதாவது:
“2014-ஆம் ஆண்டு பிரதமர் மோடிஆட்சிக்கு வந்ததும், குஜராத் மாநிலத்தில் ஏற்படுத்திய பொருளா தார முன்னேற்றத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்துவேன்'' என்று வாக்குறுதி அளித்தார்.
ஆனால், முதல் 5 ஆண்டுகால ஆட்சியிலேயே, பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., உள்ளிட்ட நடவடிக்கை களால் நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் மோடி நிலைகுலையச் செய்துவிட்டார். இதனால் நாடு பல நெருக்கடிகளுக்கு  உள்ளானது என் றாலும், 2019-இல் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், இப்போதும், பொருளாதார மேம் பாட்டுக்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மாறாக, 2002-இல் குஜ ராத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் உயிர்போன தற்கு காரணமான, மத வன்முறையை மீண்டும் செயல்படுத்தத் தொடங்கி விட்டார். தனக்கிருக்கும் மிகப் பெரிய பெரும்பான்மையைப் பயன் படுத்தி பொருளாதார நெருக்கடி களுக்கு தீர்வு காண்பதற்கு பதில், மதவெறியைத் தூண்டும் திட்டங் களைத்தான் மோடி அரசு இரட்டிப் பாக்கி வருகிறது.
காஷ்மீரின் சிறப்பு உரிமை பறிப்பு, இஸ்லாமியர்களை பாகு படுத்தும் குடியுரிமை திருத்தச் சட் டம்போன்ற ஆர்எஸ்எஸ்-ஸின் திட்டங்களை செயல்படுத்தி வரு கிறது. இந்த மதவெறி செயல்பாடுகள் மூலம், இந்தியாவின் பொருளாதா ரத்தை பிரதமர் மோடி செயலிழக்கச் செய்துவிட்டார்'' என்று ‘நிக்கி ஆசியன் ரிவியூ’ ஏடு சாடியுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...