Thursday, January 23, 2020

இலங்கைப் போரில் காணாமல் போனவர்கள் இறந்து விட்டனராம்: கூறுகிறார் அதிபர் கோத்தபய ராஜபக்சே

இலங்கை போரில் காணாமல்போன ஆயிரக்கணக்கானோர் இறந்துவிட்டனர் என இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக் கும், இலங்கை இராணுவத்துக்கும் 30 ஆண்டு காலமாக நடந்த உள்நாட்டு போர் கடந்த 2009ஆம் ஆண்டு முடி வடைந்தது. இந்த காலக்கட்டத்தில் மொத்தம் 1 லட்சம் பேர் பலியாயினர் என கூறப்படுகிறது.
இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக் கானோர் படுகொலை செய்யப்பட்டனர் என தமிழர்கள் குற்றம்சாட்டினர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த இலங்கை இராணுவம், விடு தலைப் புலிகளிடமிருந்து தமிழர்களை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மனி தாபிமான நடவடிக்கை என கூறியது.
இறுதிக்கட்ட போரில் தமிழர்கள் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக சர்வ தேச மனித உரிமை அமைப்புகள் கூறு கின்றன. ஆனால் மொத்தமே 20 ஆயிரம் பேர்தான் காணாமல் போயினர் என இலங்கை அரசு கூறி வருகிறது.
இந்நிலையில், அய்.நா ஒருங்கிணைப் பாளர் ஹனா சிங்கரை, இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே கடந்த வாரம் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், ‘தேவையான விசாரணை நட வடிக்கைகள் முடிந்த பிறகு, காணாமல் போனவர்களுக்கு இறப்பு சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தாக இலங்கை அரசா ணையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இறப்பு சான்றிதழ் வழங்கிய பின் அந்த குடும்பத்தினருக்கு உதவிகள் அளிக்கப்படும். இந்த தீர்வு, பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு உதவும் என அதிபர் கோத்தபயா ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை போரில் காணாமல் போனவர்கள் இறந்து விட்டதாக முதல் முறையாக அதிபர் கோத்தபயா ராஜபக்சே ஒப்புக் கொண் டுள்ளார். இவர்தான் இலங்கை பாது காப்பு அமைச்சராக இருந்து, புலிகளுட னான போரை முடிவுக்கு கொண்டுவரு வதில் முக்கிய பங்காற்றினார்.
காணாமல் போனவர்களின் பிரச்சி னைகளை தீர்க்க கோத்தபயா திட்டங் கள் வகுத்துள்ளதாக அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது. அதில், ‘‘இலங்கை போரில் காணாமல் போனவர்கள், உண் மையிலேயே இறந்துவிட்டனர் என அதிபர் விவரித்துள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...