Thursday, January 23, 2020

ஈழத்தமிழர்களைக் கொன்றது போதாதா? இலங்கை பாதுகாப்புக்கு இந்தியா ரூ.350 கோடியாம்!

கொழும்பு வில், இலங்கை அதிபர் கோத் தபய ராஜபக்சேவுடன், இரு நாட்டு பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்திய, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இலங்கையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு, இந்தியா சார்பில், 350கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்தியாவின் தேசிய பாது காப்பு ஆலோசகர் அஜித் டோவல், பல்வேறு நாடுக ளின் தலைவர்களை சந்தித்து, இரு நாட்டு பாதுகாப்பு உள் ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதன்படி அஜித் தோவல், நேற்று முன்தினம் இலங்கை சென்றார். அங்கு, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேயுடன், தேசிய பாதுகாப்பு, உளவுத் துறை தகவல் பகிர்வு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் இரு நாடு களுக்குமான ஒத்து ழைப்பை மேம்படுத்துவது தொடர் பாக பேச்சு நடத்தினார்.
இலங்கை, மாலத்தீவு மற் றும் இந்தியா இடையேயான, கடல் மண்டலம் தொடர் பான உளவுத்துறையை மறு ஆய்வு செய்வதன் முக்கியத் துவம் குறித்து விளக்கிய அஜித் தோவல், இந்த செயல் முறைக்கு மற்ற நாடுகளையும் பார்வையாளர்களாக கொண்டு வர வேண்டும் என்றார். டோவலுடன் நடந்த பேச்சு குறித்து இலங்கை அதிபர் கோத்தபய திருப்தி தெரிவித் துள்ளார். ''இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத் துவது, விவாதத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது,'' என்று, அவர் கூறினார்.
இலங்கை அதிபர் அலு வலகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: இருதரப்பு உறவு களை மேம்படுத்துதல் மற் றும் இரு நாடுகளின் ஆயுதப் படை, கடலோர காவல் படைக்கு இடையிலான ஒத் துழைப்பை வலுப்படுத்துதல் குறித்து விவாதிக்கப் பட்டது. பிராந்திய கடல் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட் டது. இலங்கையின் பாது காப்பு நடவடிக்கைகளுக்காக, 350 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என, இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...