Saturday, January 25, 2020

கீழடியில் அடுத்த வாரம் ஆறாம் கட்ட அகழாய்வு துவங்கும்


சிவகங்கை மாவட்டம் கீழடியில், அடுத்த வாரத்தில், ஆறாம் கட்ட அகழாய்வு துவங்க உள்ளது. தமிழகத்தின், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில், ஏற்கெனவே, மத்திய தொல்லியல் துறை சார்பில், மூன்று முறையும், தமிழக தொல்லியல் துறை சார்பில், இரண்டு முறையும் அகழாய்வுகள் செய்யப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து, இந்தாண்டும் அகழாய்வு செய்வதற்கான அனுமதியை, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியம் வழங்கி யுள்ளது. அதுமட்டுமின்றி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய இடங்களிலும் அகழாய்வு செய்ய அனுமதி தரப்பட்டு உள்ளது.  இந்த இடங்களில், விரைவில் அகழாய்வு பணிகள் துவக்கப்பட உள்ளன.
இது குறித்து, தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், 'கீழடியில், நான்கு இடங்களில், அகழாய்வு செய்ய உள்ளோம். அதற்கான கள ஆய்வுகள் முடிந்துள்ளன. ஒரு வாரத்தில், அகழாய்வு பணிகள் துவங்கும். அதேபோல், மற்ற இடங்களிலும் விரைவில், அகழாய்வுப் பணிகள் துவங்கும்' என்றனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...