Saturday, January 25, 2020

தமிழகத்தில் முதன்முறை! காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் முறை அறிமுகம்

தமிழகத்தி லேயே முதன் முறையாக, தாம்பரம் அடுத்த பெருங் களத்துர் பேரூராட்சியில், காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மனித வாழ்விற்கு அவசிய மான தண்ணீரின் தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பருவநிலை மாறு பாடு, காடுகள் அழிக்கப்படு வது, சுற்றுச்சூழல் மாசு உட் பட, பல்வேறு காரணங்க ளால், குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.
குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க, நீர்நிலைகளை தூர் வாரி பராமரிப்பது மட்டு மின்றி, மாற்று வழிகளையும் யோசிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.அதற்கேற்ப, பெருங்களத்துர் பேரூராட்சி யில், காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் முறை, ஆறு மாதங்களுக்கு முன் அறிமுகப் படுத்தப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது.
இது குறித்து, பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரவி குமார், (56), கூறியதாவது: பேரூராட்சிகளின் இயக்கு னர் உத்தரவுப்படி, சூரிய சக்தி இயந்திரம் வாயிலாக, காற்றை குடிநீராக மாற்றும் இயந்திரம், பேரூராட்சி அலுவலகத்தின், மாடியில் பொருத்தப்பட்டுள்ளது.இதற்கு, 4.7 லட்சம் ரூபாய் செலவானது. மொத்தம், நான்கு, 'செட்' சூரிய சக்தி இயந்திரங்களில், காற்றை மறுசுழற்சி செய்து, தண்ணீ ராக மாற்றும் வகையிலான மோட்டார்கள் உள்ளன.
இவற்றில் இருந்து கிடைக் கும் தண்ணீர் சிறிய அள வுள்ள சுத்திகரிப்பு இயந்திரம் வாயிலாக, சுத்தம் செய்யப் படுகிறது.நாளொன்றுக்கு, 80 லிட்டர் குடிநீர், இந்த இயந் திரம் வாயிலாக பெறப்பட்டு, அருகில் உள்ள, அரசு பள்ளி மற்றும் பொதுமக்களுக்கு, இலவசமாக வழங்கப்படுகி றது.
தமிழகத்திலேயே முதல் முறையாக, இத்திட்டம் இங்கு அறிமுகப் படுத்தப்பட் டுள்ளது.
எதிர்காலத்தில், குடிநீர் தேவையை பொறுத்து, பேரூ ராட்சி அலுவலகத்திலேயே திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம்.இதை பின்பற்றி, வீடுகளிலும் அமைக்க, எங் களிடம் பொதுமக்கள், ஆலோ சனை பெற்று வருகின்றனர். அவர்கள், அரசு மானியத்தை யும் எதிர்பார்க்கின்றனர்.அரசு மானியத்துடன், அனுமதியும் அளித்தால், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும், இத்திட்டத்தை செயல்படுத்த தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...