Sunday, November 24, 2019

சாலை விபத்துகளில் இறந்தவர்களில் 48 சதவிகிதம் பேர் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள்: மத்திய அரசு ஆண்டறிக்கை


2018 ஆம் ஆண்டில் சாலை விபத்தில் இறந்தவர்களில்  48 சதவீதம்  பேர் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆண்டு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் சாலை விபத் துக்கள் தொடர்பான ஆண்டு அறிக்கையை சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- நாள் தோறும்   சராசரியாக 1,280 சாலை விபத்துக்கள்  ஏற்படுகிறது. இதில் 415 உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன.  சராசரியாக மணிக்கு  53 விபத்துக்கள்,   17 உயிர் இழப்புகள் ஏற்படு கின்றன. 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் சாலை போக்கு வரத்து காயங்கள்  இறப்பு களுக்கு எட்டாவது முக்கிய காரணமாக இருக்கின்றன.
2018 ஆம் ஆண்டில் சாலை விபத்தில் இறந்தவர்களில்  48 சதவீதம்  பேர் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். சாலை விபத்துகளில் பலியா னவர்கள் பெரும்பாலும் அதிக வேகமாக சென்றதால் பலியாகி உள்ளார்கள். இது  64.4 சதவீதம்  ஆகும்.
தொடர்ந்து சாலை விதி களை மதிக்காமல்  வாகனம் ஓட்டியது.  இதன் மூலம் இறப்பு  5.8 சதவீதம்  ஆகும். மொபைல் போனில்  பேசி கொண்டே சென்றதால் ஏற்பட்ட விபத்தில் இறந்த வர்கள் 2.4 சதவீதம் ஆகும்.  குடிபோதையில் வாகனம் ஓட்டுவதில்  2.8 சதவீதம் பேர் பலியாகி உள்ளனர்.
தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட்கள் அணியாமல் இருப்பது விபத்துக்கான கார ணங்கள் அல்ல, ஆனால் கடுமையான காயங்கள் மற் றும் இறப்புகளைத் தவிர்ப்ப தற்கு  இவைகள் முக்கியமான வை.
கடந்த ஆண்டு நாட்டில் 43,614 இறப்புகள் அல்லது 28.8 சதவீத  இறப்புக்கள் தலைக் கவசம் அணியாததால் ஏற் பட்டு உள்ளன.  சீட் பெல்ட் அணியாததால் 24,435 இறப் புகள் ஏற்பட்டு உள்ளது.
மாநிலங்களில், மொத்த சாலை விபத்துகளின் அடிப் படையில் தமிழகம் (13.7 சத வீதம்) முதலிடத்திலும், மத்தியப் பிரதேசம் (11 சதவீதம்), உத்தரபிரதேசம் (9.1 சதவீதம்) இரண்டாமிடத்திலும் உள்ளன.
அதிக சாலை விபத் துக்கள் உத்தரபிரதேசத்தில் (22,256), மராட்டியத்தில்  (13,261), தமிழ் நாடு (12,216)  ஏற்பட்டு உள்ளன என அதில் கூறப்பட்டு உள் ளது.
ஜெனீவாவை தளமாகக் கொண்ட உலக சாலை கூட் டமைப்பின் 2018 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின் படி  199 நாடுகளில் சாலை பயன்படுத்துபவர்களுக்கு இந்தியா மிகவும் பாதுகாப்பற்ற நாடாக உள்ளது. இதைத் தொடர்ந்து சீனா (63,000 இறப்புகள்) மற்றும் அமெ ரிக்கா  (37,000 இறப்புகள்) ஏற்படுகின்றன.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...