Thursday, November 21, 2019

4520 சதுர அடியில் பூக்கள் ஓவியம் கின்னஸ் சாதனை படைத்த ஸ்காட்லாந்து கலைஞர்

ஸ்காட்லாந் தைச் சேர்ந்தவர் ஜோஹன்னா பாஸ்போர்டு. இவர், வயது வந்தோருக்கான வனவிலங் குகள் மற்றும் மலர்கள் தொடர்புடைய வண்ண புத் தகங்களின் மூலம் புகழ்பெற் றவர். இளம் வயதில் இருந்தே படம் வரையும் கலையில் ஆர்வம் கொண்ட ஜோஹன்னா கின்னஸ் சாதனையை படைக் கும் முயற்சியாக தரையில் படம் வரைந்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் அபெர் டீன்சையர் நகரில் உள்ள எல்லோன் கல்வி நிலையத்தில் பயின்ற ஜோஹன்னா தனது மகத்தான இந்த திட்டத்திற்கு அங்குள்ள ஒரு இடத்தையே தேர்வு செய்தார். 12 மணி நேரத்திற்குள் 4520 சதுர அடியில் கருப்பு வெள்ளை நிற பூக்கள் வரைந்துள்ளார்.
தனிநபர் வரைந்த மிகப் பெரிய ஓவியத்தில் திருப்பதி யைச் சேர்ந்த அமன்சிங் குலாட்டி என்ற நபர் 4416 சதுர அடியில் வரைந்ததே  இதற்கு முன்பு சாதனையாக இருந்தது.
அந்த ஓவியத்தின் சாத னையை இந்த படம் முறிய டித்து சாதனை படைத்துள் ளது என கின்னஸ் அமைப்பை சார்ந்த நடுவர்கள் உறுதிபடுத் தினர்.
‘நான் இதற்கு முன்பு செய்த எந்த செயலை விடவும் இது மிகவும் வித்தியாசமா னது. படைப்பாற்றலுக்கு கால எல்லை இருப்பதை நான் பொதுவாக ஆதரிக்க மாட் டேன், ஆனால் சில நேரங் களில் உங்களுடைய சிறந்த திறமையை வெளிக்கொணர அந்த கட்டுப்பாடு தேவை. ஓவியத்தை முடித்து உலக சாதனையை முறியடித்தது ஒரு பெரிய நிம்மதி, ஏனென் றால் இதற்காக நான் அதிக நேரம் செலவிட்டுள்ளேன்’, என ஜோஹன்னா செய்தியா ளர்களிடம் தெரிவித்தார்.
காந்தியாரின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டு அமன்சிங் குலாட்டி, காந்தியாரின் மிகப்பெரிய ஓவியத்தை வரைந்தவர் என் பது குறிப்பிடத்தக்க ஒன்றா கும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...