Friday, November 29, 2019

தொலைத்தொடர்பு துறையில் 3 ஆண்டுகளில் ரூ.41,000 கோடி இழப்பு

கடந்த 3 ஆண்டுகளில் தொலைத் தொடர்பு துறையில் 41,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் அவர் கூறியதாவது:  கடந்த சில ஆண்டுகளாக தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களிடையே ஏற்பட்ட போட்டி காரணமாக, மொபைல் அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்கள் குறைக்கப்பட்டன. இதனால் இத்துறையில் வருவாய் சரிந்து வந்துள்ளது கடந்த 2016-2017 நிதியாண்டில் 2.65 லட்சம் கோடியாக இருந்த வருவாய், அடுத்த ஆண்டில் ரூ.2.46 லட்சம் கோடியாகவும். கடந்த நிதியாண்டில் 2.24 லட்சம் கோடியாகவும் சரிந்தது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்த துறைக்கு  41,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வருவாய் 2016-2017 நிதியாண்டில் ரூ.11,271.95 கோடியாக இருந்தது 2018-2019இல் ரூ.4,708.63 கோடியாக சரிந்தது என்றார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...