Friday, July 26, 2019

காஷ்மீர் விவகாரம்: டிரம்ப் தவறிழைத்துவிட்டார்- அமெரிக்க பத்திரிகை


காஷ்மீர் விவகாரத் தில் மத்தியஸ்தம் செய்வதாக வேண்டு மென்றே தெரிவித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிகப்பெரிய தவறி ழைத்து விட்டார்; இந்தியாவுடனான உறவில் முன்னாள் அதிபர்கள் செய்த சாதனைகளை டிரம்ப் ஒன்றுமில்லாமல் செய்து விட்டார் என்று அமெரிக்காவின் வாசிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளி யாகியுள்ள செய்தி கட்டுரையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் ஒசாகா நகரில் நடை பெற்ற ஜி-20 அமைப்பு உச்சி மாநாட்டின் போது தம்மைச் சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீர் விவகாரத் துக்கு தீர்வு காண உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் என்று டிரம்ப் கடந்த திங்கள்கிழமை தெரிவித்திருந்தார். காஷ்மீர் விவகாரத்தில் 3-ஆவது நாட்டின் தலையீட்டை ஏற்க மாட்டோம் என்று இந்தியா தெரிவித்து வரும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும் இந்திய அரசு உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்தது. டிரம்பிடம் மோடி அத்தகைய கோரிக்கை எதையும் விடுக்கவில்லை என்றும், காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு விவகாரம் என்றும் இந்திய அரசு கூறியது.
இதேபோல், அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட விளக்கத்திலும், காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ் தான் சம்பந்தப்பட்ட இருதரப்பு விவ காரம்; இருநாடுகளும் விரும்பி கேட்டுக் கொண்டால், அந்த விவகாரத்துக்கு தீர்வு காண உதவி செய்யத் தயாராய் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் வாசிங்டன் போஸ்ட்  நாளிதழில் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு செய்திக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ராஜீய ரீதியில் டிரம்ப் மிகப்பெரிய தவறை இழைத்து விட்டார். இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்ட பிறகு, காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு தவறிழைத்து விட்டார்.
சீனாவின் எழுச்சிக்கு பதிலடி கொடுக்க முக்கியமான நாடான இந்தி யாவின் நட்புறவு அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், டிரம்பின் இந்த நடவடிக் கையால் இந்தியாவின் நட்புறவை அமெ ரிக்கா இழக்க வேண்டியிருக்கும்.
இந்தியாவுடனான நட்புறவை அமெ ரிக்க முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் டபிள்யூ புஷ், ஒபாமா ஆகியோர் பேணி வளர்த்தனர். சில அறியா வார்த்தைகள் மூலம், அவர்களது சாதனைகளை டிரம்ப் ஒன்றுமில்லாமல் செய்துவிட் டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி யேற்றதும், சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், அமெரிக்கத் தயாரிப்பு பொருள்கள் மீது இந்தியா அதிக வரிகளை விதிப்பதாக  குற்றம்சாட்டியிருந்தார். ஜிஎஸ்பி திட்டத்தின்கீழ் வளரும் நாடு என்ற முறையில் இந்தி யாவுக்கு அளிக்கப்பட்ட சலுகையையும் அமெரிக்கா திரும்பப் பெற்றது.

இதற்குப் பதிலடியாக அமெரிக்கா வில் இருந்து இறக்குமதியாகும் 28 பொருள்கள் மீது இந்தியா கூடுதல் வரி விதித்தது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...