Friday, July 26, 2019

‘ஸ்டெர்லைட் நிறுவனம், விதிகளை பின்பற்றுவது இல்லை’ உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றச்சாட்டு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத் தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர்.
இதில் தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரியத்தின் சார்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிட்டு வருகிறார். நேற்று அவர் தனது வாதத்தில் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற் படுத்தியதால், முன்னெச்சரிக்கை கொள்கை அடிப்படையில் அந்த ஆலையை மூட அரசு உத்தரவிட்டது. தூத்துக்குடியில் நிலத்தடி நீரையும், காற்றையும் இந்த ஆலை பெரிய அளவில் மாசுபடுத்தி விட்டது. அப் படி மாசுப்படுத்தவில்லை என்றால் அதை நிரூபிக்க வேண்டியது அந்த ஆலையின் பொறுப்பு.
ஸ்டெர்லைட் ஆலை கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடியில் அதிக அளவிலான மாசு ஏற்படுத்தி வருகிறது. இது பல்வேறு ஆய்வு அறிக்கைகள் மூலம் நிரூபணமாகி யுள்ளன. 2005ஆ-ம் ஆண்டு ஸ்டெர் லைட் ஆலை விரிவாக்கம் செய்யப் பட்டது. இதன் பின்னர் மாசு அளவு அதிகரித்தது.
1996-ஆம் ஆண்டு அக்டோபரில் ஆலையை இயக்க நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கப் பட்டது. ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதை எதிர்த்த வழக்கில், கழிவுகள் முறையாக, நவீன தொழில் நுட்பம் கொண்டு பரா மரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
ஆனால், இதை ஏற்காத உயர்நீதி மன்றம், ஆலையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆராய்ச்சி அமைப்  பான ‘நீரி‘க்கு உத்தரவிட்டது. அதன் படி நீரி ஆய்வு செய்து 1998-ஆம் ஆண்டு, 2005-ஆம் ஆண்டு என 2 அறிக்கைகளை தாக்கல் செய்தது. இந்த அறிக்கைகளின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையை மூட 2010ஆ-ம் ஆண்டு உயர்நீதிமன் றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் யப்பட்டது. ஸ்டெர்லைட் நிறுவனம் மாசு ஏற்படுத்துவதை உறுதி செய்து, ரூ.100 கோடியை ஸ்டெர்லைட் ஆலைக்கு அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...