Wednesday, July 24, 2019

சூரியனை ஆராய்வதற்கு தயாராகும் இஸ்ரோ: அடுத்த ஆண்டு ’ஆதித்யா’ விண்கலம் ஏவ திட்டம்

சந்திரயான்-2 விண்கலத்தை  வெற்றிகரமாக ஏவி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ அடுத்தக்கட்டமாக சூரியன் தொடர்பான ஆராய்ச்சியில் முத்திரை பதிக்க வுள்ளது.
சுட்டெரிக்கும் தீக்கோளமான சூரியனுக்கு மிக நெருக்கமாக சென்று அதன் வெளி விட்டத்தில் பல்லாயிரம் கிலோமீட்டர்கள் பரப்பளவில் அகன்று, விரிந்து கிடக்கும் வீரியமிக்க ’கொரோனா’ எனப்படும் ‘பிளாஸ்மா’ கதிர்களைப் பற்றி துல்லியமாக ஆராய்ச்சி செய்ய ‘இஸ்ரோ’ திட்டமிட் டுள்ளது. இதற்காக உருவாக்கப்படும் ‘ஆதித்யா-எல்1’ விண்கலம் அடுத்த ஆண்டின் ஜூன் மாதத்துக்குள் விண்ணில் செலுத்தப் படலாம் என தெரியவந்துள்ளது.

இஸ்ரோ தலைவர் கே.சிவன்

இந்த ஆராய்ச்சி தொடர்பாக கடந்த மாதம் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறுகையில், ‘பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சூரியனின் கரோனா பகுதியில் இவ்வளவு வெப்பம் உண்டாவது ஏன்? என்பது சூரியன் தொடர்பான இயற்பியலில் இதுவரை விடைகாண முடியாத கேள்வியாக உள்ளது.
சூரியனின் கரோனா பகுதியில் உள்ள வெப்பமானது பருவநிலை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதால் இதுதொடர்பான ஆராய்ச்சிக்காக இந்தியா விரைவில் அனுப்பும் விண்கலம் எப்போதுமே சூரியனை நோக்கிவாறு ஆய்வுகளை மேற்கொள்ளும்’ என்று குறிப்பிட்டிருந்தார்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...