Thursday, July 25, 2019

தமிழ் உள்பட 9 மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
தற்போது, உச்சநீதிமன்றத் தீர்ப்புகள், 9 மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அசாமி, வங்காளம், இந்தி, கன்னடம், மராத்தி, ஒடியா, தமிழ், தெலுங்கு, உருது ஆகியவைதான் அந்த 9 மொழிகள் ஆகும்.
தொழிலாளர் விவகாரங்கள், வாடகை சட்டம், நிலம் கையகப் படுத்துதல் விவகாரங்கள், சேவை விவகாரங்கள், இழப்பீடு விவகா ரங்கள், குற்றவியல் விவகாரங்கள், குடும்ப சட்ட விவகாரங்கள், சாதாரண சிவில் விவகாரங்கள், தனிநபர் சட்ட விவகாரங்கள், மதம் மற்றும் அறநிலையத்துறை விவகாரங்கள், அடகு, பொது இடங்களில் இருந்து வெளியேற்றும் சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு விவகாரங்கள் ஆகியவை தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளின் தீர்ப்புகள், மொழி பெயர்த்து வெளியிடப்படுகின்றன.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...