Wednesday, July 24, 2019

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிகர இழப்பு ரூ.342 கோடி


பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஜூன் காலாண் டில் ரூ.342 கோடி நிகர இழப்பை கண்டுள்ளது. இதுகுறித்து அந்த வங்கி செபிக்கு அளித்த அறிக் கையில் தெரிவித்துள்ளதாவது:
சென்னையில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ரூ.5,006.48 கோடி வருவாய் ஈட்டி யுள்ளது. இது, கடந்த 2018-19 நிதி யாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.5,326.71 கோடியுடன் ஒப்பிடும்போது 6 சதவீதம் குறைவாகும்.
கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கிக்கு ஏற்பட்ட நிகர இழப்பானது ரூ.919.44 கோடி யாக இருந்தது. இந்த நிலையில், வங்கியின் கடன் மீட்பு நடவடிக் கைகள் மேம்பட்டு, வாராக் கட னுக்கான ஒதுக்கீட்டு அளவு கணி சமாக குறைந்ததையடுத்து, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கிக்கு ஏற்பட்ட நிகர இழப்பு ரூ.342.08 கோடியாக குறைந்துள் ளது.
வங்கிக்கு கிடைக்க கூடிய வட்டி வருவாய் 2.07 சதவீதம் அதிகரித்து ரூ.4,336.39 கோடியாக வும், அதேசமயம் வட்டி அல்லாத வருவாய் 38 சதவீதம் சரிந்து ரூ.670.09 கோடியாகவும் காணப் பட்டது.
வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 25.64 சதவீதத்திலிருந்து (ரூ.38,146 கோடி) குறைந்து 22.53 சதவீதமாகி (ரூ.33,262 கோடி) உள்ளது. நிகர வாராக் கடன் விகிதம் 15.10 சத வீதத்திலிருந்து (ரூ.19,642 கோடி) சரிந்து 11.04 சதவீதமாகி (ரூ.14,174 கோடி) உள்ளது.
ஜூன் 30-ஆம் தேதி நிலவ ரப்படி வங்கியின் மொத்த வர்த் தகம் ரூ.3.69 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதில் மொத்த டெபாசிட் ரூ.2.21 லட்சம் கோடி யாக உள்ளது. வழங்கப்பட்ட மொத்த கடன் ரூ.1.51 லட்சம் கோடியிலிருந்து குறைந்து ரூ.1.47 லட்சம் கோடியாக இருந்தது என அந்த அறிக்கையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தெரிவித்துள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...