Wednesday, July 24, 2019

26 மருந்துகள் தரமற்றவை: மத்திய தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு


சந்தையில் விற்பனை செய்யப்படும் 26 மருந்துகளை தரமற்றவை என்று, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அவற்றில் பெரும் பாலான வை உத்தரகண்ட், இமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசத் தில் தயாரிக்கப்பட்டவை. தென்னிந்தியாவைப் பொருத்தவரை தமிழகத்தில் திருவள்ளூரில் தயாரிக்கப் பட்ட ஒரு மருந்து தரமற்றது என வகைப்படுத்தப் பட்டுள் ளது.
நாட்டில் விற்பனை செய் யப்படும் அனைத்து வகை யான மருந்து -மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரி  யங்கள் மூலம் ஆய்வு செய்யப் படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண் டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப் படுகிறது. அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 843 மருந்துகள் ஆய்வுக்குட் படுத்தப்பட்டன. அவற்றில் 817 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில், வயிற்றுப் போக்கு,  இருமல், கிருமித் தொற்று, வயிற்றுப் புண் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் 26 மருந்துகள் போலியாகவும், தரமற்றவையாகவும் இருந்தது கண்டறியப் பட்டது.
இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
அவற்றில் பெரும்பாலா னவை உத்தரகண்ட்,  இமா சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங் களில் தயாரிக்கப்பட்டவை என்று அதன் மூலம் தெரியவந் துள்ளது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சிடி ஸ்கேன், எம் ஆர்அய் ஸ்கேன், நுரையீர லுக்கு சுவாசக் காற்றை அனுப்பும் கருவிகள், எக்ஸ்-ரே கருவி, புற்றுநோய் சிகிச் சைக்கான பிஇடி கருவி, இதயத் துடிப்பை மீட்டெ டுக்கும் மின்னழுத்தக் கருவி, டயாலிசிஸ் இயந்திரங்கள் உள்ளிட்டவை மனித உட லுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் வரையறை செய்தது நினைவு கூரத்தக்கது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...