Thursday, June 27, 2019

நிலவில் விநோத உலகம் கண்டுபிடிப்பு


பூமியைப் போலவே சந்திரனிலும், நிறைய உலோகங்கள் தாதுக்கள் உள்ளன. இதனால் தான், நிலாவில் சுரங்கத் தொழில் செய்ய, இப்போதே பல விண்வெளி அமைப்புகள் திட்டமிட்டு வருகின்றன.
நிலாவின் தென் துருவப் பகுதியில், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், விண்கல் தாக்கியதால், 2,500 கி.மீ அளவுக்கு பெரும் பள்ளம் உள்ளது.
இந்தப் பள்ளத்தாக்கில் ஒரு விநோதமான உலோகம் இருப்பதை விஞ்ஞானிகள் அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிலாவைத் தாக்கிய விண்கல்லின் மிச்சம் மீதி, நிலாவிற்குள் சில நூறு மைல்கள் வரை புதைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ஒரு சில விஞ்ஞானிகள், அந்த விநோத உலோகத் திட்டு, இரும்பு- நிக்கல் கலவையாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
வேறு சிலரோ, அவை ஆக்சைடு திட்டுக்கள் என்கின்றனர்.
நிலாவின் பரப்பில், ஈர்ப்பு விசை வேறுபாடுகளை வைத்து அமெரிக்க விஞ்ஞானிகள் இந்த உலோகத் தாது இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...