Thursday, June 27, 2019

கெப்ளர் கண்டுபிடித்த புதிய கோள்கள்!


அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா, கெப்ளர் விண் தொலைநோக்கி மூலம் ஏராளமான தகவல்களை சேகரித்துள்ளது.
இந்த தகவல்களை வைத்து ஆராய்ச்சி செய்வதற்கே பல காலம்ஆகும் என்பது வெட்ட வெளிச்சம்.
ஜெர்மனியை சேர்ந்த விண்வெளி ஆய்வா ளர்கள், கெப்ளர் விண்தொலைநோக்கி சேகரித்த தகவல்களைவைத்து ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த ஆய்வில், நமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள பல கிரகங்களை கண்ட றிந்துள்ளனர்.
இதுவரை, 18 புதிய கிரகங்களை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இதுவரை கெப்ளர் உள்ளிட்ட பல விண் தொலைநோக்கிகள் தந்த தகவல்களின்படி, 4 ஆயிரம்புதிய கோள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் பெரும்பாலானவை நெப்டியூன் கிரகத்தின் அளவே உள்ளவை.
ஆனால் அண்மையில் ஜெர்மானிய விண்வெளி விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கும் புதிய கோள்கள்,  பூமியின் அளவைக் கொண்டவை என்பது தான் மிகவும் சிறப்பிற்குரியது.
இது பூமிக்கு மாற்றான வாழிடங்களை கண்டுபிடிப்பதை சுவாரசியமாக்கிருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...