Thursday, June 13, 2019

உ.பி.யில் சட்டம் படும்பாடு! ஆக்ரா நீதிமன்றத்தில் பார் கவுன்சில் தலைவி சுட்டுக் கொலை

புதியதாக தேர்ந் தெடுக்கப்பட்ட உத்தரப் பிரதேச பார் கவுன்சில் தலைவி தர்வேஷ் யாதவ் ஆக்ரா நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்..
உத்தரப் பிரதேச மாநில பார் கவுன்சில் தலைவருக்கான தேர் தலில் கடந்த 10 ஆம் தேதி அன்று பெண் வழக்குரைஞரான தர்வேஷ் யாதவ் தலைவியாக தேர்ந் தெடுக்கப்பட்டார். உத்தரப் பிரதேச பார் கவுன்சிலின் முதல் பெண் தலைவர் இவர் என்பது குறிப் பிடத்தக்கது.
இவர் தலைவியாக தேர்ந்தெடுக் கப்பட்டு இரண்டு நாட்களே ஆன நிலையில் இவர் ஆக்ரா நீதி மன்றத்தில் நடந்த பாராட்டு விழாவில் கலந்துக் கொண்டார்.
பாராட்டு விழாவில் தர்வேஷ் யாதவ் உரையாற்றிக் கொண்டிருக் கும் போது அவரது சக வழக்குரை ஞரான மனீஷ் சர்மா என்பவர் திடீரென எழுந்து அவரை துப் பாக்கியால் சுட்டுள்ளார். அவரை மற்றவர்கள் தடுக்கும் முன்பு தன்னைத் தானே சுட்டுக் கொண் டுள்ளார். இருவருக்கும் இடையில் வெகுநாட்களாக பகை இருந்ததாக சொல்லப்படுகிறது.
உடனடியாக இருவரும் மருத் துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளனர். மருத் துவமனையில் தர்வேஷ் யாதவ் இறந்ததாக அறி விக்கப்பட்டார். மனீஷ் சர்மா கவ லைக்கிடமான நிலையில் சிகிச்சை யில் உள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் மனீஷ் உபயோகித்த துப்பாக்கி உரிமம் பெற்றதாகும். தற்போது அந்த துப்பாக்கி காவல் துறையினரிடம் உள்ளது.  தர்வேஷ் யாதவ் உடல் உடற் கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...