Thursday, June 27, 2019

அரசு அதிகாரியை தாக்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. கைது

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆக்கிரமிக்கப்பட் டுள்ள கட்டிடங்களை இடிக்க மாநக ராட்சி  சார்பில் உத்தரவிடப்பட்டது. இதற்கான பணியில் அதிகாரிகள் ஈடு பட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகனும் இந்தூர்- 3 தொகுதி சட்டமன்ற உறுப் பினருமான ஆகாஷ் விஜய்வர்கியா தனது ஆதரவாளர்களுடன் வந்து இடிக்கும் பணியை அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என தடுத்துள்ளார்.

அப்போது  மாநகராட்சி அதிகாரி களுக்கும்  ஆகாஷ் ஆதரவாளருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  பின்னர் கோபமடைந்த ஆகாஷ் அதி காரியை  அனைவரின் முன்னிலையில், கிரிக்கெட் மட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன், தன்னுடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து அங்கு இருந்த சக அதிகாரிகளையும்  தாக்கினர். காவல்துறையினர் தடுக்க முயன்ற போதும், தொடர்ந்து அவர் தாக்குதலில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, தாக்குதல் நடத்திய விஜய்வர்கியா மற்றும் அவரது ஆதர வாளர்கள் மீது அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியது, பொதுப் பணியை செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆகாஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் மீது  எஃப்.அய்.ஆர் பதிவு செய்யப்பட்டது.  இதனையடுத்து நக ராட்சி அலுவலரை தாக்கிய ஆகாஷ் விஜய்வர்கியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...