Friday, June 14, 2019

இந்திக்கு இங்கே இடமில்லை!

(தமிழகத்தில் இனி எதிலும் இந்தி இல்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றி, 1968 ஜனவரி 23ஆம் தேதி சட்டமன்றத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை இங்கே தரப்படுகிறது.)

நேற்றைய முன்தின தொடர்ச்சி...

இரும்பாலைகளை வடநாட்டி லேயே பிலாயிலும், துர்க்காபூரிலும், ரூர்க்கேலாவிலும் ஆரம்பித்தார்கள்; அதுவும் நம்முடையதுதானே என்று இங்கு நம்மை நாமே சமாதானம் செய்து கொண்டோம்.
நம்முடைய சேலம் இரும்பாலைத் திட்டம் தூங்கிக் கொண்டிருப்பதை நாம் உணராதவர்கள் அல்ல; பெரும் பெரும் தொழிற்சாலைகளை திடீர் திடீர் என்று அந்தப் பகுதிகளிலேயே ஆரம்பித்துக் கொண்டார்கள். இருந் தும் அந்தப் பகுதியும் நம்முடைய தேசத்தைச் சேர்ந்ததுதானே என்று நம்மையே நாம் ஆறுதல் செய்து கொண்டோம், காண்ட்லா துறை முகத்தை ஏற்படுத்திக் கொண்டு, அதை சுங்கத் தீர்வை இல்லாத துறைமுகம் என்று அறிவித்துக் கொண்டார்கள். நம்முடைய தூத்துக் குடி துறைமுகம், ஆழ்கடல் ஆக்கப் படும் சேது சமுத்திரத் திட்டம் ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டு நிறைவேற்றப்படவேண்டும் என்று நாமும் 15 வருடங்களாகக் கோரி வருகிறோம்.
இருந்தும் அது நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. அதைச் செயலாற்ற முடியாத பொறுமையோடு நாம் இருந்து கொண்டி ருக்கிறோம். எதற்கும் ஓர் எல்லை உண்டு!
இந்தி பேசும் பகுதியிலிருக் கிற மாணவர்கள் இரு மொழி கள் மட்டுமே கற்கவேண்டியவர் களாயிருக்கும் பொழுது, இந்தி பேசாத பகுதி மாணவர்கள் மூன்று மொழி கற்க வேண்டி யிருப்பது வேறு பாடானதாகும். எனவே இந்தி பேசாத பகுதி மாணவர்கள் மூன்று மொழி படிக்குமாறு கட்டாயப்படுத்தப் படக்கூடாது என்று இந்த மன்றம் பரிந்துரைக்கிறது
வறுமைக்குத்தான் எல்லை இல்லை என்று சொல்லி யிருக்கிறார் கள். மற்ற எல்லாவற்றுக்கும் எல்லை உண்டு. எல்லை கடவாமல் நாமும் பொறுமையோடுதான் இருந்து கொண்டு வருகிறோம். பொறு மையின் கடைசி எல்லைக்கே - அந்த எல்லையின் விளிம் புக்கே நாம் வந்துவிட்டோம் என்பதை எப்படித் தெரிவிப் பது? இதுவரை நம்முடைய துயரத்தையும் துன்பத்தையும், மனக்கொதிப்பையும் உணரா மல் இருந்து கொண்டிருக்கிற அந்தப் பகுதியில் உள்ள மக்க ளுக்கும் உணர்த்த வேண்டும் என்பதற்காகத்தான்
மும்மொழித் திட்டத்தை இரு மொழித் திட்டம் என்று மாற்று கிற முறையில் இந்தி அகற்றப் படும் என்ற முறையில் தீர் மானத்தைக் கொடுத்திருக் கிறோம்.
நீ வேளைக்கு ஒரு பேச்சுப் பேசுகிறாய்! முன்னாலே மும் மொழித் திட்டத்தை ஏற்றுக்கொண்டாய், இப்போது மும் மொழித் திட்டத்தை எதிர்க்கிறாய் - என்பதாகச் சொன் னார்கள். அவர்களுக்கு இருக்கிற நோக்கம் எல்லாம், நான் ஒரு நிலை யான கொள்கையைக் கொண்டவன் அல்ல. திடமான உறுதி படைத்தவன் அல்ல, எந்த எந்த நேரத்தில் எதை எதைப் பேசினால் சாதகமோ அதை அதைப் பேசுகின் றவன் என்ப தாகப் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதுதான். நான் கடந்த முப்பத்தைந்து வருடங்களாக பொதுமக்களிடத் தில் பழகி வருகிறேன். இனி மேல் இவர்களுடைய நற்சாட்சிப் பத்திரத்தை - இவன் உறுதி யாக இருப்பவன்தான் - என்ப தான நற்சாட்சியைப் பெற்றுப் போக வேண்டும் என்பதில்லை. இந்திய அரசியல் சட்டத்தினு டைய 17வது பிரிவை நீக்க வேண்டுமென்று பேசுவது, புரட்சிகரம் என்று இங்கு கருதப் படுகிறது. 1958ஆம் ஆண்டிலே மார்ச் மாதம் 11 ஆம் தேதியன்று.
ஆங்கிலம் மத்திய அரசின் ஆட்சி மொழியாக காலவரம் பின்றி நீடிக்கும் வகையில் அரசியல் சட்டத்தின் 17வது பிரிவு தகுந்த முறையில் திருத் தப்படவேண்டும் என்று இம் மன்றம் தனது உறுதியான கருத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
- என்ற தீர்மானத்தை எங்கள் கட்சித் தோழர் திரு.அன்பழகன் கொடுத்து, அது வாக்குக்கு விடப்பட்டு, 14 பேர்கள் அதை ஆதரித்தும், 121 பேர்கள் எதிர்த்தும் வாக் களித்தார்கள். 1958 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி மற்றொரு தீர்மானமும் போடப்பட்டது.
இந்தி பேசும் பகுதியிலிருக் கிற மாணவர்கள் இரு மொழி கள் மட்டுமே கற்கவேண்டியவர் களாயிருக்கும் பொழுது, இந்தி பேசாத பகுதி மாணவர்கள் மூன்று மொழி கற்க வேண்டி யிருப்பது வேறு பாடானதாகும். எனவே இந்தி பேசாத பகுதி மாணவர்கள் மூன்று மொழி படிக்குமாறு கட்டாயப்படுத்தப் படக்கூடாது என்று இந்த மன்றம் பரிந்துரைக்கிறது இந்தத் தீர்மானத்தைக் கொடுத்தவர் நம்முடைய நண்பர் எம்.பி.சுப் பிரமணியம் அவர்கள்.
அதுமட்டுமல்ல; மத்திய சர்க்கார் பரீட்சையிலே தமிழ், ஒரு மொழியாக ஏற் றுக் கொள்ளப்பட வேண்டு மென்று தீர்மானம் நாங்கள்தான் முதலில் கொடுத்தோம். யாரோ பேசும்பொழுது குறிப்பிட்டார்கள். திரு.சங்கரய்யா என்று நினைக் கிறேன் - பொதுமக்கள் போராட்டத்திற்குப் பிறகுதான் இந்த நிலை வந்தது என்று குறிப்பிட்டார்கள். 1965ல் ஆகஸ்டு மாதம் 5ஆம் தேதி - (நான் அப்பொழுது இல்லை) என்னு டைய நண்பர்கள் எதிர்க்கட்சி யிலே இருந்த நேரத்திலே இப்படி யொரு தீர்மானம் தரப்பட்டது -
`யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளை எழுது வதற்கான மொழிகளில் ஒன் றாக தமிழையும் ஆக்கவேண் டியது பற்றி மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டுமென்று மாநில அரசிடம் இந்த மன்றம் பரிந்துரைக்கிறது.
அதற்கு ஆதரவு - 34, எதிர்ப்பு 77, ஆகவே 17வது பிரிவு திருத்தப்பட வேண்டுமென்பதையும், தமிழ், பரீட்சை மொழியாக ஆகவேண்டும் என்பதையும், மும்மொழித் திட்டம் தங்களுடைய மாணவர்களுக்கு கேடு செய்யும் என்பதையும் இன்றல்ல நேற்றல்ல, 1958-லிருந்து வலியுறுத்தி எடுத்துக்காட்டியிருக்கிறோம்.
என்.சி.சி.யில் இந்தி ஆணைச் சொற்கள் பயன்படுத்தப் படுவதால் மேலும் இந்தி மறைமுகமாகவும் திணிக்கப்படுவ தால், இந்திச் சொற்களை நீக்க வேண்டுமென்றும், அப்படி நீக்காவிட்டால் என்.சி.சி. அணிகளை கலைத்துவிட வேண்டு மென்றும் சொல்கிறோம்.
தொடர்பு மொழி வேண்டாமா என்று கேட்டார்கள்.
பரந்த இந்தியாவிலே ஒரு பகுதி மக்களுக்கும் இன்னொரு பகுதி மக்களுக்கும் எந்த எந்த, அளவில், எந்த எந்த முறையில், எந்த எந்த இடத்தில் தொடர்பு இருக்கும் என்று கருதுகிறீர்கள்?
ஒரு வீட்டிலே இருக்கிறவர்கள் தொடர்பு இல்லாமல் இருக்கக்கூடாது. மாதக்கணக்கில் மாமியாரும் மருமகளும் பேசவில்லையென்றால், அதனாலே கணவனுக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை. கன்னியாகுமரியி லிருந்து 20 பேர்கள் கிளம்பி கான்பூருக்குப் போய் அங்கே பாஷை தெரியாமல் கதறுகிறார்கள் என்று கருதுகிறீர்களா?
- நன்றி: 'முரசொலி', 13.6.2019

திருநெல்வேலிச் சீமையில் உள்ள கிராமத்திலிருப்பவர்கள் சென்னைப் பட்டணத்தைப் பார்த்ததேயில்லை என்பதை நீங்கள் அறிய மாட்டீர்களா? சென்னை கடற்கரையைப் பார்க்க முடியாமல் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாததா ? தொடர்பு, தொடர்பு என்று சொல்லுகிறீர்கள். திரு.ஹாண்டே அவர்கள் சொல்கிற தொடர்பு புரிகிறது. படித்தவர்களிடையே உள்ள தொடர்பு அது - புரிகிறது. நிர்வாகம் நடத்துகிறவர்களிடையே தொடர்பு, அதுவும் புரிகிறது. அரசியல்வாதிகளி டையே தொடர்பு, அதுவும் புரிகிறது. வியாபாரிகளிடையே தொடர்பு. அதுவும் புரிகிறது. யாத்திரிகர்களிடையே தொடர்பு. அதுவும் புரிகிறது. 100க்கு எத்தனை பேர் இங்கே திண்டாடுகிறீர்கள்? எந்தத் தவிப்பு ஏற்பட்டு அவர்கள் யாரிடத்திலே மனுப் போட்டார்கள்.
ஏதோ இங்கிருந்து அணி அணியாக அங்கே செல்வதைப் போலவும், அங்கி ருந்து அணி அணியாக இங்கு வருவதைப் போலவும், அவர்கள் எல்லாம் மொழி இல்லாத காரணத் தால் திகைத்துக் கொண் டிருக்கிறார்கள் என்ற முறையிலே கற்பனை செய்து கொள்கிறார்களே தவிர வேறு ஒன்றும் இல்லை .
தொடர்பு மொழி என்று பேசுகிறீர்களே வாருங்கள் 1937க்கு! அப்பொழுது இந்திக்கு தொடர்பு மொழி என்று பெயர். மதிப்பிற்குரியவர், எங்களுடைய நண்பர் - எல்லாத் தகுதிகளும் உடைய வர் என்று ஒப்புக் கொள்ளப்பட்டவர் - பட அளவிலே இங்கே பார்த்துக் கொண்டிருக் கிறோமே அவர்- ராஜாஜி அவர்கள், அன்று இந்தியை தேசிய மொழி என்று சொன்னார் கள், கட்டாயமாகப் படிக்க வேண்டுமென் றார்கள். அதைப் படிக்காவிட்டால் இந்தியனாக முடியாது என்றார்கள். அதைப் படித் தால்தான் இந்தியாவிலே வாழலாம் என்றார்கள். அதைப் படிக்காதவன் தேசத்துரோகி என்றார்கள். அப்போதுதான் மதிப்புமிக்க ம.பொ.சி. அவர்கள் சொன்னபடி நாங்கள் எதிர்த்தோம். என்னை முதல் முதலாகச் சிறைச் சாலைக்கு அனுப்பியவரும் ராஜாஜிதான்! முதல் முதலாக மந்திரி பதவியை ஏற்றுக் கொள்ளும் படியான நிலையை உண்டாக்கியவரும் ராஜாஜிதான் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறைச்சாலைக்கு அனுப்பினார் என்பதால் கோபமோ, மந்திரி பதவியை அடையச் செய்தார் என்பதால் அவரிடத்தில் அளவு கடந்த சந்தோஷமோ எனக்கு இல்லை. ஏனென்றால் அதை அவர் விரும்பவில்லை .
பிறருடைய கோபம், பிறருடைய சந்தோஷம் இவைகளை வைத்துக் கொண்டு அவர் தம்முடைய கொள்கைகளை வகுத்துக் கொள்ளவில்லை என்பது, என்னைவிட அவரிடத் தில் நெருங்கிப் பழகியவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
இதே மன்றத்தில் 1958இல், "ராஜாஜி புளியமரம்; அந்த நிழலிலே எதுவும் வளராது; அண்ணாதுரை நீ போகாதே'' என்றார்கள். அந்த மரநிழலிலே மலர்ந்து இவ்வளவு பெரிய தேக்கு மரங்களாகிவிட்ட பிறகு என்னை மட்டும் அங்கு போக வேண் டாம் என்கிறீர்களே; ஏதோ நான் போனேன், நல்லபடியாகத்தான் வந்தேன், (சிரிப்பு) 1957ஆம் ஆண்டு தேசிய மொழி என்று கருதப்பட்ட இந்தி, புகுத்தப்பட்டது.
மகாத்மா காந்தியின் தேசிய நிர்மாணத் திட்டங்களில் ஒன்று அது. அப்போது நான் எட்டாவது - ஒன்பதாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது “இந்தி தமிழ் சுயபோதினி” என்ற புத்தகம் இருக்கும், அதன் விலை ஆறணா அல்லது எட்டணா இருக்கும். அதைக் கையில் வைத்துக் கொண்டிருப்பதும், ஒரு காலணாவில் ஓட்டை போட்டு ஒரு குச்சியைச் சொருகி தக்கிளி வைத்துக் கொண்டிருப்பதும் நம்மாலான தேசபக்தி என்று நினைத்து மாணவர்கள் எல்லாம் வைத்துக் கொள்வார்கள்; நானும் வைத்துக் கொண்டேன். அன்றிலிருந்தே இந்திக்கு எதிர்ப்புக் காட்டப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டுப் புலவர்கள், பெரும் பேராசிரியர்கள், மறைந்த சோமசுந்தர பாரதியார், மறைந்த சேதுப்பிள்ளை, மறைந்த உமா மகேசுவரம்பிள்ளை, மறைந்த மறைமலையடிகள், இன்றும் நல்லவேளையாக நம்மிடையே இருந்து வரும் பெரியார் ராமசாமி ஆகிய இப்படிப்பட்டவர்கள் எல்லாம் சேர்ந்து, அந்த நாட்களில் இந்தியை எதிர்த்து ஆயிரம்பேர் சிறை சென்றார்கள்.
அதிலே இரண்டு பேர் மருத்துவமனையில் இறந்துபட்டார்கள். அதற்குப் பிறகு கட்டாய இந்தி என்பது எடுபட்டு, விருப்பப் பாடம் என்று ஆயிற்று. விருப்பப் பாடம் என்று ஆனபின் இந்தி ஆபத்து இல்லை யென்று வேறு வேலைகளைப் பார்த்தோம்.
தமிழ்நாட்டுப் புலவர்கள், பெரும் பேராசிரியர்கள், மறைந்த சோமசுந்தர பாரதியார், மறைந்த சேதுப்பிள்ளை , மறைந்த உமா மகேசுவரம்பிள்ளை , மறைந்த மறைமலையடிகள். இன்றும் நல்லவேளையாக நம்மிடையே இருந்துவரும் பெரியார் ராமசாமி ஆகிய இப்படிப்பட்டவர்கள் எல்லாம் சேர்ந்து, அந்த நாட்களில் இந்தியை எதிர்த்து ஆயிரம் பேர் சிறை சென்றார்கள்.
ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் முதலமைச்சராக வந்தபோது மறுபடியும் இந்தி புகுத்தப்பட்டது. நாங்கள் மறுபடியும் போராட்டத்தைத் துவக்கினோம். அந்தப் போராட்டத்தில் பல கஷ்டங்களை மேற்கொண்டோம். பலர் சிறைச்சாலைக்குச் சென்றார்கள். பின்னர் இந்திக்கு இந்திய அரசியல் அரங்கத்தில் தேசிய மொழி என்று சொல்வதற்குப் பதிலாக, ஆட்சிமொழி என்ற பெயர் கொடுக்கப்பட்டது.
'ஆட்சி மொழி' என்றால் இந்திக்காரர்கள்தானா எங்களை ஆளவேண்டுமென்ற அரசியல் கிளர்ச்சி எழுந்த காரணத்தால், ஆட்சிமொழி என்பதையும் மாற்றி இது ஆட்சி மொழி என்பது கூட அல்ல; இது இணைப்புமொழி” என்ற பெயர் கொடுக்கப்பட்டது.
இப்போது பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் இந்தி மட்டுந்தான் இணைப்பு மொழி என்று சொல்லவில்லை.
இந்தி இந்தியாவுக்குள் இணைப்பு மொழி, ஆங்கிலம் உலகத்திற்கு இணைப்பு மொழி என்று இணைப்பு மொழியை இரண்டாகச் சொல்லுகிறார்கள். இந்த வார்த்தை மாற்றங்கள் எல்லாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தைக் குறிப்பதாகும். வெறும் வார்த்தை ஜாலங்கள் அல்ல.
நாங்கள் அதற்காகப் பாடுபட்டவர்கள் என்ற முறையில் நொந்து போனவர்கள் என்ற முறையில் - கொடுமைகளைத் தாங்கிக் கொண்டவர்கள் என்ற வகையில் இன்றைய தினம், “இந்திப் பாடம் இனி இல்லை" என்று நான் தீர்மானத்தைப் படித்தபோது, அதிலே எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை என்னால்தான் உணர்ந்து கொள்ளமுடியுமே தவிர, அதற்காகக் கஷ்டப்படாதவர்களால் உணர்ந்து கொள்ளமுடியாது
இந்திய அரசியல் சட்டத்தில் இந்தி புகுத்தப்பட்டது முதற்கொண்டு எதிர்த்துக் கொண்டு வருகிறோம்.
அதுபற்றி நேரு உறுதிமொழி அளிக்க வேண்டுமென்பதை வற்புறுத்துவதற்காக அப்போது வர இருந்த குடியரசுத் தலைவருக்குக் கருப்புக்கொடி காட்ட வேண்டும். நம்முடைய மனக் கொதிப்பைத் தெரிவிக்க வேண்டுமென்று தீர்மானம் போட்டு உடனே அப்போது என்னோடு இருந்த சம்பத், குடியரசுத் தலைவரைப் பார்த்து உறுதிமொழி தருவதாகச் சொல்லிய பிறகு, நாங்கள் அதற்கு மேல் அந்தக் காரியத்தில் ஈடுபட வேண்டாமென்று முடிவு செய்தோம்.
அதற்குப்பிறகு நேருவினுடையஉறுதி மொழி சீனப் படையெடுப்பு நேரத்தில் எல்லாப் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டது.
அப்போது கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சென்னைக் கடற்கரையில் கூட்டம் கூட்டப்பட்டது. அதிலே கலந்து கொள்வதற்காக நான் டில்லியில் இருந்து விமானம்மூலம் வந்தேன்.
ராஜாஜியும் நானும் சேர்ந்து கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறபோது அவர்கள் சொன்னார்கள் அப்போது எனக்கும் ராஜாஜி அவர்களுக்கும் இன்று இருக்கிற நெருக்கம் கூட இல்லை பலபேர் ஆச்சரியப்படுகிறார்கள்:
''நானும் காமராஜரும் ஒன்றாக உட்கார்ந்திருக்க வேண்டியிருக்க நானும் அண்ணாத்துரையும் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு ஊரே ஆச்சரியப்படுகிறது. ஆனால் அதிலே உண்மையான பாடம் இருக்கிறது. இந்திப் பிரச்சினையில் காமராஜர் பிரிய வேண்டி வந்தது. ஆங்கிலம் எங்கள் இருவரையும் ஒன்றாகச் சேர்த்தது" என்று ராஜாஜி அவர்கள் சொன்னார்கள். அப்போது முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம் அவர்கள், நாங்கள் எல்லாம் 'மே' - 'ஷெல்' என்பதற்காகத் தகராறு இட்டுக் கொண்டிருந்த நேரத்தில் டில்லிப் பட்டணத்திற்கு வந்து பத்திரிகை நிருபர்களைச் சந்தித்தபோது 'மே' என்று இருந்தாலே போதும்; பரிபூரண திருப்தியை அளிக்கிறது என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்கள்.
- நன்றி: 'முரசொலி', 14.6.2019

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...