Wednesday, June 26, 2019

சென்னையில் ஜூன் 28-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் கிண்டியில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலாசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
இந்த வேலைவாய்ப்பு முகாம் கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் ஜூன் 28-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல்  2 மணி வரை நடைபெறுகிறது.
இந்த முகாமில்  35-வயதுக்குட்பட்ட 8-ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, அய்.டி.அய்.,  பட்டயப் படிப்பு,  கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உள்பட) கலந்து கொள்ளலாம்.
இந்த முகாமில் 10-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட   பணியிடங்களுக்கு ஆள்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்தச் சேவைக்கு கட்டணம் ஏதுமில்லை.  வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை  பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...