Thursday, June 13, 2019

நிலவுக்குப் பயணமாகிறது சந்திரயான்-2 விண்கலம்

நிலவில் இறங்கி ஆராய்ச்சியில் ஈடு படுவதற்காக ரூ.603 கோடி செலவில் உருவாக்கப்பட் டுள்ள சந்திரயான்-2 விண் கலம் ஜூலை 15-ஆம் தேதி நிலவுக்குப் பயணமாகிறது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவரும், மத்திய விண் வெளித் துறையின் செயலாள ருமான கே. சிவன் செய்தியா ளர்களிடம் கூறியது:
விண்வெளி ஆராய்ச்சிக் காக இந்தியாவின் சார்பில் சந்திரயான்-1, மங்கள்யான்-1, ஆஸ்ட்ரோட்சாட் போன்ற விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக, நிலவில் தரையிறங்கி ஆராய்ச் சிப் பணியில் ஈடுபடுவதற்காக சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 15-ஆம் தேதி அதி காலை 2.51 மணிக்கு ஆந்திர மாநிலம், சிறீஹரி கோட் டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-மார்க் 3 ராக்கெட்டின் வழியாக ஏவப்படுகிறது.  இதில் ஏதா வது கோளாறு ஏற்பட்டால், ஜூலை 16 அல்லது 17-இல் விண்ணுக்குச் செலுத்து வோம்.
சந்திரயான்-2 விண்கலத் தில் ஆர்ப்பிட்டர்(சுற்று கலம்), லேண்டர் (தரையிறங்கி), ரோவர்(தரைசுற்றி வாகனம்) ஆகிய மூன்று பகுதிகள் உள்ளன. இந்த ஒருங்கிணைந்த பகுதி 1.3 டன் எடை கொண்டதாகும். விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் நினைவாக லேண்டருக்கு விக்ரம் என்றும், ரோவருக்கு பிரக்யான் என்றும் பெயர் சூட்டியுள்ளோம்.
ஜிஎஸ்எல்வி-மார்க் 3 ராக்கெட் மற்றும் ஒருங் கிணைந்த பகுதியின் எடை 3.8 டன் எடை கொண்டதாக இருக்கும். அதன் 15-ஆவது நிமிடத்தில் அந்த ராக்கெட் டில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் விடுவிக்கப்பட்டு, பூமியில் இருந்து 170 கி.மீட் டர் தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும்.
அதன்பிறகு மேற்கொள் ளப்படும் 5 நகர்த்தல்கள் மூலம் பூமியில் இருந்து 170 கி.மீ. அருகிலும், 40,400 கி.மீ தொலைவிலும் 5 சுற்று வட்டப் பாதையில் 16 நாள்கள் பயணித்து, இறுதி யாக பூமியை சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி, மற்றொரு நகர்த்தல் மூலம் நிலவின் வட்டப் பாதையில் சந்திரயான்-2 நிலைநிறுத்தப் படுகிறது.
பலகட்ட ஆய்வு, சோத னைகளுக்குப் பிறகு சந்திர யான்-2 திட்டம் குறித்து ஜூன் 14-ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்டு, பெங்களூரில் இருந்து ஆர்ப்பிட்டர் சிறீஹரிகோட்டாவுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு ஜூன் 17-ஆம் தேதி லேண்டர், ரோவர் அனுப்பப்படும்.  இந்தத் திட்டத்தின் இயக்குநராக பெண் விஞ்ஞானி வனிதா செயல்பட்டுவருகிறார்.
இந்தத் திட்டத்தில் பணி யாற்றும் விஞ்ஞானிகளில் 33 சதவீதம் பேர் பெண்கள் என் பது பெருமைக்குரியது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...