Friday, May 10, 2019

ராஜீவ் தனது குடும்பத்தினருக்காக பயன்படுத்தியதாக மோடி கூறுவது தவறு! கடற்படை முன்னாள் தளபதி

அய்.என்.எஸ். விராட் போர்க் கப்பலை தனதுகுடும்பத்தினரின்பயணத் துக்காக மறைந்த முன் னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பயன்படுத்தியதாக கூறுவது தவறு என்று இந்திய கடற்படை முன்னாள் தளபதி எல்.ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேசியபோது, அய்.என்.எஸ். விராட் போர்க் கப்பலை 1987-ஆம் ஆண்டு தனது குடும்பத்தினர் பயணம் செய்யும் வாகனம் போன்று ராஜீவ் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார். குறிப்பாக, சோனியா காந்தியின் குடும்பத்தினரான வெளிநாட்டினர், அக்கப்பலில் பயணம் செய்ததாகவும் மோடி புகார் கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை இந்திய கடற்படை முன்னாள் தளபதி எல். ராம்தாஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தேசிய விளையாட்டு போட்டியில் பரிசுவென்றவர்களுக்குவிருது கள் கொடுப்பதற்கு திருவனந்த புரத்துக்கு அப்போது பிரதம ராக இருந்த ராஜீவ் காந்தி வந்தி ருந்தார்.இதைத் தொடர்ந்து, லட்சத்தீவில் நடைபெற்ற அரசு விழாவுக்கு ராஜீவ் காந்தி சென்றார்.
அப்போது விராட் போர்க் கப்பலில் ராஜீவ் காந்தியும், சோனியா காந்தியும் சென்றனர். அவர்களுடன் வெளிநாட்டினர் யாரும் பயணிக்கவில்லை. கொச்சியை தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் தென் பிராந்திய கடற்படை கமாண்டராக நான் அப்போது பதவி வகித்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
அய்.என்.எஸ்.விராட்போர்க் கப்பலின்முன்னாள்கமாண் டிங் அதிகாரியான வினோத் பாஸ்ரிசாவும்,அக்கப்பலில் ராஜீவ்காந்திபயணித்தபோது, அனைத்து நடைமுறைகளும் முறையாக கடைப்பிடிக்கப்பட் டன,அக்கப்பலில்வெளிநாட் டினரோ அல்லது வேறு விருந்தினர்களோ பயணிக்க வில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும்,விராட்போர்க்கப் பலைராஜீவ்,தனதுகுடும்பத் தினரின் சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தியதாக கூறுவது முழுவதும் தவறு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...