Tuesday, May 14, 2019

ரபேல் ஒப்பந்தம்: முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

சென்ற ஆண்டு அக்டோபரில் அரசாங்கம் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக மத்தி யக் குற்றப் புலனாய்வுக் கழ கத்திடம் (சிபிஅய்யிடம்) அளிக்கப்பட்டுள்ள ஊழல் புகார்மீது ஏன் இன்னமும் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி யுள்ளது.
ரபேல் ஒப்பந்தத்தின்மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் சென்ற அக்டோபரில் முறை யீடு மத்தியக் குற்றப் புலனாய் வுக் கழகத்திடம் தாக்கல் செய் யப்பட்டிருந்தது. எனினும் இதன்மீது இதுவரை முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய் யப்படவில்லை. நீதியரசர் ஜோசப், இது தொடர்பாக லலிதாகுமாரி வழக்கின் மீதான தீர்ப்புரையைச் சுட்டிக்காட்டி, காவல்துறையினரிடம் முறை யீடு அளிக்கப்பட்டால் காவல் துறையினரின் கடமை அதன் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்வதேயாகும் என் றும், எனவே ஏன் இவ்வாறு முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யவில்லை என்றும் அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணு கோபாலிடம் வினவினார்.
உண்மையில் தாங்கள் குற் றப் புலனாய்வுக் கழகத்திடம் அளித்திட்ட முறையீட்டின் மீது உரிய நடவடிக்கை எடுத் திட உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் சவுரி மற்றும் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்சநீதிமன் றத்தை அணுகியிருந்தார்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...