Friday, April 19, 2019

மசூதியில் முசுலிம் பெண்களை அனுமதிக்ககோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

மசூதியில் தொழுகை நடத்த முசுலிம் பெண்களை அனுமதிக்க உத் தரவிடக் கோரி தொடரப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு  உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை யில் உள்ள அய்யப்பன் கோயி லில் அனைத்து வயது ஆண்க ளும், குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் மட்டுமே அனுமதிக் கப்படுவது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்தாண்டு செப் டம்பரில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப் பில், சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களை யும் வழிபாட்டுக்கு அனுமதிக் கலாம் என்று கூறியது. இந்நிலையில், மகாராட்டிரா மாநிலம், புனேவை சேர்ந்த முசுலிம் தம்பதியர் மசூதிகளில் தொழுகை நடத்துவதற்கு முசு லிம் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவில், மசூதிக்குள் முசுலிம் பெண் களை தொழுகைக்கு அனுமதிக்க மறுப்பது சட்ட விரோதமானது, அரசியலமைப்புக்கு எதிரானது. எனவே, பெண்களை மசூதிக் குள் அனுமதிப்பதற்கு உத்தர விட வேண்டும் என்று குறிப் பிடப்பட்டுள்ளது.  இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலை மையிலான அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந் தது. அப்போது நீதிபதிகள் அமர்வு, வெளிநாடுகளில் உள்ள மசூதிகளில் பெண்கள் தொழு கைக்கு அனுமதிக்கப்படுகிறார்களா? என கேள்வி எழுப்பி னார்கள். இதற்கு பதில் அளித்த மனுதாரரின் வழக்குரைஞர், "இசுலாமியர்களின் புனிதத்தல மான மெக்கா, மற்றும் கனடாவில் பெண்கள் மசூதிக்குள் அனுமதிக் கப்படுகின்றனர்" என்றார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி கள் அமர்வு, இந்த வழக்கை நாங்கள் விசாரணைக்கு ஏற்ப தற்கான காரணம், சபரிமலை கோயில் விவகாரத்தில் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு தான். மசூதிக்குள் முசுலிம் பெண் களை அனுமதிப்பது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட் டனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...