Friday, April 19, 2019

சீனாவை விட 2 மடங்கு இந்தியாவின் மக்கள் தொகை

சீனாவை விட 2 மடங்கு வேகத்தில் இந்தியா வின் மக்கள்தொகை பெருகி வருவதாக யுஎன்எப்பிஏ அறிக்கை தெரிவித்துள்ளது.
உலக மக்கள்தொகை குறித்த ஆய்வுகளை யுஎன்எப்பிஏ அமைப்பு செய்து வருகிறது. அந்த அமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக எடுத்த கணக் கெடுப்பில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.
2018இ-ல் உலக மக்கள் தொகையானது 760 கோடியாக இருந்தது. இது 2019இ-ல் 770 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகை 2010 முதல் 2019 வரை யிலான காலக்கட்டத்தில் 1.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இது உலக அளவிலான சராசரி மக் கள் தொகை அதிகரிப்பு விகித மான 1.1 சதவீதத்தை விட அதிகமாகும். ஆனால் சீனாவில் மக்கள் தொகை அதிகரிப்பு 0.5 சதவீதமாகும். எனவே சீனாவை விட 2 மடங்கு வேகத்தில் இந்தியாவின் மக்கள்தொகை பெருகி வருகிறது.
இதுகுறித்து யுஎன்எப்பிஏ இந்தியாவுக்கான அதிகாரி கிளாஸ் பெக் கூறும்போது, இந்தியாவில் அதிக குழந் தைகள் பிறக்கும் அதேநேரத்தில் வயதானவர்களின் எண்ணிக் கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள இளைஞர் கள் படிப்பாளிகளாகவும் உடல் நலமிக்கவர்களாகவும் நாட்டின் பொருளாதாரம் வளர சமுகத் துக்கு நல்ல பங்களிப்பு தருப வர்களாகவும் முதியவர்களின் நலனில் ஈடுபாடு கொண்டவர் களாகவும் இருப்பதை அரசு உறுதிசெய்யவேண்டும். அதற் காக முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும். இதுபோன்ற பிரச்சி னைகளை மற்ற நாடுகள் எப் படி சமாளித்தன என்பதை இந் தியா கற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...