Thursday, April 25, 2019

பகுதிநேரமாக எம்.பில் படித்த ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை திருப்பித்தர உத்தரவு 800க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிப்பு

சேலம்,ஏப்.25, தமிழக பள்ளிக் கல்வித்துறையின்கீழ் 6 ஆயிரம் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல் பட்டு வருகின்றன.
இப்பள்ளிகளில் 30 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள், முதுகலைப் பட்டம் படித்தால் ஒரு ஊக்க ஊதியமும், எம்பில் அல்லது எம்எட் படித்தால் மற்றொரு ஊக்க ஊதியமும் வழங்கப்படுகிறது.
இதனிடையே கோவை மண் டலத்திற்குட்பட்ட ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட் டங்களில் உள்ள அரசு பள்ளி களில், கடந்த இரு மாதங்களாக ஆண்டு தணிக்கை நடந்தது.
அப்போது, 2008ஆம் ஆண்டுக்கு பிறகு பகுதி நேரமாக எம்பில் ஆய்வு படிப்பில் சேர்ந்து, அதற்கான ஊக்க ஊதியம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், அதனை திரும்ப செலுத்தும்படி உத்தர விட்டு சென்றனர்.
இந்த விவகாரம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பட்ட தாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த 2008ஆம் ஆண்டுக்கு பிறகு, தொலைதூர கல்வி மூலமாக எம்பில் முடித்தவர் களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டாம் என கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம், பகுதிநேரமாக படித்தவர்களை, ரெகுலர் போலவே கணக்கில் கொள்ள லாம் என யூஜிசி வழிகாட்டுதலில் உள்ளது. மேலும், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு தெரிவித்த பதிலில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில், துறை முன்அனுமதியோடு படித்திருந் தால் ஏற்றுக்கொள்ளப் படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், கோவை மண்டலத் தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட வருடாந்திர தணிக்கையின்போது, பகுதி நேர மாக எம்பில் முடித்த பலருக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தை திரும்ப பெற உத்தரவிடப் பட்டுள்ளது. இதனால், சுமார் 800க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், 50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை திரும்ப செலுத்த அறிவுறுத்தப்பட்டுள் ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, எந்தவொரு தெளிவான முடிவு கிடைக்கவில்லை.
குறிப்பாக, ஆர்டிஅய் தகவ லுக்கும், முதல்வரின் தனிப்பிரிவு அளித்த பதிலுக்கும் முரண் பாடுகள் உள்ளன.
அதேபோல், யூஜிசி வழி காட்டுதல்களையும் கண்டுகொள் ளாதது வெளிப்படையாக தெரி கிறது. எனவே, இந்த விவ காரத்தில், யூஜிசி வழிகாட்டுதல் களை தெளிவுபடுத்தி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட தணிக்கை தடையை நீக்க வேண்டும்.


இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...