Wednesday, March 6, 2019

ஏழு பேர் விடுதலைக்கான மனித சங்கிலி அறப்போரில் பங்கேற்பீர்!

சென்னையில் நான் பங்கேற்கிறேன்: தமிழர் தலைவர் அறிக்கை



கடந்த 28 ஆண்டுகளாக ஒரு கொலை வழக்கில் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்பட எழுவரையும் விடுதலை செய்யக் கோரி மார்ச் 9 ஆம் தேதியன்று மாலை 4 மணிமுதல் 6 மணிவரை மனித சங்கிலி அறப்போராட்டம் - சென்னை - கோவை - மதுரை - திருச்சி - நெல்லை - சேலம் - புதுச்சேரி ஆகிய ஏழு இடங்களில் நடைபெற உள்ளது.

இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு தமிழரும், மனிதநேயர்களும் ஆற்றவேண்டிய அடிப்படையான கடமை இதுவாகும்.
சென்னையில் கலைவாணர் அரங்கம் அருகே நான் கலந்துகொள்கிறேன்.

கழகத் தோழர்கள் குறிப்பிடப்பட்ட அனைத்து ஊர்களிலும் திரளாகப் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதற்கு முன் னுரிமை கொடுத்து வெற்றியடையச் செய்வீர்!

- கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்.
சென்னை

6.3.2019

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...