Friday, June 2, 2017

கலைஞர் 94 பிறந்த நாள்விழா

பெரியார் நினைவு சமத்துவபுரங்களை ஏற்படுத்தி,
ஜாதிகள் இல்லை என்பதை நடைமுறைப்படுத்தியவர் கலைஞர்
தமிழர் தலைவர் வாழ்த்துரை
சென்னை, ஜூன் 1 சென்னை வேப்பேரி பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (31.5.2017) மாலை திமுக தலைவர் கலைஞர் அவர்களின் 94 ஆம் பிறந்த நாள்விழா மகுடம் 9Õ கலைஞர் 94 சான்றோர் போற்றும் தமிழ் அரங்கம் எனும் தலைப்பில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக மற்றும் எழும்பூர் தெற்கு பகுதி திமுக சார்பில் சிறப்புற நடந்தது.
விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந் தினர்களுக்கு விழாக்குழுவினர் சார்பில் பயனாடை, நினைவுப்பரிசு அளிக்கப் பட்டது. விழா மேனாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன் தலைமையில் நடை பெற்றது. கவிஞர் இளைய கம்பன் வரவேற்புரையுடன் விழாவில் இணைப் புரை வழங்கினார்.
மேனாள் மத்திய அமைச்சர் ஜெகத் ரட்சகன் தலைமையுரையாற்றினார். கவிஞர் நெல்லை ஜெயந்தா, பேரா சிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா, நக்கீரன் ஆசிரியர் கோபால்,  திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண் டியன், காங்கிரசு கட்சி மேனாள் தலை வர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் ஆகி யோர் உரையை அடுத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவு சிறப் புரையாற்றினார்.
பள்ளி சிறார்களுக்கான கல்வி உத வியைத் தொடங்கிவைத்தார். கலைஞர் 94ஆம் பிறந்த நாள்விழா, கலைஞர் சட்டமன்ற வைரவிழாவையொட்டி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்.
விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிஞர் காசி.முத்துமாணிக்கம். சட்ட மன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, எழும்பூர் கே.எஸ்.இரவிச்சந்திரன், காங் கிரசு கட்சி ரங்கபாஷ்யம், சிவராமன், சம்பத், திராவிடர் கழக  சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம் உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
வரலாற்று நாயகர் வைரத்தைப் பாராட்டும் விழாவாக இவ்விழா நடை பெறுகிறது. தனி மனிதனாக தன் கொள்கையைத் தியாகம் செய்யாமல் ஒரே கட்சியில் தொடர்ந்து 60 ஆண்டு காலமாக சட்டமன்றத்தில் அமர்ந்தது பேரதிசயம்.
எழுத்தில், பேச்சில், மூச்சில் பெரியார், அண்ணா கொள்கைகளில் தம்பிகளை, ஓர் இயக்கத்தை நடத்தும் தலைவருக்கு 94ஆம் பிறந்த நாள். அவர் கொடுத்த ஆயுதங்களை நாம் பயன் படுத்த வேண்டும்.
பெண்களுக்கு இன்னமும் இட ஒதுக்கீடு கோரி போராடி வருகின்ற நிலையில் இங்கே 50 விழுக்காடு பெண்கள் வந்துள்ளனர். கலைஞர் பெற்ற வெற்றி சின்னங்களாக இங்கே ஏராளமான பெண்கள் உள்ளனர். இவர்கள் போராட்டத்துக்கும் வரக் கூடிய வீராங்கனைகள். கலைஞர் பேசினாலும், அமைதியாக இருந்தாலும் திராவிட இயக்கத்தை எந்த கொம் பனாலும் ஒன்றும் செய்ய முடியாது.
கலைஞர் பல்கலைக்கொள்கலன். நிர்வாகத்துறையில் முடிவெடுப்பதில் அவரை எவரும் தாண்ட முடியாது. அப்படிப்பட்ட அவரிடம் செய்தியாளர் தங்களைப்பற்றி ஒரு வரியில் விமர் சனமாகக் கூறுங்களேன் என்றதும், உடனடியாக Ôமானமிகு சுயமரியாதைக் காரன்Õ என்றார்.
சுயமரியாதை என்றால் என்ன? என்று தந்தை பெரியார் கூறும்போது, சுயமரியாதை எனும் சொல்லுக்கு இணையாக வேறில்லை என்றார். ஆனால்,  மாட்டின்மூலம் இன்றைக்கு இன எதிரிகள்மூலம், கொள்கை எதிரிகள் மூலமாக சுயமரியாதையைப் பெறுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு விஞ்ஞானி தயாரித்தளித்த கருவி எப்போதும் பயன்படுவதுபோல், கொள்கையைக் கொண்டு நமக்கு ஏற்பட்டுள்ள அறைகூவல்களை சந்திக்க வேண்டும்.
நெருக்கடிக்காலத்தை சந்தித்தவர் கலைஞர்.  ஆதரித்தாலும், எதிர்த்தாலும் உறுதி காட்டக்கூடியவர் கலைஞர். ஜாதியால் சீரழிந்திருக்கிறோம் என்ப தால், பெரியார் நினைவு சமத்துவபுரங் களை ஏற்படுத்தி, ஜாதிகள் இல்லை என்பதை நடைமுறைப்படுத்தினார்.
இந்த விழாவில் சூளுரை ஏற்போம். இந்த இனத்தின் மீட்சிக்கு நாம் சூளுரைப்போம். நம்மை அழிக்கின்ற இந்துத்துவா திணிப்பு, நீட் தேர்வு திணிப்பு, மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்கிற ஆணை போன்ற மோடி வித்தைகளை முறியடிப்போம்.
நாமாவளி பாட அல்ல இந்த விழா. போர்ப்பரணி பாட. பெரியார், அண்ணா கொள்கைகளை நடைமுறைப்படுத் தினார். கலைஞர் நூறாண்டுகள் தாண்டி வாழ்வார். மீள்வார். பெரியார் அண்ணா கொள்கைவழி இலட்சிய வழியில் கலைஞர் ஆட்சி நடத்திக்காட்டினார். 1929 செங்கற்பட்டு திராவிடர் கழக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தை ஆட்சிக்கு வந்தபோது சட்ட மாக்கியவர் கலைஞர்.  பெண்களுக்கு சம உரிமை சொத்துரிமை, இடஒதுக்கீடு எனும்போது, ஆட்சி என்பது அதிகா ரத்துக்காக இல்லாமல்,  கொள்கைக்காக நடத்திக்காட்டியவர். சிறிய வயதில் தமிழ்க்கொடி என அப்போது வில், கயல், புலிக் கொடி ஏந்தி போராடினார். அவர் தொடர்ந்த சமூக நீதிப் போராட் டத்தை, அவர் தந்த கருவிகளுடன் புறப் படுவீர்! போராடுவோம்!! போராடு வோம்!!!
இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றும்போது குறிப் பிட்டார்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...