Tuesday, December 20, 2016

சாவிலும் ஜாதியா?

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெய லலிதாவிற்கு உண்மையான இறுதிச் சடங்கை சிறீரங் கப்பட்டணத்தில் நடத்தினார்களாம்.
பார்ப்பன சமூகத்தில் பிறந்த ஜெயலலிதாவை எரிக்காமல் புதைத்தது தவறு என்று ஆரம்பம் முதலே பார்ப்பனர்களில் ஒரு பகுதியினர் புலம்பிக் கொண்டு திரிகின்றனர். பார்ப்பனர்களில் அய்யங்கார் பிரிவைச் சேர்ந்தவர்கள் உடலை எரித்து அதன் சாம்பலை ஓடும் நீரில் கரைத்து விடுவார்களாம். (குளம், குட்டைகளில்கூட கரைக்கக்கூடாதாம்). அப்படி எரிக்காமல் புதைத்தாலோ, உடலை எரித்த சாம்பலை ஓடாமல் நிற்கும் ஏரி, குளம், குட்டைகளில் கரைத்தாலோ மறைந்தவரின் ஆன்மா மோட்சமடையாமல் துன்பமடையுமாம்.
அப்படி இருக்க, முன்னாள் முதல்வர் ஜெய லலிதா இறந்தவுடன் அவரது உடலை எம்.ஜி.ஆர். சமாதி அருகே புதைத்து விட்டனர். இது அரசும், அ.இ.அ.தி.மு.க. கட்சியினரும் ஒன்று கூடி ஆலோ சித்த பின் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் சொந்த ஊரான மைசூர் அருகே சிறீரங்கப்பட்டணத்தில் ரங்கநாதன் என்ற பார்ப்பனர்  ஜெயலலிதாவிற்குப் பதிலாக ஒரு பெண் பொம்மையை தயார் செய்து, இந்தப் பொம்மைக்கு ஜெயலலிதாவிற்கு விருப்பமான அனைத்து ஆடை, அணிகலன்களும் அணிவித்தார். இந்தப் பொம்மைக்கு ஜெயலலிதாவின் பெரியம்மா பையன் வாசுதேவன் அனைத்து சடங்குகளையும் செய்தார். இறுதியில் இந்தப் பொம்மை நெருப்பு மூட்டி எரிக்கப்பட்டது.
இதுகுறித்து இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட வாசுதேவன் ஆஜ்தக் என்ற ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் பேசும்போது,
‘‘திராவிட இயக்கம் இந்து மற்றும் இந்து மதக் கலாச்சாரத்தை எதிர்ப்பதையே தங்கள் வேலையாக செய்துகொண்டிருக்கிறது. திராவிட இயக்கத்தின் வழிவந்த அண்ணாதுரை, எம்.ஜி.ராமச்சந்திரன் போன்றோர்களின்உடலும்எந்தஒருஇந்துமத சடங்கு,சம்பிரதாயமின்றிபுதைக்கப்பட்டது.இதே முறையில்தான் ஜெயலலிதாவின் உடலும் புதைக் கப்பட்டது. ஜெயலலிதாவின் இறுதி ஆசை தனது உடலை இந்து முறைப்படி எரிக்கவேண்டும் என் பதாகவே இருக்கும். ஆனால், அவரது ஆசையை நிறைவேற்றாமல் செய்துவிட்டார்கள். ஆகவே, நாங் கள் இந்த சடங்கை செய்து முடித் தோம்‘’ என்று கூறினார்.
ஒரு மனிதன் செத்தான் என்றால் அவ்வளவுதான்; அதற்குமேல் எதுவும் இல்லை.
கறந்த பால் முலை புகா,
கடைந்த வெண்ணை மோர் புகா,
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா,
விரிந்த பூவும், உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா,
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே!
என்பது சித்தர் பாடல்.
பார்ப்பனச் சுரண்டல் என்பது பிறப்பு முதல் சாகும்வரைதொடர்வதுமட்டுமல்லாமல்;ஒவ்வொரு ஆண்டும் திதி என்ற பெயராலே புதுப்பிக்கப்பட்டும் வருகிறது. இதில் ஒரு வேடிக்கை வினோதம் என்ன வென்றால் ஜெயலலிதா அவர்களின் மறைவை யொட்டி எம்.ஜி.ஆர். சமாதியின் அருகில் புரோகித வேலையை பார்ப்பனர்தான் செய்தார்.
ஒரே மதத்துக்குள் ஒருவரை புதைப்பதும், எரிப்பதும் நடக்கிறது. நிலைமை இப்படி இருக்கும் போது ஏக இந்தியா, ஏக மதம், ஏக  கலாச்சாரம் என்று கூவுவதெல்லாம் யாரை ஏமாற்றிட?
திலகர் இறந்தபோது அவர் பாடையின் ஒரு பக்கத்தில் தன் தோளைக் கொடுத்துத் தூக்க விரும்பி கிட்டே காந்தியார் போனபோது, பார்ப்பனர்கள் அதனை அனுமதிக்கவில்லையே! காரணம், திலகர் பிராமணராம் - காந்தியார் வைசியராம்.
இதுதான் அர்த்தமுள்ள இந்து மதமா?
ஜெயலலிதா மறைவு கட்சிக்காரர்கள் வட்டத்தில் பெரும் துன்பம் சூழ்ந்திருக்கும் ஒரு காலகட்டத்தில் அய்யங்கார்ப் பார்ப்பனர்கள் இப்படியெல்லாம் அக்கப்போரில் ஈடுபடுவது சரியல்ல - மக்களின் வெறுப்பு அவர்கள் பக்கம் திரும்புவதற்குள் திருந்தி விடுவது நல்லது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...