Thursday, June 23, 2016

0.01 சதவீத மொழி!

தேஜ்நாராயணன் டண்டன் என்பவர் உ.பி. மாநிலம் லக்னோ நகரைச் சேர்ந்தவர் அவர் இந்தி மொழியில் ‘‘ஜெய கிருஷ்ணா ஜெய கன்யாகுமரி’’ என்ற ஒரு பயண நூலை எழுதி யுள்ளார்.

ஆந்திர மாநிலத்தைப் பற்றிய ஒரு சுவையான தகவலைத் தந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் வெங்க டேஸ்வரா பல்கலைக் கழ கத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் நரசிம்மாச்சாரி அவ ரிடம் சொன்ன தகவல்தான் அது.

‘‘இங்கே சமஸ்கிருத மொழிப் பிரிவு இருக்கிறது, அதற்கு ஒரு பேராசிரியரும் உள்ளார். 11 ரீடர்கள் உள்பட 12 ஆசிரியர்கள் உள்ளனர். பேராசிரியருக்கு மாத ஊதி யம் ரூ.1,200 (1982 ஆம் ஆண்டைய நிலவரம் இது) ரீடருக்கு மாத ஊதியம் ரூ.900. ஆக, மாதம் ஒன்றுக்கு மட்டும் சமஸ்கிருதத் துறை யில் பணிபுரிவோருக்குச் சம்பளம் ரூ.11,100. ஒருமுறை சமஸ்கிருதத்தைப் படிக்க ஒரு மாணவன்கூட வர வில்லை. 12 ஆசிரியர்களும் வேலை யில்லாமல் முதல் தேதி வந்ததும் சம்பளத்தை மட்டும் தவறாமல் பெற்றுக் கொண்டு வந்தனர்.

மனச்சான்று கொஞ்சம் உறுத்த, துணைவேந்தரிடம் சென்று ‘‘நாங்கள் வேலை ஏது மின்றி வெறுமனே பொழுது போக்கிக் கொண்டிருக்கிறோமே - மாணவரும் ஒருவர்கூட கிடையாது - நாங்கள் என்ன செய்யட்டும்?’’ என்று குறை பட்டுக் கொண்டனர்.

துணைவேந்தர், அவர் களுக்குச் சொன்ன பதில் என்ன தெரியுமா?

‘‘உங்களுக்கெல்லாம் முழுச் சம்பளம் முதல் தேதி யன்று கிடைத்து விடுகிறது அல்லவா! பிறகு என்ன குறை? வேண்டுமானால், பல் கலைக் கழகத்தில் உள்ள பெரிய சமஸ்கிருத நூலகத்திற்குச் சென்று ஏதாவது படித்துக் கொண்டு இருங்கள்’’ என்று அறிவுரை வழங்கி னாராம்.

எப்படி இருக்கிறது பார்த் தீர்களா? இதுதான் சமஸ் கிருதப் படிப்பின் நிலை. வேறு ஒரு துறை இப்படி இருந்தால், சும்மா இருப் பார்களா? ஆங்கில ஏடு களில் எத்தனை ஆசிரியர் கடிதங்கள் இடம்பெற்று ‘கிழிகிழி’ என்று கிழித்திருப் பார்கள்!

தெய்வ மொழியா யிற்றே... அதையெல்லாம் கண்டு கொள்ளலாமா?இந் திய அளவில் சமஸ்கிருதம் தெரிந்தோர் 0.01 சதவிகி தம்தான். அதுவும் தெரிந் தோர்தான் - பேசுவோர் என்றும் கூற முடியாது.

கோடிக் கணக்கில் சமஸ் கிருதத்திற்குப் பணத்தைக் கொட்டியழ பி.ஜே.பி. அரசு துடிப்பது ஏன் தெரியுமா? இந்தத் திண்ணைத் தூங்கிப் பேர்வழிகளை ஊட்டி வளர்க்கத்தான்!

- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...