Monday, March 7, 2016

இதுதான் “பார-தீய - (ஜனதா - ஆர்.எஸ்.எஸ்.) கலாச்சாரம் - புரிந்து கொள்வீர்!

 -  ஊசி மிளகாய்
டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் உள்ள முற்போக்குக் கருத்தாளர் களை - பெரியார் - அம்பேத்கர் - காரல் மார்க்ஸ் சிந்தனை வயப்பட்ட மாணவர்கள், பேராசிரியர்களை அறவே அழித்து விரட்டிட, ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ABVP (ஏ.பி.வி.பி.) என்ற அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளால் திட்டமிட்டே ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கில் - மாணவர் தலைவர் கன்னையாகுமார், பேராசிரியர் கிலானி போன்றவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
அடக்கு முறைகளால் லட்சியவாதிகள் அழிக்கப்பட முடியாதவர்கள், மாறாக, எரியும் நெருப்புக்கு எண்ணெய் - அதுவும் பெட்ரோல் ஊற்றியதுபோல மாட்டிக் கொண்டு விழிக்கின்றனர் இந்த ‘கோயபெல்ஸ்சின் குருநாதர்கள்’!
1. வெளிநாட்டு இஸ்லாமிய தீவிரவாதக் குழு கன்னையாகுமாரை வாழ்த்தியதாக பொய்க் குற்றச்சாட்டு உடனடியாக கிழிந்து தொங்கியது; அந்த இணையதளமே தன்னுடையதல்ல - போலி என்று பதில் வந்தது.
2. போடப்பட்ட தேச விரோத முழக்கங்கள் Super Imposed on that video என்று ஆய்வில் நிருபிக்கப்பட்டு விட்டது.
செய்தியாளரும் முன்பே அது தன்னால் கொடுக்கப் பட்டதல்ல, திட்டமிட்டே சேர்க்கப்பட்டது என்று கூறி விட்டார்!
உள்துறை அமைச்சர், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பலரும் இதற்குப் பொறுப்பேற்று சீரிய ஜனநாயக மரபு காக்க என்ன செய்திருக்க வேண்டும்? தாங்களே முன் வந்து பதவிகளை விட்டு விலகி இருக்க வேண்டாமா? - சொரணையிருந்தால்!
பா.ஜ.க.வின் பாரதீய கலாச்சார தூதுவர்கள் அறிவிக்கிறார்கள்.
“கன்னையாகுமார் நாக்கைஅறுத்தால் ரூ.5 லட்சம்“
“கன்னையாகுமார் தலையை வெட்டினால் ரூ.11 லட்சம்“
- இது என்ன ஜனநாயக நாடா? காட்டு மிராண்டிகள், காபாலிகர்கள் ஆளுமையின்கீழ் நடக்கும் காட்டு நிர்வாகமா?
இது எந்த, யாருடைய தைரியத்தில் நடை பெறுகிறது?
இவர்கள்  குண்டர் தடுப்பு சட்டம், தேசப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு திகார் சிறைக்குள் அடைக்கப்பட்டு இருக்க வேண்டாமா?
இதற்கு முன், ஆட்டுக்கறி சாப்பிட்டவரை, மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று  அக்லக் என்ற முஸ்லிம் உ.பி.யில் கொல்லப்பட்டுள்ளதும், பலவிடங்களில் வன்முறை - ஒடுக்கப்பட்டோரை செருப்புக்கும், நாய்களுக்கும் ஒப்பிட்ட அமைச்சர்கள் எவ்வித பதவிப் பறிப்புக்கும் ஆளாகாமல் பவனி வந்து ராஜ்ய பாரம் நடத் துவது தான் - மோடி  கொடுத்த வளர்ச்சியா? முன்னேற்றமா? மாற்றமா? மக்கள் கேட்கத் துவங்கிவிட்டார்கள்.
ஓய்வு பெற்ற நீதிபதி சாவந்த் தொடங்கி பல காவல்துறை தலைவர்கள், நிர்வாகிகள் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் எல்லாம் நேற்றுகூட ஒரு கண்டன அறிக்கை- இந்த சட்டம் செயல்படாதுள்ள அவலத்தைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளனரோ!
இந்த கலாச்சாரம் பரவினால் மீண்டும் காட்டுத் தர்பார் (Jungle Raj) ஆட்சிக்குத்தானே செல்லும் சிந்தியுங்கள்.


.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...