Saturday, November 7, 2015

நறுக்குகள்!



அய்.எஸ். பயங்கர வாதிகளுடன் ஆர். எஸ்.எஸை ஒப்பிடுவது தவறு என்கிறார் - தெலங் கானா ஆர்.எஸ்.எஸ். மாநி லச் செயலாளர் சந்திர சேகர்
ஏன் ஒப்பிடக் கூடாது - பயங்கரவாதம் எந்த மதத்தில் இருந்தாலும் பயங்கரவாதம்தான் மூன்று முறை ஆர். எஸ்.எஸ். தடை செய்யப் பட்டதே அதற்குக் கார ணம் என்ன?
ஆர்.எஸ்.எஸின் மற்றொரு பிரிவான விசுவ ஹிந்து பரிஷத் பொது மக்களுக்குத் திரிசூலத்தை வழங்கி என்ன சொல்லு கிறார்கள்? சூலத்தின் ஒரு முனை கிறித்தவர்களின் குடலைக் கிழிக்கும். இன் னொரு முனை முஸ்லிம் களின் குடலைக் கிழிக்கும். மற்றொரு முனை மதச் சார்பின்மையைப் பேசும் இந்துக்களைக் கிழிக்கும் என்று வெளிப்படையா கவே வெறிப் பேச்சை நஞ்சாகச் கக்குகிறார்களே இது பயங்கரவாதம் இல் லையா!
ஆர்.எஸ்.எசும், அய். எசும் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தாம்!
அலிபாபா குகை
இந்து (தமிழ்) நாளிதழ் வெளியிட்ட தலைப்பு அலிபாபா குகைக்குள் நுழைவோமா? என்பதா கும். ஆர்வத்தோடு உள்ளே நுழைந்து பார்த்தால் அய். அய்.டி.யில் என்னென்ன படிப்புகள் இருக்கின்றன என்ற தகவல் கொடுக் கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்களுக்கு ஏன் இப்படி ஒரு தலைப்பு? அது வெளி உலகுக்குத் தெரியாதா - மேல் ஜாதி பார்ப்பனர்களின் ஏக போக ஆதிக்கக் குகை யாக இருப்பதால்தான் இப்படி ஒரு தலைப்பைக் கொடுத்துள்ளார்கள் போலும்.
தப்பித் தவறி தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இந்த அய். அய்.டி.யில் இடம் கிடைத்து, உள்ளே  நுழைந்தாலோ அங்கேகூட வர்ண பேதம்தான்; தற்கொலை செய்து கொள்வோர் எல்லாம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாண வர்கள்தாம்! சென்னை அய்.அய்.டி.யை எடுத்துக் கொண்டால் பேராசிரியர் கள், இணைப் பேராசிரியர் கள் உதவிப் பேராசிரியர் கள் பார்ப்பனர்கள் 462, பிற்படுத்தப்பட்டோர் 7, தாழ்த்தப்பட்டோர் 10,  பழங் குடியினர் ஒரே ஒருவர்.  இப்பொழுது சொல்லுங்க ஆரியக்   குகையா? இல்லையா?

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...