Thursday, October 22, 2015

முற்போக்கு சிந்தனையாளர்கள் படுகொலை, மதவெறி, ஜாதிவெறியை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம்



சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது


சென்னை, அக். 22_ நுழைவுத் தேர்வு, பாலியல் வன்முறை, மாட்டுக்கறிக்கு தடை, பகுத்தறிவு _ முற்போக்கு சிந்தனையாளர்கள் படுகொலை, மதவெறி _ ஜாதி வெறியை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (22.10.2015) மாவட்டத் தலைநகரங் களில் காலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகத் தலை வர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கி ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக் கங்கள் வருமாறு:-
மத்திய அரசே மத்திய அரசே! திணிக்காதே, திணிக்காதே!
நுழைவுத் தேர்வை திணிக்காதே!

நுழைவுத் தேர்வு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும்
நுழைவுத் தேர்வைத் திணிப்பதா?  கவுரவக்கொலை என்று சொல்லி
ஜாதிவெறி நோய்ப்பிடித்து
கொல்லாதே கொல்லாதே
காதலர்களைக் கொல்லாதே!
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்,
ஜாதி வெறியர்களை கண்டிக்கிறோம்

தேநீர்க் கடைகளில் இரட்டை டம்ளரா
என்ன செய்கிறது, பி.சி.ஆர் சட்டம்?
தமிழக அரசே தமிழக அரசே
செயல்படுத்து, செயல்படுத்து!
பி.சி.ஆர்.சட்டத்தை செயல்படுத்து!

பாலியல் வன்கொடுமையை கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்
தமிழ்நாடு அரசே, தமிழ்நாடு அரசே!
தடுத்து நிறுத்து, தடுத்து நிறுத்து
பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்து! தடுத்து நிறுத்து!!
நரபலியை எதிர்த்து,
மாட்டுக்கறித் தடையை எதிர்த்து ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம்
திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

மாடுகளைக் காப்பாற்ற
மனிதர்களைக் கொல்லுவதா?
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்
காவிக்கூட்டத்தை, காலிக்கூட்டத்தை
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்!
பகுத்தறிவு பேசும் அறிஞர்களை
சீர்திருத்த எழுத்தாளர்களை
படுகொலை செய்யும்
காவிகளை, காலிகளை
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்
மத்திய அரசே! மாநில அரசே
நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு!!

போன்ற ஒலி முழக்கங்களை கழக தோழர், தோழியர்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழ கத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலா ளர் வீ.குமரேசன், திராவிடர் கழக வழக் குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், திரா விடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரை ஞர் அ.அருள்மொழி, மாவட்டத் தலைவர் இராசபாளையம் இல.திருப்பதி, மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில தொழிலாள ரணி துணைச் செயலாளர் பெ.செல்வராசு, வடமாவட்டங்களின் கழக அமைப்பு செயலாளர் வெ.ஞானசேகரன்,  சென்னை மண்டல செயலாளர் பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தையன், சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை ஆகியோர் பங்கேற்று முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்
தென் சென்னை: செ.ர.பார்த்தசாரதி (மா.செ), டி.ஆர்.சேதுராமன் (ம.து.த), சி.செங்குட்டுவன், கோ.வீ.ராகவன், தரமணி கோ.மஞ்சநாதன், சா.தாமோதரன், ச.மாரியப்பன், செ.இராமச்சந்திரன், க.பாலமுருகன், ச.மகேந்திரன், மு.பவானி, வி.தங்கமணி, பி.அஜந்தா, வி.நிலா, கு.பா. கவிமலர், அய்ஸ்அவுஸ் விசு, அய்ஸ் அவுஸ் கோவிந்த், மயிலை ஜான்சன், இரா.பிரபாகரன், துணைவேந்தன், இரா.மோகன், கு.செல்வேந்திரன், மந்தை வெளி முகிலன்,  அ.செல்வராசன், மா.நட ராசன், மயிலை பாலு, சைதை தென்றல்.
ஆவடி மாவட்டம்: இல.குப்புராசு (மா.செ), இரா.இராமதுரை (மா.செ.), மு. இரகுபதி (தலைவர், திருநின்றவூர்), அ.அருண் (மு.அமைப்பாளர்), பாலமுரளி (மதுரவாயல்), பெரியார் மாணாக்கன் (பூவை), பட்டாளம் பன்னீர் (வேப்பம் பட்டு, செயலாளர்), பாலமுருகன், உ.மோக னப்பிரியா, ப.எழிலரசி (மாணவரணி), நெடுங்கிள்ளி (வேப்பம்பட்டு), தொண்ட றம் (பூவை), செல்வி மாணாக்கன், க.இளங்கோவன் (திமுக), கே.குமார், செந்தில், உடுமலை வடிவேல், எழிலரசி.
மகளிரணி: சி.வெற்றிசெல்வி, செல்வி, மரகதமணி, சுமதி, கு.தங்கமணி, உமா, தங்க.தனலட்சுமி, கற்பகம், வளர்மதி,  திலகவதி, இன்பக்கனி, சண்முகலட்சுமி, மணிமேகலை, மாலதி, தாமரைச்செல்வி.
பெரியார் பிஞ்சுகள்: யாழொலி, தங்கமணி, நிலா, கவின்மலர், பகுத்தறிவு, தொண்டறம்.
கும்முடிப்பூண்டி மாவட்டம்:  புழல் ஆனந்தன் (மா.செயலாளர்), கஜேந்திரன் (மா.து.தலைவர்), புழல் டி.பி.ஏழுமலை, மாலதி, எஸ்.கண்ணன், தாமரைசெல்வி, மழலை நலன், மழலை நவிலன், கவனப் பேட்டை ரவி, உதயகுமார் (மா.தலைவர்).
தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்: மா.ராசு, ஆ.இர.சிவசாமி (வழக் குரைஞர்), கெ.விஜயகுமார், பொழிசை க.கண்ணன், சு.மோகன்ராஜ், ஏசா, நாகரத் தினம்.
வடசென்னை: பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராசன், பொதுக்குழு உறுப்பினர் திருவள்ளுவன், வியாசர்பாடி ஜீவா, வெங்கடேசன், கு.தங்கமணி, புரசை அன்புச்செல்வன், தளபதி பாண்டியன், கணேசன், பெரியார் திடல் சுரேஷ் கலைமணி, தமிழ்குடிமகன், மகேஷ், பேராசிரியர் பெரியாரடியான், தமிழ் லெமூரியா மு.தருமராசன், வழக் குரைஞர் சென்னியப்பன்,  பார்த்திபன், நெடுவை கு. குட்டிமணி, தஞ்சை கி.சவுந்த ரராசன், மற்றும் திரளான கழகத் தோழர் _ தோழியர்கள் பங்கேற்றனர்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...