Friday, October 30, 2015

மத்திய அரசின் சமூகநீதிக்கு எதிரான மதவெறிப்போக்கைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்




நுழைவுத் தேர்வு, மாட்டுக்கறிக்கு தடை, பகுத்தறிவு - முற்போக்கு சிந்தனையாளர்கள் படுகொலை, மதவெறி, ஜாதிவெறியை எதிர்த்து  மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகள் பின்வருமாறு:
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டையில் 22.10.2015 அன்று மாலை 5 மணிக்கு பந்தல்குடிச் சாலை, இந்தியன் வங்கி அருகில் விருதுநகர் மாவட்ட கழகம் சார்பில் மத்திய அரசின் மதவெறிப் போக்கைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் விடுதலை தி.ஆதவன் தலைமையில் மாவட்ட ப.க. தலைவர் சு.பாண்டி முன்னிலையில் ஆர்ப்பாட்ட முழக்கங்கள் எழுப்பினர். 
ஆர்ப்பாட்டத்தினை விளக்கி சிவகாசி நகர கழகச் செயலாளர் து.நரசிம்ம ராஜ், மாவட்ட துணைத்தலைவர் அ.தங்கசாமி, மாவட்ட துணைச் செயலாளர் சு.சண்முகசுந்தரம், மாவட்டச் செயலாளர் வெ.முரளி, மாநில ப.க. துணைத்தலைவர் கா.நல்லதம்பி ஆகியோர் உரையாற்றினர். மண்டல இளைஞரணித் தலைவர் இரா.அழகர், விடுதலை சிறுத்தைகள் நகரச் செயலாளர் கா.குருசாமி, தமிழ்ப்புலிகள் இயக்க மாவட்டப் பொறுப்பாளர் மு.கலைவேந்தன், நகரச் செயலாளர் ஆற்றலரசு, சிவகாசி நகர கழகத் தலைவர் மா.முருகன், அருப்புக்கோட்டை நகர கழகத் தலைவர் சு.செல்வராசு, செயலாளர் இரா.முத்தையா, 
புதூர் ஒன்றிய கழக அமைப்பாளர் வெ.பாலமுருகன், நகர கழக இளைஞரணித் தலைவர் க.திருவள்ளுவர், க.சுப்பிரமணி, செந்தில்குமார் மற்றும் கழகத் தோழர்கள், விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்ப்புலிகள் அமைப்பு தோழர்கள் பெருமளவில் பங்கேற்று சிறப்பித்தனர். நிறைவாக மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பா.இராசேந்திரன் நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது. ஆர்பாட்டத்தில் பங்கேற்ற தோழர் களுக்கு மாவட்ட திமுக கலை, இலக்கியப் பேரவை துணை அமைப்பாளர் மா.இராசேந்திரன் தேநீர் வழங்கி உபசரித்தார். ஆர்ப்பாட்டத்தினை விளக்கி நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
புதுச்சேரி
ஜாதி வெறி, மதவெறி, நுழைவுத்தேர்வு, மாட்டுக் கறிக்கு தடை, பகுத்தறிவு முற்போக்கு சிந்தனை யாளர்கள் படுகொலை, பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து புதுச்சேரி மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் 22.10.2015 அன்று புதுச்சேரி அறிஞர் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. கண்டன ஆர்பாட்டத்திற்கு புதுச்சேரி மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி தலைமை தாங்கினார். புதுச்சேரி மண்டலத் தலைவர் இர.இராசு, புதுச்சேரி மண்டலச் செயலாளர் கி.அறிவழகன், மகளிரணித் தலைவர் விலாசினி இராசு, புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வீர.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன முழக்கங் களை ப.க.தலைவர் வீர.இளங்கோவன் முழங்கினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய அணித் தலைவர் தோழர் கீத நாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் தோழர் சோ.பாலசுப்ரமணி யன், மறுமலர்ச்சி திமுக பொதுக்குழு உறுப்பினர் பெரியாரியல் சிந்தனையாளர் இரா.சடகோபன், இந்திய ஜனநாயகக் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் பஷீர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப் பாளர் ஜெயக்குமார், வெல்லும் தூயதமிழ் இதழா சிரியர் க.தமிழமல்லன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். கழக இளைஞரணித் தலைவர் தி.இராசா நன்றி கூறினார்.
கண்டன ஆர்பாட்டத்தில் தொழில் அதிபர் சடகோபன், பகுத்தறிவாளர் கழக புதுச்சேரி செய லாளர் கைலாச நெ.நடராசன், புதுச்சேரி நகராட்சி கழகத் தலைவர் மு.ஆறுமுகம், உழவர்கரை நகராட்சி கழகத் தலைவர் சு.துளசிராமன், அமைப்பாளர் ஆ.சிவராசன், புதுச்சேரி மண்டல அமைப்பாளர் கே.குமார், மணவெளி தொகுதி கழகத் தலைவர் இரா.ஆதிநாராயணன், பெரியார் பெருந்தொண்டர் பொ.தட்சிணாமூர்த்தி, இருசாம்பாளையம் செ.இளங் கோவன், இரா.சதாசிவம், இரா.நா.முத்துவேல், ப.க.துணைச் செயலாளர் செ.கா.பாஷா, புதுச்சேரி நகர கழகச் செயலாளர் த.கண்ணன், களஞ்சியம் வெங்கடேசன், மகளிரணித் தோழியர் எழிலரசி அறிவழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்
22.10.2015 அன்று பெரம்பலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட திராவிட கழகத் தலைவர் ப.ஆறுமுகம் தலைமையேற்றார். மாவட்ட செயலாளர் பெ.அண்ணாதுரை வரவேற்புரையும், பகுத்தறிவுப் பாசறைத் தலைவர் கி.முகுந்தன், அக்ரி ந.ஆறுமுகம், மாவட்ட இணைச் செயலாளர் வெ.சித்தார்த்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். குறிப்பாக வேதகாலத்தில் யாகம் வளர்த்து மாட்டுக் கறியையும், பசுக்கறியையும் தின்றவர்கள் இன்று பசுவதைத் தடை என்ற பெயரில் மாட்டி றைச்சிக்கு எதிராகக் கிளம்பி சிறுபான்மை முஸ்லிம் களை கொலை செய்கின்ற கொடுமையைக் கண்டித்தும், உண்ணும் உரிமையை மறுப்பதையும், தபோல்கார், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி போன்ற பகுத்தறிவாளர்கள் கொல்லப்படும் மத வெறி யாட்டங்களைக் கண்டித்தும் அனைத்து தோழர்களும் ஆர்ப்பரித்துக் குரல் எழுப்பினர். பகுத்தறிவு விளக்கவு ரையைத் திரளான பொதுமக்களும், வணிகர்களும், இளைஞர்கள் பலரும் கேட்டு விளக்கம் பெற்றனர். இரா.அரங்கராசன், பெ.துரைசாமி, மு.விஜயேந்திரன், சி.தங்கராசு, பெ.பெரியசாமி, அ.ஆதிசிவம், நா.அரங் கசாமி, சங்கர் போன்ற தோழர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இளைஞரணித் தலைவர் செ. தமிழரசனின் நன்றி கூறலுடன் இனிதே நிறைவுற்றது.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.நெப் போலியன் தலைமையில் 22.10.15 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் எஸ்.எம்.ஜெகதீசன், மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், நாகை மாவட்ட செயலாளர் பூபேஷ் குப்தா, மாவட்ட அமைப்பாளர் தெ.செந்தில்குமார், மாவட்ட இணைச் செயலாளர் கு.சிவானந்தம்,  மாவட்ட துணைத் தலைவர் சி.பி.க.நாத்திகன்,  நாகப் பட்டினம் நகரத் தலைவர் மா.குஞ்சுபாபு, மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் மு.க.ஜீவா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் இல.மேகநாதன் தொடக்க உரையாற்ற தலைமைக்கழக பேச்சாளர் இராம. அன்பழகன் கண்டன உரை நிகழ்த்தினார்.
நாகை மாவட்ட துணைச் செயலாளர் பாவா.செயக் குமார், நாகை மாவட்ட இளைஞர் அணி தலைவர் இராச.முருகையன், பொதுக்குழு உறுப்பினர் ந.கமலம், திருமருகல் ஒன்றியத் தலைவர் பொன்.செல்வராசு, திருமருகல் ஒன்றியச் செயலாளர் ப.செல்வகுமார், கீழ்வேளூர் ஒன்றியத் தலைவர் ரெ.துரைசாமி, கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் அ.பன்னீர்செல்வம், நாகை ஒன்றியத் தலைவர் பெ.செல்வராஜ், நாகை மாவட்ட மாணவரணி செயலாளர் க.குமரேசன், 
நாகை மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ம.முத்துராஜா, நாகை மாவட்ட விவசாய அணி  அமைப்பாளர் அ.தங்கராசு, திருமருகல் விவசாய அணி செயலாளர் எஸ்.செல்வராசு, திருமருகல் ஒன்றிய அமைப்பாளர் ஜெ.லெனின், திருமருகல் ஒன்றிய துணைச்செயலாளர் காமராஜ், மண்டல மாணவர் அணி செயலாளர் நா.பொன்முடி, கீழ்வேளூர் வட்டார விவசாய அணி அமைப்பாளர் தமிழ்செல்வம், கீழ் வேளூர் ஒன்றிய துணை தலைவர் அ.அரங்கராசு, 
திருமருகல் ஒன்றிய இளைஞர்அணி செயலாளர் தீபன் சக்கரவர்த்தி,நாகைமாவட்ட கழகத் தோழர்கள் மு.நாராயணசாமி, தெ.தங்கையன், தா.சேகரன், ராம சாமி, ராமதாஸ் மயிலாடுதுறை மாவட்ட துணைச் செயலாளர் கட்பீஸ் மா.கிருஷ்ணமூர்த்தி, மயிலாடு துறை நகரத் தலைவர் என்.தியாகராஜன், மயிலாடு துறை நகரத் துணைத்தலைவர் சீனி.முத்து,  மயிலாடு துறை நகரச் செயலாளர் அரங்க.நாகரெத்தினம், மயி லாடுதுறை மாவட்ட ப.க.செயலாளர் அ.சாமிதுரை, 
சீர்காழி ஒன்றிய தலைவர் கடவாசல். குணசேகரன், மயிலாடுதுறை விடுதலை வாசகர் வட்டத் தலைவர் சாமிநாதன், கொள்ளிடம் ஒன்றியச் செயலாளர் பூ.பாண்டு ரெங்கன், மயிலாடுதுறை மாவட்ட கழகத் தோழர்கள் செ.கணேசன், சே.மதியழகன், எஸ்.பாலாஜி, சி.திவாகர், இ.இளந்தென்றல்,எஸ்.கவியரசன், டேனியல், சிவ ராமன், முகில்வேந்தன் மற்றும் கழகத் தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர். நாகை நகரச் செயலாளர் சோம.வீரமணி நன்றி கூறினார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...