Friday, October 30, 2015

தஞ்சாவூர் மாநகரம் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 137ஆவது பிறந்த நாள் விழா, கழக கொடியேற்று விழா



தஞ்சாவூர், அக். 30_ 17.9.2015 அன்று காலை 9 மணியளவில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு கழகத்தின் சார் பில் கழக பொதுச் செயலா ளர் இரா.ஜெயக்குமார், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சார்பில் பதிவாளர் சிறீதர் பெரியார் சமூக தொடர் கல்லூரி சார்பில் நிர்வாகி புவனேஸ் வரி, 
பெரியார் மணியம்மை பல்கலை கழக மகளிர் பணியாளர்கள் சார்பிலும் மாலை அணிவிக்கப்பட் டது. தொடர்ந்து சரபோஜி கல்லூரி எதிரில் உள்ள கழக கொடியை செந்தூர் பாண்டியன், பெரியார் சமூக தொடர் கல்லூரி யிலுள்ள பெரியார் படிப் பகத்திற்கு திமுக மகளிர் தொண்டரணி அமைப்பா ளர் காரல் மார்க்ஸ் மாலை அணிவித்தனர்.
ஆர்.ஆர்.நகரில் உள்ள கழகக் கொடியை மாவட்ட வழக்குரைஞரணி தலை வர் இரா. சரவணகுமார், உரத்தநாடு குணசேகரன் இல்லத்தில் உள்ள கழகக் கொடியை மண்டலச் செயலாளர் மு.அய்யனார்  ஏற்றினர். பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாநில ப.க. பொதுச்செய லாளர் மா.அழகிரிசாமி மாலை அணிவித்தார். 
கழகக் கொடியை மாநில மகளிரணி செயலாளர் அ. கலைச்செல்வி ஏற்றினார். பவர் வசந்தன் நகரில் உள்ள கழகக் கொடியை மாவட்ட ப.க. செயலாளர் கோபு.பழனிவேல் ஏற்றி னார். அன்னை சிவகாமி நகரில் உள்ள பெரியார் சிலைக்கு ஒன்றிய செய லாளர் ஆட்டோ ஏகாம் பரம் மாலை அணிவித் தார். கழகக் கொடியை மாவட்ட அமைப்பாளர் தேசிங்கு ஏற்றி வைத்தார்.
பழைய பேருந்து நிலையம்
பழைய பேருந்து நிலை யத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாவட்ட திரா விடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சி.அமர் சிங், மண்டல திராவிடர் கழகம் சார்பில் மண்டல தலைவர் வெ. ஜெய ராமன், மாநகர திராவிடர் கழகம் சார்பில் மாநகர தலைவர் வ.ஸ்டாலின் மற் றும் மாநகர செயலாளர் சு.முருகேசன், மகளிர் அணி சார்பில் மாநில மகளிரணி செயலாளர் அ.கலைக்செல்வி மாலை அணிவித்தனர். குடும்ப விளக்கு சார்பில் தலைமை நிர்வாகி பா.வேணுகோபால் மாலை அணிவித்தார்.
திமுக
திமுக சார்பில் தஞ்சை தெற்கு மாவட்ட செய லாளர் துரை.சந்திரசேக ரன், மாநகர செயலாளர் டி.கே.ஜி.நீலமேகம்  மாலை அணிவித்தனர்.
அதிமுக
அதிமுக சார்பில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், தஞ்சை மாநகர மேயர் சாவித்திரி கோபால்  மாலை அணிவித்தனர்.
இந்திய தேசிய காங்கிரஸ்
இந்திய தேசிய காங் கிரஸ் சார்பில்
தஞ்சை மாவட்ட தலைவர் து. கிருஷ் ணசாமி வாண்டையார் மாலை அணிவித்தார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மாநில துணை பொதுச்செயலா ளர் ஆர்.பி.தமிழ்நேசன்  மாலை அணிவித்தார்.
பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கழகக் கொடியை மாநகர தலைவர் வ.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து ஜெப மாலைபுரத்தில் உள்ள கழகக் கொடியை சவுந்தர் ராஜன், கரந்தை வலம் புரியில் உள்ள கழகக் கொடியை செல்வி பியூலா, கரந்தை கடைத்தெருவில் உள்ள கழகக் கொடியை உடலியல் மருத்துவர் அரங்கராஜ், கீழவீதி பெரியார் இல்லத்தில் உள்ள கழகக் கொடியை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மாதவராசன், வ.ஸ்டா லின் இல்லத்தில் உள்ள கழகக் கொடியை மாநகர செயலாளர் சு.முருகேசன், 
தொல்காப்பியர் சதுக்கத் தில் உள்ள கழகக் கொடியை ஒன்றிய தலை வர் இரா.சேகர், அண்ணா நகரில் உள்ள கழகக் கொடியை வையாபுரி, பெ.வையாபுரி இல்லம் அருகில் உள்ள கழகக் கொடியை மாவட்ட துணை செயலாளர் சா.சந் துரு, யாகப்பா நகர் சாலை சந்திப்பில் உள்ள கழகக் கொடியை மாவட்ட ப.க.அமைப்பாளர் ச.அழ கிரி, ஆசிரியர் காலனியில் உள்ள கழகக் கொடியை ஒன்றிய செய லாளர் செ. ஏகாம்பரம், கீழவாசல் கரம்பை சாலையில் உள்ள கழகக் கொடியை மண்டல செயலாளர் மு.அய்யனார், சீனிவாசபுரத்தில் உள்ள கழகக் கொடியை ரமேஷ், 
நாஞ்சி கோட்டை சாலை முல்லை நகரில் உள்ள கழகக் கொடியை மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், அதிரடி அன்பழகன் இல்லத்தில் உள்ள கழகக் கொடியை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாக்கியம், யாகப்பா நகரிலுள்ள கழக கொடியை மாநகர அமைப் பாளர் வெ.ரவிக்குமார் ஆகியோர் ஏற்றி வைத் தனர்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...