Saturday, October 24, 2015

பாம்புக்கும் - பாம்படித்த கொம்புக்கும் நோகாத கதை

பாம்புக்கும் - பாம்படித்த கொம்புக்கும் நோகாத கதை
அய்.நா. தீர்மானத்தை நிராகரிக்க முடியாதாம்
அதே நேரத்தில் தங்கள் நாட்டுக்கு எதிராக செயல்படுத்தவும் முடியாதாம்!


இலங்கை அதிபர் சிறீசேனாவின் நயவஞ்சகக் கருத்து


கொழும்பு அக் 24_ அய்.நா. தீர்மானத்தை நிராகரிக்க முடியாது என்று கூறும் இலங்கை அதிபர் சிறீசேனா அதே நேரத்தில் தங்கள் நாட் டுக்கு எதிராக - பாதகமாக செயல்படுத்தவும் மாட் டோம் என்றும் நயவஞ் சகமான கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றம் தொடர்பாக அய்.நா. தீர் மானம் குறித்து அனைத் துக்கட்சிகளின் கருத்துக் களை அறிந்துகொள்வ தற்காக இலங்கை அதிபர் சிறீசேனா தலைமையில் நேற்று கொழும்பில் அனைத்துக்கட்சி தலை வர்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் அதிபர் சிறீசேனா பேசியதாவது:-
அய்.நா. மனித உரி மைகள் பேரவை மூலமாக இலங்கை விஷயத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
தற்போது உள்ள நிலையில் நாட்டில் தனிப் பட்ட கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன் வைப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. நாங்கள் விமர்சனங்களை வரவேற் கிறோம். அய்.நா. தீர் மானம் தொடர்பில் அரசு என்ற ரீதியிலும், இலங் கையின் பிரதான கட்சி என்ற ரீதியிலும் நாட்டுக் காகவும், நாட்டு மக்களுக் காகவும் எங்களால் முடிந்த அளவுக்கு செய்ய வேண் டும் என எண்ணுகிறேன்.
அவற்றை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பாக அனைத்துக்கட்சிகளின் ஆலோசனைகளையும் ஏற்று செயல்படுத்த திட் டமிட்டுள்ளோம். சில அரசியல்வாதிகள் நாங்கள் அய்.நா. தீர்மானத்தை முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத் துகின்றனர். அத்துடன் சில ஊடகங்களும் இந்தக் கருத்தை முன்வைக்கின்றன.
எனினும் அய்.நா. தீர் மானத்தை நாம் புறக் கணிப்பதால் மட்டும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுவிடமுடி யாது. எனவே எமது அர சமைப்புக்கு ஏற்ப இந்த விஷயம் தொடர்பாக நாம் ஆராயவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
அய்.நா. மனித உரி மைகள் பேரவையில் இலங்கை விஷயத்தில் ஏற்கெனவே கடந்த 2011ஆ-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ஆம் தேதி, 2013ஆ-ம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதி, 2014ஆ-ம் ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி ஆகிய கால கட்டங் களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
எனினும் இவற்றுக்கும் தற்போது முன்வைக்கப் பட்டுள்ள யோசனைக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன. அதனை நாங் கள் கருத்தில் கொண்டு அய்.நா. அறிக்கையில் மிகப்பிரதானமாக குறிப் பிடப்பட்டுள்ள பரிந் துரைகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.
அய்.நா. பரிந்துரை களில் பிரதானமாக இலங் கையில் மனித உரிமை களை பாதுகாத்தல், நல் லாட்சிக்கான கட்டமைப் புக்களை வலுப்படுத்துதல், ஊழல் மோசடி தொடர் பாக விழிப்புணர்வு, வடக்கு மற்றும் கிழக்கில் சிவில் பாதுகாப்பையும், வளர்ச்சிப்பணிகளையும் மேம்படுத்துதல், கண்ணி வெடிகளை அகற்றுதல், மறுகுடியேற்றம், சிவில் அமைப்புகள் மற்றும் பொது மக்களின் பாது காப்பை உறுதி செய்தல் மற்றும் மதிப்பளித்தல், பலவந்த ஆள் கடத் தல்களை நிறுத்துதல் ஆகியவற்றுடன், இலங்கை அரசினால் அய்.நா. மனித உரிமைகள் பேரவையில் குறிப்பிட்ட விஷயங்களான உண்மை யைக் கண்டறிதல் மற்றும் காணாமல்போனவர்களை தேடுதல் தொடர்பாக செயலகம் நிறுவுதல், இலங்கையில் மனித உரிமைகளை பாது காத்தல் அடங்கிய சர்வ தேச சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட யோசனைகளை அமல் படுத்த வேண்டும்.
ஆகவே அய்.நா. தீர் மானத்தை நிராகரிக்காது அதனை எவ்வாறு செயல் படுத்துவது என்பது பற்றி நாம் கலந்தாலோசிப் போம்.
அனைத்துக்கட்சிகளின் ஆலோசனைக்
கு ஏற்ப எவ்வாறு இதனை முன் னெடுப்பது என்பது தொடர்பில் இறுதி முடிவை எடுப்போம். இது எமது முதல் சந்திப்பு தான். இன்னும் பல சந்திப்புகளை நாங்கள் ஏற்பாடு செய்வோம். கட்சிகளின் ஆலோசனை அமைய வேண்டுமானால் துணைக்குழுக்களை அமைத்து ஆராயவும் முடியும். இது என்னுடைய யோசனையாகும்.
கட்சிகளின் தனிப் பட்ட கருத்துக்களை 2 வாரத்துக்குள் எழுத்து மூலம் எனக்கு அனுப்பி வைக்கலாம்.
நாம் எதனை முன் னெடுத்தாலும் அது நமது நாட்டுக்கும், நாட்டு மக் களுக்கும் பாதிப்பு ஏற் படாதவாறே முன்னெடுப் போம், அரசு அமைப்புக்கு ஏற்ப முன்னெடுக்க முடி யுமானவற்றை நாங்கள் முன்னெடுப்போம்.
இவ்வாறு அதிபர் சிறீசேனா கூறினார்.
இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் நாடாளுமன் றத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற 20 கட்சிகள் கலந்து கொண்டன. திஸ்ஸ விதாரணவின் இடதுசாரி கட்சி மற்றும் சரத்பொன் சேகாவின் ஜனநாயகக் கட்சி ஆகியவையும் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...