Thursday, October 22, 2015

நறுக்குகள்!



விலைவாசி
விலைவாசி - குறிப்பாக துவரம் பருப்பின் விலை விண்ணைத் தொடுகிறது. 2011 இல் ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை ரூ.55.
தற்போது அதன் விலை என்ன தெரியுமா? ரூ.220.
ஓ, வளர்ச்சி, உயர்வு என்பது இதுதானோ!

தோழர் பழ.கருப்பையா
இன்றைய தினமணியில் காதலால் சொன்னேன் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார் தோழர் பழ. கருப்பையா.
லிங்க வழிபாட்டைச் சிசுன வழிபாடு என்று ஆதி சங்கரர் எள்ளி நகையாடி னார்.
சிசுன வழிபாட்டைத் தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுற்றிப் பரப்பிய ஆரியரான ஞானசம்பந்தரை திராவிடச் சிசு என்று பழித்தார் ஆதி சங்கரர். பெரியாரும் லிங்க வழிபாட்டைக் குறி வழிபாடு என நகையாடினார் என்று எழுதியுள்ளார் திரு.பழ.கருப் பையா.
உண்மையை வெகு காலத்திற்கு மறைக்க முடி யாது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!

கோவில் திருவிழாவில் ஆபாச நடனம்
கோவில் திருவிழாவில் ஆபாச நடனம் இல்லாமல், கலை நிகழ்ச்சிகள் நடத்திட நிபந்தனைகளுடன் அனு மதி அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
உண்மைதான். ஆபாசம் கூடாதுதான் - அது ஒரு வகையான பலகீன உணர்ச்சி யின் அத்துமீறலே!
அதேநேரத்தில் அந்தக் கோவில்களின் கோபுரத் திலும், தேர்களிலும் நெளி யும் ஆபாசம் குறித்து பக் தர்களும் கவலைப்படவில்லை. நீதிபதிகளும் பொருட் படுத்தவில்லையே, ஏன்?
ஆண் - பெண் உறவு என்பதில்கூட இயற்கைக்கு மாறான மனிதனும், மிருக மும் புணர்வது போன் றெல்லாம் வடிக்கப்பட்டு இருக்கிறதே - இந்தச் சாக்க டையைத் தூர் எடுப்பது எப்பொழுது?

எச்சரிக்கிறார் ஜெட்லி
மாற்றுக் கருத்துகள் உள் ளோர்மீது மை வீசுவது, தாக்குவது என்பது உகந்த தல்ல - ஆரோக்கியமான முறையில் கருத்துகள் கூற லாம்; பா.ஜ.க. இதைச் செய் வதில்லை. அப்படி நடந்து கொள்ளும் பா.ஜ.க.வினர் கண்டிக்கப்பட்டும் உள்ள னர்.
- மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி
அப்படியா? உத்தரப்பிர தேசத்தில் முசுலிம் பெரிய வர் கொல்லப்பட்ட சதியில் பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பி னரே பின்னணியில் இருந் துள்ளாரே!
ஏன், இதே மோடி கடந்த காலங்களில் நடந்து கொண்ட முறை, பேசிய பேச்சுகளின் எதிரொலி இதில் இல்லை என்று ஜெட்லியால் கூற முடியுமா?
தினை விதைத்தால் தினையைத்தானே அறுக்க முடியும்?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...