Wednesday, October 14, 2015

மன நலம் - மன வளம் - முக்கியம்! (3)


மனம் என்பது மூளை செய்யும் பணியின் உருவகச் சொல்தான். அறி வுக்கே முன்னிடம்; உணர்ச்சியை நல்ல மனத்தவர் - மனதை ஆள்பவர்கள்  கட் டுக்குள் கொண்டு வரும் ஆற்றலா ளர்கள் ஆவார்கள்.
மனமது செம்மையானால்
மந்திரம் ஜெபிக்க வேண்டாம்
என்ற சொலவடை எதை விளக்குகிறது?
சிந்தனையில் சீர்மையும், நேர்மை யும் முரணற்ற தன்மையும் அமைந்து - குறுக்கு வழிகளில் ஈடுபடாமல், தன்ன லத்தையும் ஓர் கட்டுக்குள் அடக்கி, பொது நலத்திற்குப் பெரிதும் முக்கியத் துவம் அளிக்கும் மனித வாழ்வு - மனிதன் சமூகத்தில் வாழும் பிராணி - சமூகத்தின் ஓர் அங்கம் என்பதால், அவன் தன்னைத் தவறிழைத்த நிலையிலிருந்து தண்டனைக்குத் தப்ப, மந்திரங்கள் ஜபிக்க வேண்டாம்; யாக யோகங்களைச் செய்ய வேண்டாம்; பாவ மன்னிப்பைத் தேட வேண்டாம்! இவைகளால் பயனில்லை என்பது வேறு செய்தி!
தூய மனதின் தொய்வில்லாச் செயல் அவனைக் காக்கும்; உயர்த்தும்; தடுக்கும். எல்லாவற்றையும்விட அவனை, படுத்தவுடன் தூங்கி, புத்துணர்வுடன் விழிப்புறச் செய்யும்!
இன்றேல் புரண்டு புரண்டு படுத்தும் தூக்க மாத்திரை தேடும்  அவலம் தானே மிஞ்சும்! மன நோயாளிகள் - உடல் நோயாளிகளைப் போலவே இருக்கிறார்கள்!
அவர்களிடம் இரக்கம்) (Sympathy) காட்டினால் போதாது; அவர்களை  அறிய ஒத்தது அறிவானாக (அவர்கள் நிலைக்கு மாறி நம்மை வைத்து) அவர் துன்பம் அறியும் நிலைக்கு  இறங்கி, இரங்கி இரக்கத்தினும் மேலான பண்பான உணர்வைப் (Empathy)
பெற வேண்டும்.
பலருக்கு மன உளைச்சல் அதிகமாகி அவர்கள் மனநோயாளிகளாவதற்கு எவை எவை காரணம் என்று மருத்து வர்கள் மனோதத்துவ ரீதியிலும் உணர்ந்து, நோய் நாடி நோய் முதல் நாடும் போக் கினைக் கடைப்பிடிப்பது ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்! சீரிய முன்னோடி முயற்சி!!
இதோ ஒரு மனிதநேய மருத்துவ உதவியைப் பாரீர்! தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளிலேயே முதல் முறையாக தோல்வி நிலையில் உள்ளவர் களுக்கான சிகிச்சைப் பிரிவு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தொடங்கப் பட்டுள்ளது! செய்தி இதோ:
தோல்வி நிலை சிகிச்சைப் பிரிவு' ஸ்டான்லியில் தொடக்கம்: தமிழகத்திலேயே முதல்முறை தமிழகத்தில் அரசு மருத்துவ மனை களிலேயே முதல் முறையாக, தோல்வி நிலையில் உள்ளவர்களுக்கான சிகிச்சைப் பிரிவு சென்னை ஸ்டான்லி அரசு மருத் துவ மனையில் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் மனநல சிகிச்சைத் துறையின் கீழ் இந்தப் பிரிவு செயல்படும். மனநல சிகிச்சை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள மனநல சிகிச்சைத் துறைக்கு ஒரு நாளைக்கு 250 புறநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின் றனர். இதில் 50 பேர் புதிய நோயாளிகள் ஆவார்கள். 40 உள்நோயாளிகளுக்கான படுக்கைகளும் உள்ளன.
இந்தத் துறை யின் கீழ், வயதானவர்கள் தொடர்புடைய மனநலப் பிரச்னைகளுக்கான புறநோ யாளிகள் பிரிவு ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை செயல்படுகிறது.  எண்ணச் சுழற்சியால் அதாவது ஒரு காரியத்தை ஒரு முறை செய்து திருப்தியடையாமல் மீண்டும் மீண்டும் செய்வது. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக் கான புறநோயாளிகள் பிரிவு ஒவ்வொரு புதன்கிழமையும் செயல்படுகிறது.  போதைப் பழக்கத்துக்கு அடிமையான வர்களுக்கான புறநோயாளிகள் பிரிவு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செயல் படுகிறது. தோல்வியால் மனநலம் பாதித் தோருக்கு சிகிச்சை: இந்த நிலையில், தோல்வி நிலையில் உள்ளவர்களுக்கான சிகிச்சைப் பிரிவு அண்மையில் தொடங் கப்பட்டுள்ளது.
தேர்வு, காதல், திருமண வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தோல்வி அடைந்து, மன அழுத்தத்துக்கு ஆளானவர்களுக்கான சிகிச்சை அளிப்பதற்காக இந்தப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்டான்லி மருத்துவ மனையின் மனநல சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் அலெக்ஸாண்டர் ஞானதுரை கூறியது: தமிழகத்திலேயே முதன்முறையாக அரசு மருத்துவ மனையில் இந்த சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட் டுள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களால் தோல்விக்கு ஆளானவர்கள் தங்கள் சுயகவுரவம் பாதிக்கப்பட்டு விட்ட தாகக் கருதி மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். இந்த நிலைக்கு முறை யாக சிகிச்சை அளிக்காவிட்டால் அவர்கள் மனஅழுத்தம், வன்முறை, ஆக்ரோஷம் உள்ளிட்ட நிலைகளுக் குச் சென்று விடுவார்கள். சிலருக்கு தற்கொலை எண்ணங்களும் எழக் கூடும். இதுபோன்று தோல்வி நிலை யில் உள்ளவர்கள் ஒரு வாரத்துக்கு 15 முதல் 20 பேர் சிகிச்சைக்காக வருகின் றனர். ஆரம்பத்திலேயே இதனைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் மருந்துகள், ஆலோசனைகளிலேயே இவர்களைக் குணப்படுத்தி விட முடியும் என்று அவர் தெரிவித்தார். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை இந்த சிறப்புப் பிரிவு செயல்படும். இந்தப் பிரிவில் 6 நிபுணர்கள் கொண்ட குழுவினர் பணியாற்றுவார்கள்.
(தினமணி 12.10.2015)
மனதின் துன்பங்களும், துயரங் களும் எப்படி, பல்வேறு அவதாரங் களை எடுக்கின்றன என்று பார்த் தீர்களா?
மனம் என்பது உடலின் மூளை யோடு இயைந்தது என்பதற்கு இதை விடச் சிறந்த ஆதாரம் சான்று - வேறு என்ன தேவை?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...