Monday, September 28, 2015

சமுக சீர்திருத்தமும் - சமயக் கொள்கையும்

- தந்தை பெரியார்

தலைவர் அவர்களே! இளைஞர் களே!! சகோதரர்களே!!!  2 மணி நேரத் திற்கு முன்தான் இந்த இடத்தில் இந்த விஷயத்தைப்பற்றி நான் பேச வேண்டும் என்பதாக ஒரு மாணவ நண்பர் கேட் டார்.  இன்றைய விஷயம் இன்னது என்று இப்போதுதான் தெரிந்து இதைப் பற்றி என்ன சொல்லுவது என்றும், இது மிகவும் விவாதத்திற்கிடமான சங்கதி. ஆதலால் திடீரென்று என்ன பேசுவ தெனவும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
யோசனை முடிவதற்கு முன்னமேயே மேடைக்கு அழைக்கப்பட்டு விட்டேன்.  ஆனாலும் இதைப் பற்றிய என்னுடைய பழைய சங்கதிகளையே இந்தத் தலைப் பின் கீழ் சொல்லப்போகின்றேன். நீங்கள் பெரும்பாலும் மாணவர்களும், இளைஞர் களுமாய் இருப்பதால் நான் சொல்லு வதை திடீரென்று நம்பி விடாதீர்கள்.  நிதானமாய் யோசனை செய்து பிறகு ஒருமுடிவிற்கு  வாருங்கள் என்பதை முதலில் உங்களுக்கு எச்சரிக்கை முறையில் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
நண்பர்களே சமுக சீர்திருத்தம் என்றால் எந்த சமுகம் என்பதும், சமயக் கொள்கை என்றால் எந்த சமயம் என் பதையும் முதலில் முடிவு கட்டிக் கொள் வது இங்கு  அவசியமாகும். நான் இப் போது பொதுவாக மனித சமுகம் என் பதையும் பொதுவாக மனித சமுகத்திற்கு ஏற்ற சமயம் என்னும் பேரால் உலகில் வழங்குவதாக நமக்குத் தெரிந்த சமயங் களையும் எடுத்துக் கொள்ளுகிறேன்.  பிறகு அவசியமிருந்தால் தனிச் சமுகம், தனிச் சமயம் என்பதில் பிரவேசிக்கலாம் என்று இருக்கிறேன்.  பொதுவாக சம யங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்ப வைகள் எல்லாம் நல்ல அர்த்தத்தில் எடுத்துக் கொண்டாலும் அவை மனித சமுகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற் படுத்தப்பட்டவையாகும். மனித வாழ்க் கைக்கேற்ற திட்டங்களே தான் சமயம் அல்லது மார்க்கம் என்று சொல்லப்படு வதுமாகும்.
ஒரு வாசக சாலையிலேயோ, உல் லாசக் கூட்ட சாலையிலேயோ, ஒரு சங்கத்திலேயோ சேர்ந்திருக்க வேண் டிய அங்கத்தினர்கள் அச்சங்கத்தின் நிர்வாகத்தின் அவசியத்திற்காக என்று தங்களுக்குள் விதிகளை நிர்ணயித்துக் கொள்வதுபோலவே ஒரு பிராந்தியத் தில் வாழும் ஜனங்கள் தாங்கள் சேர்ந் திருப்பதற்காகவும், தங்கள் வாழ்க்கை தடையின்றி முறையாய் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நடைபெறுவதற் காகவும் ஏற்படுத்திக்கொண்ட அல்லது யாராவது ஒரு தலைவனால் அல்லது அறிஞனால் ஏற்படுத்தப்பட்ட விதிகளே சமயக் கொள்கைகளாகும்.
இதுவும் அந்தந்த காலதேச வர்த்தமானத்திற்கும், மக்கள் அறிவு நிலைமைக்கும், வளர்ச்சிக் கும் தக்கபடி செய்யப்படுவதேயாகும்.  ஆனால், அக்கொள்கைகள் மக்கள் தங்களது நன்மை தீமைகளைக்கூட சரிவர உணர்ந்து நடந்துகொள்ள முடியாத அறிவு  இல்லாத காலத்தில் மக்களைப் பயப்படுத்தி இணங்கச் செய்ய என்று பல கற்பனைகளை உண்டாக்கி பயப்படுத்தி வைத்து அப்பயத்தின் மூலமாவது நடக்கும்படி செய்யக் கருதி ஏற்படுத்திய கொள்கைக்கும் சேர்ந்ததே யாகும். அதாவது, 
எப்படி ஒரு குழந்தை யானது தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய சக்தியில்லாத தென்றும் அதைப் பற்றிய விபரங்களை எடுத்துச் சொன் னால் அதை அறிந்து கொள்ளமுடியா தென்றும் அதன் பெற்றோர்களோ, பாதுகாப்பாளர்களோ கருதினால் அக்குழந்தை வெளியில்போய் நடமாடி ஆபத்தில் பட்டுக் கஷ்டப் படாதிருக்கச் செய்ய வேறுவிதமாக அதாவது ஒரு வித பயம் உண்டாகும்படியான பூச்சாண்டி பிடித்துக் கொள்வான் என்றும்,  பேய், பூதம்  பிடித்துக் கொள்ளும்  என்றும், துண்டித்தக்காரன் பிடித்துக் கொண்டு போய் அடைத்து விடுவான் என்றும், இன்னும் பலவகையாய்  சொல்லுவ தோடு கையையும், 
முகத்தையும் ஒருவித மாக ஆக்கிக்காட்டி அக்குழந்தைக்கு ஒன்றும் புரியாதபடி மிரட்டி பயப்படுத்தி வைத்து அதை எப்படி வெளியில் போகாமல் செய்கின்றோமோ அப்படிப் போலவே மக்கள் வாழ்க்கை நலத்திற் கென்று ஏற்படுத்தப்பட்ட கொள்கை களை உணர்ந்து அதன்படி ஒழுக முடியாத நிலையில் மனிதர்கள் இருக் கிறார்கள் என்று கருதப்பட்ட காலத்தில் அப்போதுள்ள அறிஞர் என்பவர்கள் அம்மக்களை பயப்படும்படியாக ஏதோ அம்மக்களுக்குப் புரியாத ஒன்றைச் சொல்லி வேறுவித பயத்தை உண்டாக்கி அக்கொள்கைகளுக்கும், மதக் கட்டுப் பாட்டிற்கும் இணங்கி நடக்கும்படி செய் திருக்கிறார்கள். 
 அந்த நிபந்தனை மிரட் டல்களும், கட்டுப்பாடுகளும்தான் இன் றைய மோட்சம், நரகம், எமன், அடுத்த ஜென்மம், கர்மம், விதி, செக்கில் போட்டு ஆட்டுவது முதலாகியவைகளாகும்.  மற்றும் இவற்றை வலியுறுத்தி எழுதிய சாஸ்திரம், புராணம், இதிகாசம் முதலியவைகளில் சொல்லப் பட்டவைகளுமாகும்.  அது மாத்திரமல் லாமல் மேற்கண்ட முறையில் சொல்லு பவைகளெல்லாம் சொல்லிவிட்டும் எழுதி விட்டும் ஆனபிறகு இவைகளை மனிதன் சொன்னான் மனிதன் எழுதினான் என்றால் நம்பமாட்டார்கள் என்று கருதி (ஏனெனில் அவை நம்பமுடியாததும், அறி வுக்குப் பொருந்தாததுமாய் இருப்பதால்) அவை களையெல்லாம் கடவுள் சொன்னார்.  பகவான் சொன்னார், முனிவர் சொன் னார், 
ரிஷி சொன்னார் என்று அதாவது மனிதத்தன்மைக்கு மீறினவர்களால் சொல் லப்பட்டது என்று சொல்லி கட்டாயப்படுத்தி எப்படியெனில் நம்பினவனுக்கு மோட்சம், நம்பாதவனுக்கு நரகம், கழுதை ஜன்மமாய் பிறக்கவேண்டும் என்று சொல்லி நம்பச் செய்வதுமான காரியத்தின் மீதேதான் சமயக் கொள்கைகளை மக்களுக்குள் புகுத்தி இருக்கிறார்கள்.  இவற்றையெல்லாம் உண்மை என்று நம்பிய பாமர ஜனங்களும், இவற்றினால் பிழைக்க வசதி செய்து கொண்ட சில பண்டித ஜனங்களும் இந்த மாதிரிக் கொள்கைகள் கொண்ட சமயங் களை முரட்டுப் பிடிவாதம், 
குரங்குப் பிடியாய் பிடித்து சிறிது கூட காலத்திற்கும், அறிவின் நிலைமைக்கும் ஏற்றமாதிரி திருந்துவதற்கு விடாமல் முட்டுக்கட்டை போட்டு வந்ததாலேயே அறிவுக்குத் தகுந்த படியும் காலத்திற்கு ஏற்றபடியும் பலபல சமயங்கள் தோன்ற வேண்டியதாயிற்று. அன்றியும் திருந்த இடம் கொடுத்துக் கொண்டு வந்த சமயமெல்லாம் பெருகவும்,
 பிடிவாதமாய் இருந்ததெல்லாம் கருகவுமாய் இருந்து கொண்டு வரவேண்டியதுமாயிற்று.  ஆகவே, இன்றைய தினமும் மக்கள் எந்தச் சமயமானலும் இந்த தத்துவத்தின் மேல் ஏற்பட்ட தென்பதையும் ஒத்துக்கொண்டு கால தேசவர்த்தமானத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் தகுந்தபடி திருத்தமடைய உரிமையும் சௌகரியமுமுடையது என்று சொல்லப்படுவதாயின் அது எந்த மதமா யினும் சமயமாயினும் (கொள்கையாயினும்) அறிவுள்ள மனிதன் ஒப்புக்கொள்ள வேண்டியதேயாகும்.
அப்படிக்கில்லாமல், அதாவது மனித னின் உலக வாழ்க்கை நலத்திற்கு மதம் ஏற்பட்டது என்பதாக இல்லாமல் அதுவும் காலத்திற்கும், அறிவுக்கும் ஏற்ற மாறுதலுக் குக் கட்டுப்பட்டது என்பதாக இல்லாமல் மதத்திற்காக மனிதன் ஏற்பட்டான் என்றும், அந்த மதத்தைக் காப்பாற்ற வேண்டியதே மனிதனின் கடமையென்றும், அது எப்படிப் பட்டதானாலும் அதைப்பற்றிக் குற்றம் சொல்லவோ திருத்தவோ யாருக்கும் உரிமை இல்லை என்றும் சொல்லும்படியான மதம் எதுவாய் இருந்தாலும் அதை அழித்துத் தீரவேண்டியது மனித சமுக சீர்திருத்தத் தைக் கோருகிற ஒவ்வொருவருடையவும் முக்கியமான கடமையாகும்.
ஆகவே, அக்கடமைக்கு கட்டுப்பட்ட வைகள்தான் சமயக் கொள்கைகளாகும். இனி இந்திய சமுகத்தையும், இந்து சமயத் தையும் எடுத்துக் கொண்டோமானால் அது சுருக்கத்தில் முடிக்கக் கூடியவோ, விளக்கக் கூடியவோ, முடியும்படியான விஷயமல்ல. இந்திய மனித சமுகம் பெரிதும் சமயத்தைக் காப்பாற்றப் பிறந்ததாகக் கருதிக் கொண்டி ருக்கின்றன. அப்படிக் கருதிக் கொண்டிருப் பதிலும் மற்றொரு சிரிப்புக்கு இடமான விஷயம் என்னவென்றால், மனித சமுக நன்மைக்கென்று ஏற்படுத்தப்பட்ட கொள் கைகளையெல்லாம் விட்டுவிட்டு அக் கொள்கைகளை நிறைவேற்றவென்று பொய்யாகவும், கற்பனையாகவும், பயத்திற் காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த அர்த்தமற்ற போலி நிபந்தனைக் கொள்கை களைக் கெட்டியாய் பிடித்துக்கொண்டு கட்டி அழுவதாய் இருக்கின்றது.
காரணம் என்னவென்றால், மனிதனை அறிவு பெறுவதற்கு விடாமலும் விஷயங் களைப் பகுத்தறிந்து நடப்பதற்கு சுதந்திரம் கொடாமலும் கட்டிப்போட்டு வைத்திருந் தால் இந்திய மனித சமுகம் இன்றும் சுய அறிவற்று சமயத் தின் கருத்தென்ன? சமயக் கொள்கைகள் எதற்கு ஏற்பட்டது?  என்ப வைகளைக் கவனிக்காமல் கீழ் நிலை யிலேயே இருந்து கொண்டு சீர்திருத்த மடையவோ, முன்னேற் றமடையவோ முடியாமல் தவிக்கின்றன. 
 உதாரணம் வேண்டுமானால் பாருங்கள் எல்லா சமயக் காரர்களின் மனோபாவமும், குணமும் மற்றவனிடம் நடந்து கொள்ளும் பான்மை யும் ஒரே மாதிரியாக இருப்பதைக் காண் கின்றோம்.  ஆனால், ஆண்களைப் பார்த் தால் இன்ன இன்ன சமயம் தான் என்று கண்டுபிடிக்கும்படியாய் வேஷத்தை மாத்திரம் போட்டுக்கொண்டு இருக் கிறார்கள்.  
இவன் இஸ்லாமானவன், இவன் கிறிஸ்துவன், இவன் பௌத்தன், இவன்  இந்து, இவன் சைவன், இவன் வைண வன், இவன் ஸ்மார்த்தன் என்று சுலபத்தில் கண்டுபிடித்துவிடலாம்.  ஆனால், இவர்கள் இத்தனை பேர்களுடைய ஒழுக்கங்களைப் பார்த்தால் மாற்றமில்லாதபடி ஒரே மாதிரி யாகத்தான் இருக்கும். ஆகவே, மதம் என்ப தும் சமயம் என்பதும் யாருக்கும் அநேக மாய் வேஷ மாத்திரத்தில் இருக்கின்றதே யொழிய, கொள்கை மாத்திரத்தில் இல்லை என்பதும், மக்கள் வேஷத்தைக்  கெட்டி யாகப் பிடித்துக் கொண்டு கொள்கைகளை அடி யோடு நழுவவிட்டு விட்டார்கள் என்பதும் நன்றாய் விளங்கும்.
இதற்குக் காரணம் என்னவென்றால், இன்றைய உலகில் சமய போதனை என்பதே வேஷத்தை சொல்லிக் கொடுத்து அதைக் கிரமமாய் அந்தந்த சமயத்தார்கள்  பின்பற்றுகிறார்களா? இல்லையா என்று பார்ப்பதல்லாமல் கொள்கையை  வற்புறுத்தாததேயாகும்.  எந்த சமயத்திற்கும் இந்த மாதிரி வேஷந்தான்  பிரதானமான கொள்கை என்று ஆகிவிட்டதால் தான்,
 எந்த சமய மக்களிடம் சமய உண்மைக் கொள்கை களைப் பார்க்க முடியாமால்  போனதோடு, சமயத்தின் பேரால் எப்படிப்பட்ட கொள் கையைச் சொன்னாலும்  லட்சியம் செய் யாமல் போய் விட வேண்டியதாகிவிட்டது அன்றியும் மக்களுக்கு இவ்வளவு சுலபத் திலேயே அதாவது வேஷமாத்திரத் திலேயே சமயப் பிரதானம் கிடைத்து விடுகின்றதாலும் உண்மையான அதாவது மனிதனிடம்  நடந்து கொள்ள வேண்டிய கொள்கை நிறைவேற பலவித மாக பயங்களுக்காக கற்பிக்கப்பட்ட மோட்சம், 
கடவுள் அருள் அடுத்த ஜென்மத்தில் மேன்மையான பதவி  ஆகியவைகள் என்பவைகள்  எல்லாம் மேல்கண்ட வேஷ மாத்திரத்தாலே  கிடைத்து விடுவதாய் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டப்பட்டு விட்டதாலும் வெறும்  வேஷத்தை போடுகின்றதாலேயே மோட்சமடையக் கருதி அதிலேயே ஈடுபட்டு பிரதான  சமயக் கொள்கையை அலட்சிப்படுத்தி விடுகிறார்கள். 
ஆகையால், இன்றைய தினம் மக்களுக்கு சமயம் பயன்பட வேண்டுமானால், அதன் மிரட்டல் நிபந்தனைகளான போலிக் கற்பனை களையெல்லாம் முதலில் அழித்தாக வேண்டும். அதாவது மோட்சம், நரகம். தலை விதி, கடவுளின்  பக்கத்தில் இருக்கலாம். அடுத்த ஜன்மத்தில் ராஜாவாய்ப்  பிறக்கலாம்  என்பவைகளையும்,  சமய வேஷங் களையும் அடியோடு அழித்தாக வேண் டும்.  அப்படிக்கில்லாத பட்சம் எப்படிப் பட்ட நல்ல கொள்கையுள்ள சமயம் என் றாலும் ஒரு நாளும் பயன் கொடுக்கவே கொடுக்காது. மேலும் கொள்கையையும், அறிவையும்,  பிரத்தியட்ச அனுபவத் தையும்   பொருத்திவிட வேண்டும் அதைக் கொண்டு அவரவர்களையே நடந்து  கொள்ளும்படி விட்டு விடவும் வேண்டும். அப்படிக்கில்லாத வெறும்  பாட்டிக்கதைச் சமயங்கள்  இன்றைய சமுக முன்னேற்றத்திற்குப் பயன்படவே படாது  என்பது எனது உறுதியான அபிப்பிராயமாகும். 
உதாரணமாக, முன் காலத்தில் படிப்பு வாசனை உலகக்கல்வி  அறிவு சௌகரிய மில்லாத காலத்தில் ஒரு மனிதன் வெளியூர்  பிரயாணம் போய் வரட்டு மென்று கருதி அந்த ஊருக்குப போனால் புண்ணியம்,  இந்த சாமியை தரிசித்தால்  மோட்சம், இந்தத் தண்ணீரில் குளித்தால் பாவம் நீங்கும், அடுத்த ஜன்மத்தில் ராஜாவாய்  பிறப்பான் என்றெல்லாம்   சொல்லி அதற்குத் தகுந்த கற்பனைக்  கதைகள் எழுதி  வைத்ததுடன் ஜீவ காருண்யம் என்பதையும்  உத்தேசித்து மனிதன், மாடு, 
குதிரை, மனிதன் ஆகிய வைகள் மீது சவாரி செய்து அவற்றிற்கு தொந்தரவு கொடுக் காமல் இருக்கட்டும் என்று  கருதி காலால் நடந்து போனால் அதிக மோட்சம் அவசியம்  கிடைக்கு மென்று  எழுதி வைத்து இருந்தால் இன்று வர்த்தமான பத்திரிகை ரயில், மோட்டார்,  ஆகாயக்  கப்பல் ஆகி யவைகள் ஏற்படுத்தப்பட்டு  மலிந்த பிறகுகூட நடந்து யாத்திரை போக  வேண்டுமா? என்று யோசித்துப் பாருங்கள். இதுபோலவேதான் அநேக  விஷ யங்களை சமயத்தின்  பேரால் அர்த்தம் புரியாமல் பின்பற்றி, மூடர்களாகவும், தரித்திரர் களாகவுமாகி  அடிமைகளாய்  கஷ்டப் படுகின்றனர். இக் கஷ்டத் தில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டு மானால் சமயத்தின் உண்மை தத்து வத்தைத் தைரியமாய் எடுத்து ஓத வேண்டும்.  அதன் போலித் தத்துவங் களை தைரியமாக அழிக்க வேண்டும்,
அதோடு போலிக்கற்பனை  நிபந்தனை களுக்கு  ஆதாரமாய் இருக்கின்ற கோவில், குளம், சாமிதரிசனம் , புண் ணியம், மோட்சம், அடுத்த ஜன்மம் என் கின்ற உபத்திர வங்கள் எல்லாவற்றையும் அடியோடு ஒழித்தாகவேண்டும். இல்லா விட்டால் மக்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ, திருப்தியோ, மோட்சமோ இல்லவே இல்லை என்றுதான் சொல் லுவேன்.
  இந்த உபத்திரவங்களும்  மடத் தனங்களும் இங்கு உலகில் உள்ள எல்லா சமயங்களிலும் இருக்கின்ற தென்று ஒரு சமயம் சொல்லலாம் ஆனாலும், இந்து  சமயம் என்பதிலும் இந்திய மக்கள் என்பவர்களிடமுமே அதிகமாக மிக்க கெடும்படியாக சிறிது கூட முன்றேற்றம் அடையமுடியாதபடி யாக சீர்திருத்தம் செய்ய சற்றும்  ஒன்று படாததாக இருந்து வருகின்றது. மற்ற நாட்டாரும் மற்ற சமயத்தாரும் துணிந்து தாங்கள் முன்னேற்றமடையத்தக்க மாதிரியில் சமயக் கொள்கைகளைத் திருத்தி தடைகளை அழித்து முன் னேற்றமும் விடுதலையும் அடைந்து வருகிறார்கள். ஆதலால், வாலிபர்களே! நீங்கள் சற்று நிதானமாய் விஷயங்களை யோசித்து ஏதாவது  ஒரு முடிவுக்கு வந்து உங் களால் சமுகம் முன்னேறும்படியும் சமயக் கொள்கைகள் அதற்குப் பயன் படும்படியான மார்க்கத்தை தேடுங்கள்.
(சென்னை - பச்சையப்பன் கலாசாலையில் சமுக சீர்திருத்தமும், சமயக் கொள்கையும் என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு)
குடி அரசு -சொற்பொழிவு - 25.01.1931

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...