Friday, September 25, 2015

பாலியல் குற்றவாளி சங்கராச்சாரிமீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? மகளிர் ஆணையம் எச்சரிக்கை

பெங்களூரு, செப்.24_ கருநாடக மாநிலத்தில் ஹோசாநகர் ராமச்சந் திரபூர் மடாதிபதியாக உள்ள சங்கராச்சார்யா ராகவேஷ்வர பாரதி என்பவர்மீதான பாலியல் வழக்கு ஓராண்டாக கிடப் பில் போடப்பட்டுள்ளது.
மடாதிபதி ராகவேஷ் வர பாரதி, பிரேமலதா சாஸ்திரி என்பவரை அரித்துவார், ஜோத்பூர் போன்ற பகுதிகளுக்கு அழைத்துச் சென்று  பாலி யல் வன்முறை செய்தார் என்று கருநாடக காவல் துறையினரிடம் கடந்த ஜனவரியில் புகார் கொடுத் திருந்தார். கருநாடக காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்தனர். உளவுப்பிரிவினரின் விசா ரணையில் அலைபேசிகள் பதிவுகளைக் கொண்டு அவர் அளித்த புகார் உண்மை என்று கண்டு பிடிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். ரிஷிபாலுக்கு நெருக்கமானவர்
மடாதிபதிக்கு நெருக் கமாக இருந்து வருபவர் ஆர்.எஸ்.எஸ். அமைப் பைச் சேர்ந்த சேவா பாரதியின் தேசிய பொதுச் செயலாளரான ரிஷிபால் தாத்வால் என்பவர் ஆவார். அவரும் இவ்வழக் கில் முக்கிய சாட்சி ஆவார்.
ராகவேசுவர பாரதி என்கிற சாமியார்மீதான பாலியல் குற்ற வழக்கில் உரிய நடவடிக்கை எடுக் காத கருநாடக காவல் துறையின்மீது தேசிய மகளிர் ஆணையத் தலை வர் கண்டனத்தைத் தெரி வித்துள்ளார்.
தேசிய மகளிர் ஆணை யத் தலைவர் லலிதா குமாரமங்கலம் சாமியார் மீதான பாலியல் வழக்கில் கருநாடக காவல்துறை யினரின் மெத்தனப்போக் கைக் கடுமையாக கண்டித் துள்ளார். தேசிய மகளிர் ஆணை யத்தின் தலைவர் லலிதா குமாரமங்கம்  பெங்களூரு வந்திருந்தபோது, இவ் வழக்கில் சாமியார்மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்த கரு நாடக காவல்துறையினர் தொடர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் மெத் தனமாக இருந்து வந்துள் ளனர். இரண்டாம் முறை யாக பெங்களூரு வந்த மகளிர் ஆணையத் தலை வர், சாமியார்மீதான பாலியல் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய் யாத கருநாடகக் காவல் துறையினருக்கு கடும் கண் டனத்தைத் தெரிவித்துள் ளார்.
காவல்துறையினர், சாமியார்மீது உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறியதாலேயே மகளிர் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தியுள்ளது. ஆனா லும், அதன்பின்னரும் குற்ற அறிக்கைகூட தாக் கல் செய்யாமல் இருந் துள்ளனர்.
மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமார மங்கலம் கூறுகையில், இப்போது வளர்ந்து வரும் சூழ்நிலைகள் பெண்களுக்கு மாநிலத் தில் பாதுகாப்பு இல்லாத நிலையையே உணர்த்து கின்றன. குற்ற அறிக்கை அளிப்பதற்கு ஓராண்டு காலத்தை எடுத்துக் கொண்டு, ரகசியமாக வழக்கை நடத்த வேண்டிய அவசியம் என்ன? அரசி யல் தலையீடுகள் காரண மாகவே காவல்துறையினர் இவ்வழக்கில் அலட்சியத் துடன் நடந்துகொண்டுள் ளார்கள். பாதிப்புக்கு உள்ளானவர்கள் முகத்தை மூடிக்கொண்டு  செல்லக் கூடிய நிலையில், குற்ற வாளி சுதந்திரமாக நட மாடுவதா? இந்த வழக் கின்மூலம் பெண்களுக்குப் பாதுகாப்பின்றி அச்சத் துடன் இருக்கின்ற நிலையே உள்ளது என்பது தெரிகிறது. இதில் அரசி யல் தலையீடுகள்  இருப் பது என்பது வேதனை யானதாகும்.
கடந்த முறை நான் காவல்துறை உயர் அலு வலர்களை சந்தித்தபோது, கூடிய விரைவில் குற்ற அறிக்கையை அளித்து விடுவதாக உறுதி கூறினர். ஆனால், இன்றுவரை எதுவுமே செய்யவில்லை. பிணையில் வெளியே வந்துள்ள சாமியார் தன் ஆட்கள்மூலமாக பாதிக் கப்பட்ட பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வரு கிறார். பாதிப்புக்கு உள் ளான பெண்கள் என்னி டம் தங்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அச்சத்துடன் இருக்கும் நிலை உள்ளது   என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...