Wednesday, September 30, 2015

ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர் விடுதி நுழைவு வாயிலில் ஒரு பெரிய மருத்துவமனையை அமைத்துக் கொடுக்கவிருக்கும் தொண்டறச் செம்மல் அகர்சந்த் சோர்டியாவுக்கு நன்றி! பள்ளி விடுதி திறப்பு விழாவில் தமிழர் தலைவர் உரை





ஜெயங்கொண்டம், செப். 29-
 மாணவர் விடுதிக்கு முன் பாக இருக்கின்ற பகுதியில் வெகுவிரைவில் ஒரு பெரிய மருத்துவமனையை  அமைத்துக் கொடுக்க  சிறீ ஜெயின் ஜூவல்லரியின் உரிமையாளர்  தொண்டறச் செம்மல் அகர் சந்த் சோர்டியா அவர்கள் பெருந்தன்மையோடு ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். மனமார்ந்த நன்றியை அவர்களுக் குத் தெரியப்படுத்திக் கொள்கிறோம் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
22.9.2015 அன்று ஜெயங்கொண்டம் கல்விக் கிராமத்தில் உள்ள பெரியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் மாண வர் விடுதி திறப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
மிகுந்த மகிழ்ச்சியோடு நடைபெறக்கூடிய மாணவர் விடுதி திறப்பு விழா நிகழ்ச்சியில், தொண்டறச் செம்மல் ம.அகர்சந்த் சோர்டியா அவர்கள் நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று வந்து, இங்கு சிறப்பாக உரையாற்றிய - நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை, அவர் இவ்வளவு நன்றாக உரையாற்றுவார் என்று. அவர் மேடையில் உரை யாற்றியதை நான் இப்பொழுதுதான் முதன்முதலாகக் கேட் கிறேன். ஒரு நல்ல பெரு வணிகர் அவர். ஆனால்,  அதை விட மிகத் திறமையான பேச்சாளர் என்பதை இன்றைக்குக் காட்டக்கூடிய அளவிற்கு, அவருடைய உரையை மிக அழகாக முடித்தார், அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்று.
அந்த அளவிற்கு அவருடைய பற்று, அவருடைய பாசம், பெருமை, ஆற்றல் இவற்றையெல்லாம் உள்ளடக்கிய  விடுதி திறப்பாளராக வந்த தொண்டறச் செம்மல் அகர்சந்த் சோர்டியா அவர்களே,
50 ஆண்டுகாலத்திற்கும்மேல் விடுதலை வாசகர்
இந்த மிகப்பெரிய பள்ளிக்கூடத்திற்காக, நாங்கள் எல்லாம் வங்கியில் கடன் வாங்கிக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு பெரிய தொகையை அவர்கள் கொடுத்து, பள்ளிக்கூடத் திற்குப் பயன்படுத்துங்கள் என்று, தன்னுடைய வாழ்நாளில், எளிமை - சிக்கனம் - அவர் ஒன்றும் பெரிய பணக்காரர் அல்ல. அவருடைய ஓய்வூதியத்தில்தான் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார். அவரே சமைத்துக் கொள்வார்; எளிமையான வாழ்வு வாழ்பவர். அய்ம்பது ஆண்டு காலத் திற்கும்மேல் விடுதலை வாசகர் ஆவார்.
இப்படிப்பட்ட ஒரு எளிமையை வாழ்க்கையாக வைத் துக் கொண்டிருக்கும் அய்யா அவர்கள், இன்றைக்குக்கூட நம்மை ஒரு அதிர்ச்சியிலே ஆழ்த்தினார்கள். இந்தப் பள்ளிக்கூடத்தினுடைய, இந்த அமைப்பினுடைய வளர்ச்சிக்கு நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இந்த ஒரு லட்சம் ரூபாயைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று இன்றைக்கும் நன்கொடை கொடுக்கக்கூடிய பெருங் கொடையாளர் என்கிற பெருமைக்குப் பெருமை சேர்த் துள்ள ஹார்விபட்டி அய்யா மானமிகு கோ.ராமசாமி அவர்களே,இந்தப் பள்ளியில் இவ்வளவு சிறப்பான கட்டடங்கள் மற்றவை எல்லாம் வருவதற்குக் காரணமாக இருக்கக் கூடிய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்பிரமணியம் அவர்களே,அதேபோன்று, இந்தப் பள்ளியே வருவதற்குக் காரணமாக இருந்த - ஏனென்றால், இந்தப் பள்ளிக்கூடம் பழைய கட்டடமாக இருந்தது - பிறகு எல்லாவற்றிற்கும் காரணமாக இருந்த நம்முடைய இயக்கத்தினுடய சீரிய செம்மல் காமராசர் அவர்களே,மாநிலத்திலேயே சிறப்பான பள்ளிக்கூடம் என்ற சிறப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது
இவ்வளவு பெரிய சிறப்பான பள்ளி; கட்டடம் இருப்பது பெருமையல்ல; கட்டடங்களை யார் வேண்டுமானாலும் கட்டலாம், கஷ்டப்பட்டு. ஆனால், இந்த மாணவச் செல்வங் கள் அத்துணை பேரும் படிப்பிலும், மற்ற எல்லாத் துறை களிலும் பார்த்தீர்களேயானால்,  மிக நன்றாக உள்ளனர். நம் பள்ளிக்கூடம் வருகின்ற ஆண்டு மாநிலத்திலேயே சிறப் பான பள்ளிக்கூடம் என்ற சிறப்பைப் பெறக்கூடிய அள விற்கு - அதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்கிற அளவிற்கு உழைக்கக்கூடிய ஆசிரியப் பெருமக்கள். அந்த ஆசிரியர்களையெல்லாம் இயக்கக்கூடிய தலைமை ஆசிரியர். இந்தப் பள்ளியின் முதல்வர் மிகவும் திறமையா னவர். அவர் உங்களையெல்லாம் நன்றாக ஊக்கப்படுத்து கிறார். நாம் ஒரு குடும்பமாக இருக்கக்கூடிய அந்த வாய்ப் பைப் பெற்றிருக்கிறோம்.
கைதட்டுவதால், 32 நரம்புகளுக்குப்  புத்துணர்ச்சி ஏற்படுகிறது
உங்களை நீண்ட நேரம் காக்க வைத்திருந்தாலும், நீங்கள் உற்சாகமாகக் கைதட்டிக் கொண்டிருக்கிறீர்கள். மற்ற பிள்ளைகளுக்கு கைதட்டுவதே என்னவென்று தெரியாது. நான் எழுதிய வாழ்வியல் சிந்தனையில் படித்திருப்பீர்கள்; கைதட்டுவதால், 32 நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி ஏற்படு கிறது. உடலுக்கு அதுவே ஒரு பயிற்சியாகும்.
ஆகவே, எங்களுடைய பிள்ளைகள் புத்திசாலிப் பிள் ளைகள் என்பதற்கு அடையாளமாக, கைதட்டி அவர்களை யும் வரவேற்றுக் கொள்கிறார்கள். மற்றவர்களையும் வரவேற்பதற்காக முயற்சி செய்கிறார்கள் என்று சொல்கின்ற அளவில், இந்த அருமையான நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இங்கே உரையாற்றிய பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்கள் மிக நன்றாகச் சொன்னார். இந்தப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளச் சொல்லுங்கள் என்று எனக்குப் பரிந்துரை கடிதங்கள் வருகின்றன.  பல இடங்களில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகள்  சேரவில்லை என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தப் பள்ளிக் கூடத்திலோ, இடம் இல்லை என்று சொல்கின்ற நிலை வரும் பொழுது, இந்தப் பள்ளியை விரிவுபடுத்தி எல்லா மாணவர் களுக்கும் வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று நினைத்தோம்.
பெரியார் அறக்கட்டளை, பெரியார் மணியம்மை அறப் பணிக் கழகம், திராவிடர் கழக அறக்கட்டளை இவை எல்லாம் சேர்ந்து நாடெங்கும் பல கல்வி நிறுவனங்களை நாம் நடத்துகின்றோம்.
ஆனால், உள்ளபடியே என்னைப் போன்ற பெரியார் தொண்டர்களுக்கு எதில் பெரிய மகிழ்ச்சி என்றால், தஞ்சா வூரில் பல்கலைக் கழகம் உருவாகியிருக்கிறது பாருங்கள், அந்தப் பல்கலைக் கழகத்தில், இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எல்லாம் எதிர்காலத்தில் படிப்பீர்கள் என்பதில் சந்தேகமேயில்லை.
அதைவிட மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்ன வென்றால், இந்த ஜெயங்கொண்டம் பகுதியில் இப்படி ஒரு பள்ளி வளருகிறது பாருங்கள், அதில்தான் எங்களுக்கு முழு மனநிறைவு ஏற்படுகிறது. அதற்குக் காரணமான தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், ஆசிரியர்கள் எல்லோருக்கும் என்னு டைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பள்ளியில் விடுதி வேண்டும் என்றார்கள் ஏனென்றால், இந்தப் பள்ளியைச் சுற்றி 157 கிராமங்கள் உள்ளன. இந்தப் பள்ளிக்கு 33 வாகனங்கள் உள்ளன; இன்னும் வாகனங்கள் தேவை என்று சொல்கிறார்கள். நிதித் தட்டுப்பாடு - வங்கியில் கடன் வாங்கித்தான் வாகனங்களை வாங்குகிறோம். இருந்தாலும், பிள்ளைகள் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து வருகிறீர்கள். அடுத்த கட்டமாக இப் பொழுது என்ன கேட்டார்கள் என்றால், பிள்ளைகளுடைய பெற்றோர்களே எங்களிடம் வந்து, பள்ளியில் விடுதி வேண்டும் என்றார்கள்.
விடுதியில் தங்கி படித்தால், மாணவர்களுக்கு நல் வாய்ப்பாக இருக்கும் என்று நினைத்தோம். திருச்சி தங்காத் தாள் போன்று இருக்கக்கூடியவர்கள், மற்றவர்கள் எல்லாம் உதவி செய்து, இந்த விடுதி மிக அற்புதமாக அமைந்திருக் கிறது. நான் விடுதியைச் சுற்றிப்  பார்த்தேன். அந்த விடுதியில் நல்ல அளவிற்குத் தரமான உணவு, சுகாதாரம், உடற்பயிற்சி இவை அத்தனையும் தரக்கூடிய அந்த வாய்ப்புகளைப் பெற்று, நல்ல விடுதியாக இது அமையக்கூடிய வாய்ப்பு.
விடுதி வாழ்க்கையில் இன்னொரு விஷயம் என்ன வென்றால், அங்கேதான் ஜாதியில்லை; மதம் இல்லை. யார் என்ன ஜாதி என்று தெரியாது; மாணவர்கள் ஒருவருக் கொருவர் மிகவும் நட்பாகப் பழகிக் கொண்டிருப்பார்கள். இந்த விடுதி வாழ்க்கை மிக நன்றாக அமையவேண்டும். நீங்கள் சிறப்பாகப் படியுங்கள். உங்களுள் பல அய்சக் நியூட் டன், பல அப்துல்கலாம், பல விஞ்ஞானிகள், பல ஆட்சியா ளர்கள், பல மேடம் க்யூரிகள் இருக்கிறார்கள். நல்ல மலர்ந்த முகத்தோடு இருக்கக்கூடிய பிள்ளைகள் இங்கே இருக்கிறீர்கள்.
எங்களை அவருடைய உறவினராகத்தான் கருதியிருக்கிறார்கள்
இப்படிப்பட்ட அருமையான ஒரு வாய்ப்பில், நம்முடைய அகர்சந்த் சோர்டியா அவர்களை அழைத்தோம். அவர் ஒரு பிரபல வணிகர் மட்டுமல்ல, பெருங்கொடை யாளரும்கூட. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்து, இங்கே மருத்துவ முகாம் நடத்தவிருக்கிறார். அவருடைய இல்லத்தில் நடை பெறுகின்ற மணவிழாக்களுக்கெல்லாம் அவர் தவறாமல் என்னை அழைப்பார்; நானும் தவறாமல் செல்வேன். அதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அவருடைய திருமண நாள் அன்றைக்கு நான் வெளியூரில் இருப்பேன். மூன்று நாள்கள் கழித்துதான் நான் சென்னையில் இருக்கும்படியான சூழ்நிலை இருக்கும். நான் சென்னையில் இல்லை; மூன்று நாள் கழித்துதான் வருவேன் என்று சொன்னால், அன் றைக்கே வந்தால் போதும் என்பார்.
இந்த முறை அவருடைய திருமண நாள் முடிந்து மூன்றா வது நாள் நான் சென்றேன். அப்படி நான் செல்லும்பொழுது, அவருடைய உறவினர்கள் எல்லோரும் இருந்தார்கள். அவர் சொன்னார், மூன்றாவது நாளும் நிகழ்ச்சியை நடத்து வோம். அந்த நிகழ்ச்சிக்கு எங்களுடைய உறவினர்களை மட்டும்தான் அழைப்போம் என்றார். எங்களை அவருடைய உறவினராகத்தான் கருதியிருக்கிறார்கள்.
ஈதல் இசைபட வாழ்தல்!
அவர் சார்ந்த சமூகம் இருக்கிறதே, மிகப்பெரிய ஒரு சீர்திருத்தத்திற்கு முன்னோடி. மகாவீர் அவர்கள் புத்தருக்கும் முன்னோடி. தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவு பெரிய பகுத்தறிவுக் கருத்தைச் சொன்னாரே - அதே அளவிற்கு அந்தப் பகுத்தறிவுக் கருத்தை புத்தருக்கும் முன்பு சொன்ன ஒரு பெரிய மாவீரன் இந்திய வரலாற்றில் இருக்கிறார் என்று சொன்னால், அது மகாவீர் அவர்கள்தான். அந்த சமண அமைப்பு இருக்கிறது பாருங்கள், அது மிகப்பெரிய வரலாற்றை உள்ளடக்கியதாகும். அதனுடைய தத்துவத்தை இவர்கள் சிறப்பாக தன்னுடைய வாழ்நாளில் கடைபிடிக் கிறார்கள். ஈதல் இசைபட வாழ்தல் முறையில்.
அதேபோன்று அவர்கள் நிறைய சம்பாதித்து, அதை தனக்கு மட்டும் வைத்துக் கொள்ளாமல், தன்னுடைய குடும்பத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் அவர்கள் எத்தனையோ அறப்பணி களையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களை நாம் அழைத்த உடன், அவர்கள் இங்கே வந்து சிறப்பாக உரையாற்றினார்கள். இங்கே வருவதற்கு முன்பு, நம்முடைய இளந்திரையன் போன்ற நண்பர்கள்மூலம் கேட்டு, மாணவர் விடுதியைத் திறக்க வைத்திருக்கிறீர்கள், நான் இந்த விடுதிக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல் லுங்கள், நான் அதனைச் செய்கிறேன் என்று சொன்னதாகத் தோழர்கள் என்னிடம் சொன்னார்கள்.
வெகு விரைவில் ஒரு பெரிய மருத்துவமனை உருவாக இருக்கிறது
ஏற்கெனவே விடுதியைப் பொறுத்தவரையில் எல் லாமே செய்திருக்கின்ற நிலையில், அடுத்து உங்களுக் கெல்லாம் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், உங்க ளுக்கும் பயன்படும், பொதுமக்களுக்கும் பயன்படும்; நம் முடைய எல்லா நிறுவனங்களுக்கும் முன்பாக, பெரியார் மணியம்மை மருத்துவமனை ஒன்று இருக்கும். அதே போன்று, இந்த விடுதிக்கு முன்பாக இருக்கின்ற பகுதியில் வெகுவிரைவில் ஒரு பெரிய மருத்துவமனை உருவாக இருக் கிறது. அந்த மருத்துவமனையில் நம்முடைய பிள்ளைகளுக் கும், ஆசிரியர்களுக்கும், மற்றவர்களுக்கும் உடல்நலப் பிரச்சினை என்றால், அங்கே பார்த்துக் கொள்ளலாம்; பொதுமக்களும், உள்ளூர் மக்களும் அந்த மருத்துவ மனையைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
அந்த மருத்துவமனையை அமைத்துக் கொடுக்க அய்யா அகர்சந்த் சோர்டியா அவர்கள் பெருந்தன்மை யோடு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அதற்காக நம் முடைய மனமார்ந்த நன்றியை அவர்களுக்குத் தெரியப் படுத்திக் கொள்கிறோம்.
எனவே, அடுத்த கட்ட வளர்ச்சி இது. கொஞ்ச காலத்தி லேயே அந்த மருத்துவமனை அமையவிருக்கிறது. மிகச் செறிவாக, அழகாக நல்ல மருத்துவர்கள் காலையிலும், மாலை யிலும் இருக்கக்கூடிய வாய்ப்புகளை உருவாக்குவார்கள். பெரியார் மருத்துவ அணியினுடைய இயக்குநர் கவுதமன் போன்றோர் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.
ஆகவே, உங்களுக்கு விடுதி மட்டும் வரவில்லை. அடுத்து ஒரு மருத்துவமனையும் வரவிருக்கிறது என்கிற மகிழ்ச்சியான தகவலைக் கூறி, உங்களை நீண்ட நேரம் காக்க வைத்தமைக்காக பொறுத்தருளவேண்டும் என்று கேட்டு, ஆசிரியப் பெருமக்களுடைய உழைப்புதான் மாணவர்களை  சாதனை படைக்க வைத்திருக்கிறது. தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம் போன்றவற்றை மாணவர்களாகிய நீங்கள் வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
எடை போட முடியாத தலைவர் தந்தை பெரியார் அவர்கள்
பிள்ளைகளின் எடைகூட  அவ்வளவு இல்லை; ஆனால், அவர்கள் வாங்குகின்ற பதக்கங்களின் எடை அதைவிட அதிகமாக இருக்கிறது என்று சொன்னால், எடை போட முடியாத தலைவர் தந்தை பெரியார் அவர்கள், அவருக்கும் எடை போட்டார்கள்; அதுபோல  சிறப்பான வகையில் பெரி யாரின் பேரப் பிள்ளைகளாக, பெரியார் பிஞ்சுகளாக சிறப் பாக வந்து, எதிர்காலத்தில் விஞ்ஞானிகளாக, மிகப்பெரிய அளவிற்கு நோபல் பரிசு பெறக்கூடியவர்களாக நீங்கள் வரவேண்டும் என்று கேட்டு, வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!
நம்முடைய பெருங்கொடையாளர்களுக்கு எங்களு டைய இதயமார்ந்த நன்றியையும் அனைவரின் சார்பாகவும் தெரிவித்து அமைகிறேன்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...