Tuesday, September 22, 2015

சென்னை-வில்லிவாக்கத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற 345ஆவது திராவிடர் விழிப்புணர்வு மாநாடு

சென்னை-வில்லிவாக்கத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற  345ஆவது திராவிடர் விழிப்புணர்வு மாநாடு
சென்னை, செப்.21_ வட சென்னை மாவட்ட திரா விடர் கழகத்தின் சார்பில் திராவிடர் விழிப்புணர்வு 345ஆவது வட்டார மாநாடு 18.9.2015 அன்று மாலை சென்னை_ வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
சுயமரியாதை சுடரொளிகள் தியாகராசன், குண சீலன், கடலூர்  கேசவன் நினைவரங்கத்தில் மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தலை மையில் நடைபெற்றது.
வடசென்னை மாவட்ட மகளிரணித் தலைவர் கு.தங்கமணி வரவேற்றார். வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, செய லாளர் வி.பன்னீர்செல்வம், மாநில தொழிலாளரணி இணை செயலாளர் பெ.செல்வராசு, பொதுக்குழு உறுப்பினர்கள் தி.வே.சு.திருவள்ளுவன், வெ.மு.மோகன் முன்னிலை வகித்தனர்.
கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, மாநில மகளிர் பாசறை செயலாளர் டெய்சி மணி யம்மை உள்பட கழக நிர்வாகிகள் பலரும் உரை யாற்றினர்.
பகுத்தறிவு கருத்துப் பொழிவாக தமிழர் தலைவர் உரை
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டு சிறப்பு ரையில் பழமையான நினைவுகளை எடுத்துக்காட்டி உரை ஆற்றினார். இங்கு வரும்போது பழைய நினைவுகளோடு வந்தேன்.
தந்தை பெரியார் காலத்தில் கழகத்தின் பாசறையாக விளங்கிய பகுதி சென்னை வில்லிவாக்கம் பகுதி என்றும், சுயமரியாதைச் சுட ரொளி தியாகராசன் வழியில் அவர் வாழ்விணையர் பாப்பம்மாள், குணசீலனுக்குப்பிறகு அவர் வாழ் விணையர் தங்கமணி மற்றும் அவர் குடும்பத்தினர்,
அன்பாக உரிமையுடன் தம்பி என்று என்னை அழைப்பவர் கடலூர் கேசவன். அவருடைய பேரன் உள்ளிட்ட அனைவருமே இயக்கத்தில் ஈடுபட்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள் என்பதை  பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
அரசமைப்பு சட்டத்தைக் கொளுத்தும் போராட் டத்தில் கலந்துகொண்டு  சிறைச்சாலை சென்றவர்கள் துரைக்கண்ணு, அயன்புரம் பக்தவச்சலம் என்று நீண்ட பட்டியலையே சொல்லலாம். அப்படி இயக் கத்தில் தீவிரமாக செயல்பட்ட பகுதி வில்லிவாக்கம் பகுதி. நம்முடைய இயக்கம் அடிப்படையில் பிரச்சார இயக்கம்.
ஆண்டுமுழுவதும் கூட்டங்கள், கருத்தரங் கங்கள், விடுதலை ஆண்டு விழா மலர் வெளியிடுவது என்று அனைத்துமே பிரச்சாரத்துக்காகத்தான். பெரியார் சொன்னதை நாங்கள் சொல்லி வந்தாலே எங்கள் வாழ்நாள் போதாது.
பலநேரங்களில் தந்தை பெரியார் கூறியதையே கூறினால் விளக்கம் கிடைத்துவிடும். பெரியார் திடலில் 21 அடி சிலையே பிரம்மாண்டமாக இருக்கிறது. திருச்சி சிறுகனூரில் அமையக் கூடிய 135 அடி உயர பெரியார் சிலைக்கு முன்னோட்டமாக இது அமைந்திருக்கிறது. அந்த சிலையின் பீடத்திலேயே பெரியார் கூறிய வாசகம் இருக்கிறது.
சிலை மணி அடிப்பதற்கு அல்ல.
பெண்ணடிமை, தீண்டாமை, ஜாதி, மதம் ஒழிய வேண்டும் என்கிற விளக்கங்கள் உள்ளன.
பிரச்சாரம்! பிரச்சாரம்!! பிரச்சாரம்!!!
பிறக்காத கடவுள் என்று பிறப்பு, இறப்பு இல்லை, கண்ணுக்குத் தெரியாதவர் என்று சொல்லி, கடவுள் பிறந்ததாக ஒரு நாளைச் சொல்கிறான். பிறக்காத கடவுளுக்கு பிறந்த நாள் என்று  விநாயகன் சதுர்த்தி,  ராம நவமி, கோகுலாஷ்டமி, கந்தன் சஷ்டி என்கிறான்.
இவை யாவும் தமிழா? இதிலிருந்துதமிழருக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரியவில்லையா? இவைகளை விட்டுவிட்டால் கடவுளை மறந்து விடு வார்கள் என்று திருவிழா, பிரச்சார முறைகளாக மட்டுமன்றி பார்ப்பனருக்கு வருவாயும் பார்க் கிறார்கள்.
இதைவைத்து அவர்கள் பிரச்சாரம் செய் கிறார்கள்.  எனக்கு பிறந்த நாள் விழா என்பது பிரச் சாரம் என்று தந்தை பெரியார் கூறியுள்ளார். ராமன் பிறந்த நவமி, கிருஷ்ணன் பிறந்த அஷ்டமியில் எதுவும் செய்யக்கூடாது என்றால், கடவுள் பிறந்த நாள் ரொம்ப கேவலமான நாள், நல்ல நாள் இல்லை என்கிறான்.
தமிழர்கள் தோளில் துண்டு போடவும், வேட்டி கட்டவும், தாய்மார்கள் மாராப்பு உடுத்திக்கொள்ளவும் யார் காரணம்? போராடித்தான் உரிமைகளைப் பெற வேண்டியிருந்தது. நல்ல உடை உடுத்தக் கூடாது என்று மனுதர்மம் கூறுகிறது. நல்ல பெயர் வைக்கக்கூடாது என்றார்கள்.
இளைஞர்களுக்கு பெரியார் கொள்கை அறிந்து கொள்வது முக்கியமானது. மனுதர்மம், அரசமைப்பு, ஒருகுலத்துக்கு ஒரு நீதி என்று இருந்தது. பெண்கள் வாழ்நாள் முழுவதும் அடிமையாக்கப்பட்டனர். சூத் திரர்கள் மற்றவர்களுக்கு அடிமை என்றால், பெண்கள் எல்லா ஜாதியிலும் அடிமையாக்கப்பட்டார்கள்.
பிரம்மாவின் தலையில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்திரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன், மேலும் அவர்ணஸ்தர்கள் (OutCaste) என்று தொடக் கூடாதவர்கள், தீண்டத்தகாதவர்கள் பிரித்து வைத்தான்.
துப்புரவுப்பணிகளை செய்பவர்களின் பணி என்பது அர்ச்சகர் பணியைவிட ஆயிரம் மடங்கு மேலான பணியாகும். துணி வெளுப்பவர்கள், செருப்பு தைப்பவர்கள், சவரம் செய்பவர்கள்,
துப்புரவு பணி செய்பவர்கள் என்று அத்தியாவசியமான (Essential Services) பணிகளை செய்பவர்களை கீழ் ஜாதியி னராகவும், எந்த உழைப்பும் கொடுக்காமல் ரோடு ரோலர்போல் கொழுத்துக்கொண்டு இருப்பவனை மேல்ஜாதி என்றும் வைத்துள்ளார்கள். எந்த நாட்டில் இந்தக் கொடுமை இருக்கும்? இன்றைக்கு இந்த நிலைமை உண்டா?
ஜாதி அடிப்படையில் ஒதுக்கீடு என்றால், எந்த  நிலையில் வைக்கப்பட்டிருக்கிறானோ அந்த அடிப் படையில் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதற்கே.
சுதந்திரமடைந்து 65 ஆண்டுகள் ஆனபின்னும் மலம் அள்ளுகிற நிலை உள்ளதே. மோட்சத்துக்கு டிக்கட் கொடுக்கின்ற வேலையில்தானே பார்ப் பனர்கள் இருக்கிறார்கள்.
மனுதர்மத்தில் சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் அறிவை, கல்வியைக் கொடுக்கக் கூடாது என்று உள்ளது.
வௌ¢ளைக்காரன்கூட கருப்பர் இனத்தவரை (நீக்ரோ) இன பேதத்துடன் நடத்தினான் என்றாலும், படிக்கக் கூடாது என்று சொல்லவில்லை.
அரசமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் செய் வதற்கு காரணமானவர், சமூக நீதி நிலைநாட்டியவர் தந்தை பெரியார் ஆவார். கொள்கையை இடை விடாது பரப்பவேண்டும்.
இடஒதுக்கீடு கூடாது என்ற பார்ப்பனர்களே எங்களுக்கும் இட ஒதுக்கீடுவேண்டும் என்று கோரி பார்ப்பனர்கள் சார்பில் எஸ்.வி.சேகர் பெரியார் திடலில் எங்களை வந்து சந்தித்தார். எல்லார்க்கும் எல்லாம் என்பதற்குதான் இட ஒதுக்கீடு என்று இட ஒதுக்கீட்டு வரலாறை எடுத்துச்சொன்னோம். நீதிக்கட்சி காலத்தில் பார்ப்பனருக்கு இருந்த இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டியவர்கள் பார்ப்பனர்கள். இப்போது கேட்கிறார்கள்.
மாற்றம் மாற்றம் என்கிற சொல் இப்போது பலரிடமும் சிக்கிக்கொண்டுள்ளது. இருப்பதை மாற்றுவது என்கிறார்கள்.
மாற்றம் என்று கூறுவது ஏமாற்றத்துக்குத்தான் என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதே திராவிடர் கழகம் சொன்னது.
குஜராத்தில் 1984ஆம் ஆண்டில் இட ஒதுக்கீட்டை எதிர்த்தார்கள். இப்போது அதே வகுப்பினர் இடஒதுக்கீட்டைக் கோருகிறார்கள். படேல் சமூகத்து பெண்கள் போராடுகின்றனர். குஜராத்தில் இட ஒதுக் கீடு கோரும் போராட்டம். பெரியார் குஜராத்துக்கு சென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் பக்தவச்சலம் காலத்தில் 1965ஆம் ஆண்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போதுதான் இராணுவம் வந்தது.
குஜராத்தில் இராணுவம் செல்லக்கூடிய நிலையில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக சட்டமன்ற உறுப்பினரை பெண்கள் முற்றுகையிட்டுள்ளார்கள். தொகுதிக்குள் அரசு நிகழ்ச்சியிலிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இது போன்று 6 இடங்களில் பிரச்சினைகள் நடந்துள்ளன. இதுதான் குஜராத் மாடலா?
கிரிக்கெட் விநாயகர், நரமுக (மனித முக) விநாயகர், பெண் பிள்ளையார்_கணேசசிறீ என்றெல்லாம் புதிதுபுதிதாக சொல்கிறார்கள்.
கடவுளுக்கு ஏன் பூணூல்-? ஜாதி, மத வெறிகள் ஒழிக்கப்பட வேண்டும். அடுத்த தேர்தலைவிட, அடுத்த தலைமுறை முக்கியம்.
_இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர்தம் உரையில் குறிப்பிட்டார்.
கலந்துகொண்டவர்கள்
இம்மாநாட்டில் கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா.சரவணன், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் செ.தமிழ் சாக்ரட்டிஸ்,
சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை, வடசென்னை மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், துணைத் தலைவர் கருங்குழி கண்ணன், துணை செயலாளர் செம்பியம் இராம லிங்கம், மாவட்ட மகளிரணி செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, சொ.அன்பு, இளைஞரணித் தலைவர் அன்புச்செல்வன், தளபதி பாண்டியன்,
பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால், செயலாளர் வெங்கடேசன், அமைப்பாளர் இராமு, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, செயலாளர் இல.குப்புசாமி,
மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தய்யன், செயலாளர் அனகை ஆறுமுகம், பொழிசை கண்ணன், காரைக்குடி மாவட்டச் செயலாளர் பிராட்லா, தென் சென்னை மாவட்டத் துணை செயலாளர் கோ.வீ.ராகவன், அமைப்பாளர் செங்குட்டுவன், அரும்பாக்கம் தாமோ தரன், மதுரவாயல் பாலமுரளி, தென் சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் கு.செல்வேந்திரன்,
செயலாளர் சண்முகப்பிரியன், பொறியாளர் குமார், ஆவடி மணிகண்டன், இரணி யன், வழக்குரைஞர் ஜெ.துரைசாமி, சி.காமராசு, கொடுங்கையூர் தங்கமணி, அம்பத்தூர் சிவக்குமார், புழல் ஏழுமலை,  திருவொற்றியூர் கணேசன், பூவிருந்தவல்லி நகர செய லாளர் பெரியார் மாணாக்கன், பிழைபொறுத்தான், மகேஷ், சுரேஷ், லோகேஷ், சக்திவேல், இசையின்பன், பெரியார் களம் இறைவி, சி.வெற்றிசெல்வி,  சுமதி, உமா, தனலட்சுமி,
முனியம்மாள், ஜெயந்தி, பூவை செல்வி, நதியா, சீர்த்தி, ரமணி, திலகவதி, தமிழரசி, வெண்ணிலா, எழில்,  புழல் மாலதி, ஆவடி நதியா, கற்பகம், சசிகலா, த.மரகதமணி, பசும்பொன் செந்தில் குமாரி, பெரியார் பிஞ்சுகள் பகுத்தறிவு, ஜெனிமா மற்றும் இளைஞரணியினர், மகளிரணித் தோழியர், தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
வில்லிவாக்கம் கு.வீரமணி நன்றி தெரிவித்தார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...