Tuesday, June 23, 2015

மீண்டும் போலியோவா?

உத்தரப்பிரதேச மாநிலம், பரித்பூர்(பரேலி மாவட் டம்) பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தை களின் ரத்தமாதிரியைப் பரிசோதித்த போது போலியோ வைரஸ் கிருமி தாக்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாவட்டத்தில் உள்ள மீரஞ்கஞ்ச், பரித்பூர், நவாப்கஞ்ச், பஹேரி, கேசர்பூர், ரிதோரா, காலாப்பூர் போன்ற தாலுக்காக்களில் உள்ள குழந்தை களிடமிருந்து பெற்ற மாதிரிகளில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உடலில் போலியோ வைரஸ் கிருமித் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதை உறுதி செய்ய அனைத்து மாதிரிகளும் மும்பை மற்றும் அய்தராபாத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறிய தகவல் அதிர்ச்சியளிக்கிறது.  கடந்த வாரம் பரேலி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கால்வலி, முடக்குவாத பாதிப்பு, போன்றவைகள் உள்ளதாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இது குறித்து உடனடியாக உலக சுகாதார அமைப்பிற்கு தகவல் அளிக்கப்பட்டுவிட்டது.  தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் 6 சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு வருகை தந்தது, அவர்கள் மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறும் குழந்தைகளை முழுமையாக பரிசோதனை செய்தபோது அந்தக்குழந்தைகளை போலியோ வைரஸ்  கிருமி பாதித்த அடையாளம் உள்ளதாக தெரிவித்தனர். 
இதனை அடுத்து மாவட்டம் முழுவதிலுமுள்ள 15 வயதிற்குட்பட்ட ஆயிரம் குழந்தைகளிடம் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று பரிசோதனை நடத்தினர். இந்த சோதனையில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ வைரஸ் கிருமித்தொற்று இருப்பது தெரிய வந்தது. தற்போது 460 சோதனை முடிவுகள் வெளியாகி யுள்ளன. இதில் 200 மாதிரிகளில் போலியோ வைரஸ் கிருமித் தொற்று இருப்பதாக தெரிகிறது. இன்னும் 600-க்கும் மேற்பட்ட மாதிரிகளின் சோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது என்று தெரிகிறது.
நிலைமை இப்படி இருக்க, மத்திய சுகாதாரத்துறை வேறு மாதிரி அறிக்கை வெளியிட்டுள்ளது, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் பரேலி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குக் கால் வலி மற்றும் வலுவின்மை போன்ற காரணங்களால் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இவர்களுக்குப் போலியோ நோய் தாக்கி இருக்குமா என்று உறுதியாக கூறமுடியாது. இருப்பினும் சிகிச்சையை மேற்கொள்ளவும் மேலும் இதே போல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீண்டும் பரிசோத னைக்கு ஆட்படுத்தவும் நடவடிக்கைகள் மேற் கொள் ளப்பட்டு வருகின்றன.  இது யாரை ஏமாற்றும் வேலை?  2010-ஆம் ஆண்டு இதே மாவட்டத்தில் உள்ள பமூரா என்ற கிராமத்தில் இறுதியாக போலியோ நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக் கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகள் போலியோ நோய் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனால் இந்தியாவை போலியோ நோய் இல்லாத நாடாக உலக சுகாதார அமைப்பு  அறிவித்திருந்தது.   
மோடி அரசு ஆட்சிக்கு வந்தில் இருந்து சுகாதாரத் துறைக்குத் தேவையான நிதியை குறைத்து விட்டது. முக்கியமாக தொற்றுநோயான எலும்புருக்கி நோய் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை நிறுத்திவைத்தது இதேபோல் போலியோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போலியோ தடுப்பு மருந்து குறித்த தெருமுனைப் பிரச்சாரங்களை முழுமையாக தடை செய்து விட்டது.   
ஆரம்ப சுகாதார நிலையங்களில் போலியோ நோய் தடுப்பு மருந்துகளுக்கு என்று இருந்த சிறப்பு மருத்துவப் பிரிவை ரத்து செய்து பொது மருத்துவ நோயாளி களுக்கான சிகிச்சையாக மாற்றப்பட்டது.இதனால் போலியோவிற்கென்று தனிப்பட்ட கவனம் மருத்துவர் களால் செலுத்த முடியாமல் போனதால் இந்த நிலை உருவாகியுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 
  நாடு முழுவதும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் அங்கன்வாடிகளுக்கான நிதியை மாநிலங்களே திரட்டிக் கொள்ள வேண்டும் என்று கூறி நிதிநிலை அறிக்கையில் நிதியை வழங்காமல் நிறுத்தியது மோடி  அரசு. ஏற்கெனவே குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் அரியானா போன்ற மாநிலங்களில் ஊட்டச்சத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில் உபி-யில் போலியோ நோய் பரவும் செய்தி போலியோ இல்லாத நாடு இந்தியா என்ற நிலையில் மாற்றம் வர வாய்ப்புள்ளது.
இவ்வளவு பிரச்சினைகள் நடந்த பிறகும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நாடா, பிகார் தேர்தலில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளார். பிரதமர் மோடியோ யோகாவில் மூழ்கியுள்ளார். மக்கள் நல் வாழ்வுத் துறைக்காக மற்ற மற்ற நாடுகள் ஒதுக்கும் தொகையோடு ஒப்பிடும் பொழுது இந்தியா பின் தங்கியே உள்ளது. சீனா 3%, ருசியா 3.8%, நேபாளம்கூட 2.2%, ஆனால் இந்தியாவிலோ வெறும் 1.3% சுகாதாரத்துக்காக ரூ.35,163 கோடியிலிருந்து ரூ.29.653 அரசு குறைத்து விட்டது.
ஒரு நாட்டின் முதுகெலும்புப் பிரச்சினையில் எவ்வளவு அலட்சியமாக பிஜேபி அரசு இருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாமே. உயிர் காக்கும் மருந்துகளின் விலையும் இந்த ஆட்சியில் பல மடங்கு உயர்த்தப்பட்டு விட்டது.
அதே நேரத்தில் கங்கையைச் சுத்தப்படுத்த 20 ஆயிரம் கோடி ரூபாயைக் கொட்டி அழப் போகிறார்களாம். நோய் வருவது அவாள் அவாள் தலையெழுத்து - கர்மப் பலன் என்று இந்துத்துவாவின் தத்துவார்த் தத்தை சொன்னாலும், சொல்லுவார்கள் - யார் கண்டது?
போலியோ நோய் இல்லாத நாடு என்ற தைரியத்தில் இந்திய மக்கள் நிம்மதியாக இருந்தனர். மோடி ஆட்சியில் அதற்கும் ஆபத்து வந்து விட்டது. இது ஓர் அபாயகரமான நிலையே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...