Monday, April 13, 2015

ஜெயேந்திரரும் - சு.சாமியும்

பார்ப்பனர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் அவர்களின் தலைவர்களைப் பாருங்கள் - அதன் பின் முடிவுக்கு வாருங்கள் பார்ப்பனர்களின் யோக்கியதைபற்றி.
பார்ப்பனர்களுக்கெல்லாம் தலைவராக இருக்கிற சங்கராச்சாரியாரை எடுத்துக் கொள்ளலாம். பார்ப்பனர் மாநாடுகளுக்கெல்லாம் சென்று தலைமை வகிப்ப வர்கள் ஆயிற்றே. கடவுளுக்கு மேல் பிராமணன் என்று காஞ்சி சங்கராச்சாரியார் கொலை வழக்குப் புகழ்   ஜெயேந்திர சரஸ்வதி சொல்ல வில்லையா?
1992 டிசம்பர் 6 - அம்பேத்கர் நினைவு நாளைத் தேர்வு செய்து சங்பரிவார்க் கும்பல், நிர்வாண சாமியார்கள், பிஜேபி தலைவர்கள் தலைமை தாங்க - சிறுபான்மை மக்களின் 450 ஆண்டு கால வழி பாட்டுத்தலமான பாபர் மசூதியை அயோத்தியில் இடித்தவர்கள் அல்லவா! உலகமே கைகொட்டி நகைக்கவில்லையா?
இந்தக் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டுள்ள எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி. செல்வி உமாபாரதி ஆகியோர் மத்திய அமைச்சர் பதவிகளில் நீடிக்கக் கூடாது; அவர்கள்மீது கிரிமினல் நடவடிக்கை  எடுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புப் புயலைக் கிளப்பிய நேரத்தில், இந்தக் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன கூறினார் - நினைவிருக்கிறதா?
அயோத்தியில் கட்டடத்தை இடித்தது கிரிமினல் நடவடிக்கை என்று கூற முடியாது. இதற்காக மத்திய அமைச்சர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை என்று (தினமணி 27.11.2000) என்று கூறினாரா இல்லையா?
ஆக வன்முறைவாதிகள் தான் இந்த நாட்டின் சங்கராச்சாரியார்கள் என்பதற்கு இந்த ஒரு சாட்சியம் போதாதா?
முற்றும் துறந்த முனிவர்கள் நாட்டில் வன்முறையை மாய்த்து, நன்முறையை உபதேசிக்க வந்த உத்தமர்கள் என்பதுபோல இந்தக் காவி வேட்டிகள்மீது பிரச்சாரம் செய்து வைத்துள்ளனரே -  அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனரே - அது எந்த அளவுக்குப் பிரச்சாரப் பலத்தால் உண்மைக்கு மாறாகக்  கட்டப்பட்டது என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்று போதாதா?
ஒரு மதக்காரன் இன்னொரு மதக்காரனைச் சீண்டுவதும், இன்னொரு மத வழிபாட்டுத் தலத்தை வன்முறையால் இடித்துத் தள்ளுவதும் தான் மதம் காட்டும் வழியா? இறை நம்பிக்கை இட்டுச் செல்லும் பாதையா?
இன்னொரு மதக் கடவுள் என்பதை ஏற்றுக் கொள்ளாத நிலையில் அந்த மதக்காரன் பார்வையில் இந்த மதக்காரர்கள் நாத்திகர்கள் தானே?
நாத்திகர்கள் எந்தக் கோயிலை இடித்தார்கள் - சிலைகளை  திருடினர்? எந்த மதக்காரனைத் தாக்கினர் என்று விரலை மடக்கிட முடியுமா?
அன்றைக்கு பாபர் மசூதியை வெறும் கட்டடம் என்று காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சொன்னார் என்றால், இன்றைக்கு அவரது சீடரும், அரட்டைக் கச்சேரி அடாவடிப் பேர்வழி பிஜேபியின் தேசியக் குழு உறுப்பினருமான சுப்பிர மணிய சுவாமி என்பவர் அஸ்ஸாமுக்குச் சென்றிருந்த போது என்ன சொல்லியிருக்கிறார்?
குவாஹாட்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற இந்த சு.சாமி மசூதி  என்பது வழிபாட்டுத்தலமல்ல, அது கட்டடம் மட்டும் தான், அதை எந்த நேரத்திலும் இடிக்கலாம் என்று சொல்லி இருக்கிறாரே!
இதுகுறித்து அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் தருண் கோக்காய் கண்டனம் தெரிவித்துள்ளார்; தொடர்ந்து இவ்வாறு இவர் பேசினால் அஸ்ஸாமுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். அதோடு நின்றுவிடக் கூடாது; இந்த பேச்சின் மீது உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மத்தியில் பிஜேபி அதிகாரத்துக்கு வந்துள்ளதாலும், இந்தியாவில் பல மாநிலங்களிலும் பிஜேபி காவி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளதாலும், ஆணவப் போதை தலையில் ஏறி அடவாடித்தனமாகப் பேசி வருகின்றனர். வன்முறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
1992இல் பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் 23 ஆண்டுகளுக்குப் பிறகும் தண்டிக்கப் படாததும் இத்தகைய அடாவடித்தனப் பேச்சுக்கும், வன்முறை வெறியாட்டங்களுக்கும் மிக முக்கிய காரணமாகும்.
இதில் என்ன வெட்கக்கேடு தெரியுமா? இவ்வளவுப் பெரிய குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பிற்காலத்தில் துணைப் பிரதமர் ஆகிடவில்லையா? மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் அலங்கரிக்க வில்லையா?
மிகப் பெரிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதுதான். மக்கள் மத்தியிலே சட்டத்தின் மீதான நம்பிக்கை குறைவதற்கு முக்கிய காரணமாகும்.
அதுவும் சு.சாமி தொடர்ந்து சிறுபான்மையினர்மீது அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார் - வன் முறையைத் தூண்டியும் வருகிறார்! இதற்கொரு முடிவு கட்டப்பட வேண்டும். அஸ்ஸாம் மாநில அரசு உரிய நடவடிக்கையை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...