Friday, February 13, 2015

காதலர் தினத்தை ஆதரிப்போம்- திராவிடர் கழக மாணவரணி அழைப்பு

காதலர் தினத்தை ஆதரிப்போம்!
 
பாசிஸ்டுகளின் எதிர்ப்பை முறியடிப்போம்!
 
மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் திராவிடர் கழக மாணவரணி அழைப்பு



மனித இனத்தின் இயற்கை உணர்வான காதல் என்பது, இரு தனி மனிதர்களுக்கிடையிலான அன்புப் பரிமாற்றமாக மட்டுமில்லாமல், இந்தியாவைப் பொறுத்தளவில் ஜாதி, மதம் போன்ற அடிப்படைவாதத்தைத் தகர்க்கும் மனித நேயக் கருவியாகத் திகழ்கிறது. 

இதனாலேயே ஜாதி-மதங்களைக் காப்பாற்ற நினைக்கும் ஜாதீயவாதிகளும் மதவாதிகளும், பாசிஸ்டுகளும் மதத்தின் பெயராலும் கலாச்சாரத்தின் பெயராலும் காதலர் தினத்தை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு ஆங்காங்கே வன்முறையிலும், அருவருக்கத்தக்க செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோம் என்று வெளிப்படையாக வன்முறையைத் தூண்டும் அளவுக்கு அறிவிப்பு விடுக்கும் அசட்டுத் துணிவை இன்றைய சூழ்நிலை அவர்களுக்குத் தந்திருக்கிறது. இது மிகப்பெரிய ஆபத்தான போக்காகும். மனிதநேயத்தில் அக்கறை கொண்டோரும், சமூக நல்லிணக்கத்திலும், சமூக அமைதியிலும் பற்றுக் கொண்டோரும் இந்தப் போக்கைக் கண்டிக்க முன்வரவேண்டும்.

காதலர் தினத்தை எதிர்ப்பதாகக் கூறி நடக்கும் இத்தகைய பாசிச வன்முறைப் போக்குக்கு, முற்போக்கு இயக்கங்களும், கல்லூரி மாணவர் அமைப்புகளும், அமைப்புகளைச் சாராத பல்வேறு கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும்.

 காதலர்கள் மீதான வன்முறைகளிலிருந்து அவர்களைக்  காப்பதற்கான முயற்சிகளிலும், அத்தகைய வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் மனிதநேயமும் சமூக அக்கறையும் கொண்டோர்,  மாணவர்கள், இளைஞர்கள்  ஒன்றிணைந்து ஈடுபடவேண்டும் என்று திராவிடர் கழக மாணவரணி அழைப்பு விடுக்கிறது.

இந்த உணர்வோடு தங்களைப் பதிவு செய்துகொள்ளவிரும்புவோர் 9176757084, 8807541920  என்ற எண்களில், அல்லது savelove.tn@gmail.com    என்ற மின்னஞ்சலில் தங்களது பெயரைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
மாநில செயலாளர்
9444210999
த.சீ.இளந்திரையன்
மாநில இணைச் செயலாளர்
9750134599

த.அஜிதன்
மாநில துணைச் செயலாளர்
9789775497



No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...